பழமொழி நானூறு : 08

“நல்லார் நலத்தை உணரின் அவரினும்
நல்லார் உணர்ப பிறர் உணரார் -நல்ல
மயில் ஆடும் மா மலை வெற்ப மற்று என்றும்
அயிலாலே போழ்ப அயில்”

( அயில் என்றால் இரும்பு என பொருள், மேலைநாட்டுக்கு இந்த வார்த்தை அயஸ் என்றாக மாறி சென்று பின் அயர்ண் என்றானது )

மயில்கள் ஆடும் மலைநாட்டை சேர்ந்த ஒருவனுக்கு புலவர் இப்பாடலில் போதிக்கின்றார்

அழகான மயில்கள் ஆடும் நாட்டை சேர்ந்தவனே, இரும்பை இன்னிரு வலுவான‌ இரும்பால்தான் பிளக்க முடியும் அல்லது கூராக்க முடியும் (போழ்தல்), அப்படி நல்ல அறிவானவர்களை அவர்களை விட நல்ல அறிவு கொண்ட நல்லவர்களால்தான் புரிந்து கொள்ளமுடியும்

தீயவர்களால் நல்லவர்களை புரிந்து கொள்ளவே முடியாது என்பது பாடலின் பொருள்