ஆச்சர கோவை : 71
“இறைவர் முன் செல்வமும் கல்வியும் தேசும்
குணனும், குலம் உடையார் கூறார் – பகைவர்போல்
பாரித்து பல் கால் பயின்று”
அரசன் முன்னால் தன் செல்வம், கல்வி அறிவு, அழகு, தன் குணம், தன் குலம் ஆகியவற்றை பற்றி பேசவே கூடாது. பகைவனிடம் தன்னைபற்றி பேசுவதுபோல் நினைந்து மிக எச்சரிக்கையாக பேசவேண்டும் என்பது பாடலின் பொருள்
அதாவது அரசனிடம் தற்பெருமையும் தன் நிலைபற்றியும் எதுவுமே தானாக பேசகூடாது,அரசன் கேட்பதற்கு மட்டும் கவனமாக பதில் சொல்ல வேண்டும் என்பது புலவர் சொல்லும் தத்துவம்