ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 180 – தூய ஒளிகாண்டல் / குறள் : 02

“தெளிவாய தேச விளக்கொளியை காணில்
விளக்காய வீடதுவே யாம்”

இப்பாடல் “தெளிவாய தேச விளக்கு ஒளியை காணில் விளக்காய வீட்துவே ஆம்” என பிரிந்து பொருள் தரும்

அதாவது இந்த உடலாகிய வீட்டில் சிவனின் ஒளியினை கண்டால் அந்த பரமனின் ஒளியினை கண்டால் அண்டத்தில் உள்ளவற்றையெல்லாம் காணலாம் என்பது பொருள்

இது கொஞ்சம் சூட்சுமமான விஷயம்

அண்டதில் இருப்பதெல்லாம் பிண்டத்திலும் உண்டு என்பார்கள் ரிஷிகள், அவ்வகையில் இந்த உடலே அண்டத்தின் எல்லா அம்சமும் அடங்கிய கூடு

இங்கு அதாவது மானிட மனதிலே அந்த பரனின் ஒளியினை உணர்ந்தால் அண்டமெல்லாம் காணும் ஒரு பெரும் ஞானநிலை வரும் என்பது ஒளவையின் போதனை

அதாவது அறியாமையும் மாயையும் மனதில் நிரம்பியுள்ளது, அந்த அறியாமை இருளை அகற்றி சிவஜோதியினை ஏற்றினால் அந்த வெளிச்சத்தில் அண்டம் முழுக்க ஞானகண்ணுக்கு தெரியும் அண்டமும் பிண்டமும் ஒரே அம்சம் என்பதும் புரியும் என்பது ஒளவை சொல்லும் தத்துவம்