பழமொழி நானூறு : 26

“அறிவினால் மாட்சி ஒன்று இல்லா ஒருவன்
பிறிதினால் மாண்டது எவனாம் – பொறியின்
மணி பொன்னும், சாந்தமும், மாலையும், மற்று இன்ன
அணி எல்லாம், ஆடையின் பின்”

அறிவும் ஞானமும் உடையவர் எனும் பெருமையினை பெறாத ஒருவர் எவ்வளவு செல்வங்களை பெற்றாலும் அது அவருக்கு என்ன நன்மை தரும்?, தராது

கருவிகளால் தீட்டபட்ட வைரம் போன்ற மணிகளும், நகைகளும், சந்தணமும், மாலையும் ஒருவன் அணிந்தாலும் அது ஆடை உடுத்தியது போன்ற பயனை தராது

அறிவு செல்வமே உண்மையான செல்வம் அது அல்லாத செல்வம் எதுவும் பயனில்லாதது என்கின்றார் புலவர்

இதனையே வள்ளுவன் சொன்னான்

“அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இல”

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர். (குறள்: 430)

எதுவும் இல்லாது போனாலும் அறிவுள்ளவர் ஒருவர் எல்லாவற்றையும் பெற்றவராகவே மதிக்கப்படுவார், அறிவில்லாதவர் எல்லாவற்றையும் பெற்றும் அறிவில்லாததால் ஒன்றும் இல்லாதவராகவே கருதப்படுவர் என்வர்

அறிவும் ஞானமும் செல்வங்களில் தலையானவை அதனை கொண்டிராமல் வேறு எல்லா செல்வங்களை கொண்டிருந்தாலும் அவர்கள் ஒன்றுமில்லாதவர்களாகவே கருதபடுவார்கள் என்பது புலவர் போதிக்கும் தத்துவம்

“மன்னனு மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின்
மன்னனிற் கற்றோன் சிறப்புடையன்-மன்னற்குத்
தன்தேச மல்லாற் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றவிட மெல்லாம் சிறப்பு”

என ஒளவை மூதாட்டி சொல்வதும் இதுதான்.