பழமொழி நானூறு : 31

பொற்பவும் பொல்லாதனவும் புணர்ந்திருந்தார்
சொல் பெய்து உணர்த்துதல் வேண்டுமோ? விற் கீழ்
அரி தாய்ப் பரந்து அகன்ற கண்ணாய் அறியும்,
பெரிது ஆள்பவனே பெரிது.

வில்லை போன்ற புருவமும் கீழே வில்லின் நாண் போல செவ்வரி இழையும் கொண்ட பெண்ணே, அறிவுடையார் எதனை செய்ய வேண்டும் என தெளிவான சிந்தனையுடன் செய்யவேண்டியதை சரியாக செய்வர், அவர்களுக்கு எது சரி? எது தவறு என எடுத்து சொல்ல அவசியமில்லை என்பது பாடலின் பொருள்

விளக்கினை விளக்கு கொண்டு தேடுவார் இலர், அப்படி அறிவாளிக்கு இன்னொரு அறிவாளி ஆலோசனை சொல்லும் அவசியமில்லை என்கின்றார் புலவர்