தமிழில் வழிபாடு
வரலாற்றை எப்பொழுதும் அதன் ஆட்சிகாலங்களோடு பார்க்க வேண்டும், அங்கு நடந்த அரசியல் காட்சிகளோடு பார்க்க வேண்டும்
இங்கு தமிழுணர்வோ, தமிழ் அபிமானமோ ராம்சாமி காலத்திலும் கருணாநிதி காலத்திலும் ஏற்பட்டது அல்ல, தமிழில் வழிபாடு என்பதெல்லாம் திராவிடத்தில் எழுந்ததே அல்ல
இங்கு தமிழில் வழிபாடு என்பதை அகத்தியர் சொன்னார், இன்னும் பலர் சொன்னார்கள், 11ம் நூற்றாண்டில் ராமானுஜர் எனும் மகானே தமிழ் வழிபாட்டை செய்தார்
தமிழ்சங்கமெல்லாம் பல ஆயிரம் ஆண்டாக தமிழை வளர்த்தது, இங்கு முருகன் சிவன் விநாயகர் என எல்லா தெய்வங்களுக்குமான பாடல் தமிழில்தான் இருந்தது
இன்றளவும் வைஷ்ணவர்களின் வழிபாடும் அவர்களின் நாலாயிரம் திவ்யபிரபந்தமும் சுத்த தமிழில் இருக்க, மார்கழி பஜனை முதல் ஆண்டாள் பாடலும் அக்கால தை மாசி நோன்பும் தமிழிலே இருக்க இங்கு பார்பன ஆதிக்கம் தமிழை அழித்தது எல்லாம் அபத்தம்
ராமானுஜர் பார்ப்பனர் ஆனால் அவர்தான் தமிழில் வழிபாட்டை செய்யும் முறையினை கொண்டுவந்த தமிழ் உணர்வாளர்
இதையெல்லாம் மறந்துவிட்டு ஏதேதோ பேசுகின்றன அந்த நாத்திக டமில் கோஷ்டிகள்
இங்கு நடந்த பெரும் குழப்பங்களுக்கு காரணம் பிராமணர்கள் அல்ல, மாறாக 12ம் நூற்றாண்டில் அலை அலையாக நடந்த ஆப்கானிய இஸ்லாமிய படையெடுப்புக்கள்
ஒரு கட்டத்தில் சுமார் 50 ஆண்டுகாலம் 13ம் நூற்றாண்டில் தமிழகம் சுல்தான்கள் கையில் சிக்கியது, திருவரங்கம் மதுரை என எல்லா ஆலயமும் அழிவின் பிடியில் இருந்தன, வழிபாடே நடக்கவில்லை
தஞ்சாவூர் கோவில் நிலையும் அதுதான்
அப்படிபட்ட நிலையில் பூஜையே இல்லை, வழிபாடு இல்லை எதுவுமில்லை எல்லா ஆலயமும் இருள் சூழ்ந்து இருந்தது அதுவும் அரை நூற்றாண்டு
இக்காலத்தில் வேடபாடசாலை, மடம், ஆலயம், விழா, பூஜை என எதுவுமில்லை
அப்படிபட்ட நிலையில்தான் விஜயநயகர அரசுகள் வந்து இங்கு இந்து ஆட்சியினை நிறுவின அவர்களை தொடர்ந்து மராட்டியர் வந்தார்கள்
அவர்கள் மறுபடி பூஜைகளை தொடங்கும்பொழுது தங்கள் வழமைபடி பிராமணர்களை கொண்டுவந்து மறுபடி தொடங்கினார்கள்
அப்படி வந்ததுதான் இந்து மறுமலர்ச்சி
அப்பொழுதும் வைணவ தலங்கள் தமிழிலேதான் இயங்கின, சைவ தலங்களிலும் ஆகமவிதி வேறு வழிபாட்டு விதிவேறு என தமிழும் சமஸ்கிருதமும் கலந்துதான் இருந்தன
இஸ்லாமிய பிடியில் அழிந்த ஆலயங்களை நிர்மானிக்க சமஸ்கிருத பூஜைகள் நடந்தன அது தொடர்கின்றது
அதே நேரம் தமிழுக்கு உரிய அங்கீகாரம் எல்லா ஆலயங்களிலும் உண்டு
தெலுங்கு மன்னர்கள் ஆட்சியிலும் பெரியபுராணமும், கம்பராமயணமும் இன்னும் எல்லா தமிழ் அடையாளங்களும் காக்கபட்டனவே அன்றி தமிழ் என்பதற்காக அழிக்கபடவில்லை
அவை இந்துக்களின் அடையாளம் என்பதால் அவை மொழிபேதம் இன்றி காணபட்டன
இந்த காலம் 17ம் நூற்றாண்டில் முடிவடைந்து மறுபடி மொகலாயம் ஆற்காடு நவாப் வழியாக தமிழகத்தை இஸ்லாமிய பூமியாக மாற்றும்பொழுது சர்ச்சை தொடங்கிற்று, எனினும் நேரம் பார்த்து இந்து மன்னர்கள் எழுந்தனர், அவர்களை இஸ்லாமிய கிறிஸ்தவ கூட்டுபடைகள் முறியடித்தன
அதன் பின் இஸ்லாமியரிடம் இருந்து ஆட்சி பிரிட்டானியருக்கு போயிற்று, அவர்கள் இங்கு கிறிஸ்தவ பூமியாக்க முனைந்தனர்
இஸ்லாமியன் வாள்முனையில் செய்ததை இங்கு அரசியல் குழப்பங்களாக பிரிட்டிசாரும் அவர்கள் மிஷனரிகளும் செய்தனர்
அந்த மிசினரிகள் உருவாக்கமே திராவிடமும் அவர்களுக்கு வந்த டமில் உணர்வும் இன்னபிறவும்
கோவிலே வேண்டாம் எனும் கூட்டத்தை தமிழக இந்துக்கள் மொத்தமாக புறக்கணிக்க, மெல்ல டமில் உணர்வில் புகுந்து கோவில்களை குழப்ப இந்த கும்பல் செய்ததுதான் தமிழ் வழிபாடு எனும் அழிச்சாட்டியம்
மற்றபடி இங்கு ராமானுஜர் காலத்தில் இருந்து எல்லா உணர்வும் எல்லாருக்கும் இருந்தது, பிராமணருக்கு கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது தமிழ், இந்துபக்தி உள்பட