உதவி தேவைபடும் “சிறப்பு குழந்தைகளுக்கான நாளாக” இதனை கொண்டாடலாம்
19ம் நூற்றாண்டில் ஒரு தந்திரம் உலகெல்லாம் உண்டு, அதாவது கொஞ்சமும் தகுதி இல்லாத ஒருவரை மறுபடி மறுபடி மக்கள் மனதில் பதியவைத்து அவரை பெரும் பிம்பமாக்குவது
ஊடகங்கள் பல தங்களை அறியாமலும் பல தங்களை அறிந்தும் இந்த காரியத்தை செய்யும், ஒரே ஒருவருக்கு கொடுக்கபடும் அதீத விளம்பரம் மற்ற திறமையான எல்லோரையும் அப்படியே மறைய செய்துவிடும், கிரிக்கெட்டில் யாருக்கும் வாய்பளிக்காமல் ஒரே ஒருவனை மட்டும் நிறுத்தி ஆட சொன்னால் எப்படி இருக்கும் அப்படியான நிலை இது
இதனை 19ம் நூற்றாண்டில் ஆங்கில அரசு செய்தது, அப்படி உருவான பிம்பமே ஜவஹர்லால் நேரு, படித்தவர் பண்பாளர் என பெரும் பிம்பம் பத்திரிகை ஊடகம் என எல்லா தரப்பாலும் மாறி மாறி பதியவைக்கபட்டது
விளைவு அவர் பிரதமருமானார்
நாட்டை பற்றிய எந்த உயர்வான கருத்தும் அபிமானமும் அவரிடம் இல்லை, இந்தியாவும் இந்துக்களும் மடையர்கள் நிறைந்த நாடு என மனமார நம்பினார், அவரிடம் ஐரோப்பிய மோகம் மிகுந்திருந்தது, அவரின் பெண் தோழிகள் கூட ஐரோப்பியர்களாகவே இருந்தார்கள்
அவரின் போராட்டம் ஒன்றும் பிரமானதுமல்ல, மிக எளிய மறியல் அல்லது முணுமுணுப்பிற்காக சிறைபடுத்தபடுவார், அதுவும் சாவர்க்கர் வ உ சி போல கடும் சிறைகள் அல்ல, எல்லா வசதியும் நிறைந்த மாளிகையில் இருப்பார், அவ்வப்போது வெளிநாடு செல்ல வழியும் செய்யபடும்
பிரிடிசாருக்கு யாரெல்லாம் எதிரிகளோ அவர்கள் தனக்கும் எதிரிகள் என மனமார நம்பினார், யார் பிரிட்டிசாருக்கு ஆதரவோ அவர்கள் தனக்கு நண்பர்கள் என சொல்லிகொண்டார்
அப்படித்தான் நேதாஜி எதிரியானார் ஆனால் ஜின்னா நண்பரானார்
1947லே இங்கிருக்கும் மதமாற்ற கும்பல் பிரிவினைவாத கும்பல்கள் எல்லாம் மூட்டை முடிச்சை கட்டிகொண்டு தயாராக இருந்தன , ஆனால் அவர்களுக்கு மறுவாழ்வு அளித்தவர் நேரு
பிரிட்டிசார் விதைத்த இந்தியா ஒரே நாடு அல்ல எனும் கொள்கை நேருவிடமும் இருந்தது இதனாலே பாகிஸ்தான் பிரிவினையினை அவர் தடுக்கவில்லை, ஏகபட்ட சமஸ்தான ராஜாக்கள் தனிநாடுகோரிய பொழுதும் அவர் கவலைபடவே இல்லை
மேற்கொண்டு இந்தியா பிரியவும் அவர் அமைதியாக சைகை காட்டினார், ஆம் பிரிவினைவாத தடை சட்டம் என்பது 1962ல்தான் கொண்டுவரபட்டது
அதுவரை அதாவது சுதந்திரம் அடைந்து 15 ஆண்டுகள் வரை தேசிய ஒருமைப்பாடு பற்றி அவர் யோசிக்கவே இல்லை
பட்டேல் எனும் மாமனிதர்தான் இந்த தேசத்தை ஒன்றாக்கினார்
நேரு எல்லோரையும் பகைத்தார் பட்டேல், அம்பேத்கர் எனும் தேசாபிமானிகளை கடுமையாக பகைத்தார், ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்களை ஒழிப்பதில் மும்முரமாக இருந்தார்
அவர் பிரிட்டிசாரின் சூழ்ச்சியினை கடைசிவரை புரிந்துகொள்ளவில்லை, சிறுபான்மையினரை காக்கவும் சிறுபான்மை மதங்களை காக்கவுமே இந்தியா சுதந்திரம் அடைந்ததாக நம்பி கொண்டிருந்தார்
அவரை பல குழப்பவாதிகளும் சுயநலவாதிகளும் சூழ்ந்துகொண்டு மிக தவறான பாதைகளை காட்டினார்கள், காஷ்மீர் விஷயம் தொடக்கத்திலே முடிந்திருக்க வேண்டியது, ஐதரபாத் ஜூனாகத் போல என்றோ முடிந்திருக்க வேண்டிய காஷ்மீர் சிக்கலை நேரு நீட்டித்தார், அவர் செய்த பெரிய தவறு அது
அதற்கான விலையினை அடுத்த 70 வருடம் தேசம் கொடுத்து இப்பொழுதும் ஒரு பங்கு காஷ்மீர் பாகிஸ்தானிடமே உள்ள அளவு நிலமை உள்ளது
உலக வங்கி உள்ளே நுழையவும் இன்னும் பல நாடுகளின் சந்தையாகவும் இந்தியா விளங்க பல சலுகைகளை செய்தார், சுருக்கமாக சொன்னால் பிரிட்டிசார் வெளியேறினாலும் அவர்கள் தொழில் வெளியேறாமல் பார்த்து கொண்டார்
குட்டி நாடான இலங்கை மலையக தமிழககள் 5 லட்சம் பேரை திருப்பி அனுப்பியபொழுது மிக இயல்பாக ஏற்றார் நேரு, இலங்கையினை கூட கட்டுபடுத்தும் தந்திரம் அவரிடம் இல்லை
அவரின் மிகபெரிய சொதப்பல் உள்நாட்டு குழப்பவாதிகளை வளரவிட்டது, திமுக உள்ளிட்ட சக்திகள் அப்படித்தான் வளர்ந்தன, இந்து துவேஷ சக்திகளை அன்னிய மதமாற்ற கும்பல் ஆதரித்து தம் மதம் வளர்க்க பணமும், பொருளும் அள்ளி வீசியபொழுதும் அவர் அதனை அமைதியாக அனுமதித்தார்
கல்கத்தாவில் விவேகானந்தர் சீடர் நிவேதிதையின் பெயர் மங்க தெரசாவினை நேரு பகிரங்கமாக விளம்பரபடுத்தினார்
கிறிஸ்தவ மிஷனரி கும்பல்களின் அறிவிக்கபடாத ஏஜென்ட்டாகத்தான் நேரு ஆண்டுகொண்டிருந்தார், அவரை அப்படி நம்ப வைத்திருந்தன அன்னிய மதவாத சக்திகள்
உண்மையில் அவர் எப்படிபட்ட வெற்று பிம்பம் என்பதும், அவர் நம்பிய பிரிட்டிஷ் ஏஜென்டுகள் அவரை எப்படி கைவிட்டன என்பதும் அவருக்கு அந்திம காலத்தில்தான் தெரிந்தது
தான் எப்படியெல்லாம் ஏமாற்றபட்டிருக்கின்றோம் என்பதை 1962லேதான் அறிந்து கொண்டார்
நேரு அதிகாரமிக்கவர், கோபக்காரர் என்றெல்லாம் பிம்பம் உண்டு, அவருக்கு எதிரில் யாரும் பேசிவிட முடியாது அந்த அளவு நேரு இல்லாவிட்டால் இந்தியா இல்லை எனும் அளவு எல்லோரையும் மிரட்டி, நானேதான் சுதந்திரம் வாங்கி தந்தேன், நானேதான் இந்தியாவினை வழிநடத்துகின்றேன் என ஒரு பிம்பம் உருவாக்கி வைத்திருந்தார்
அந்த பிம்பத்தை அன்னிய மிஷனரி சக்திகள் உருவாக்கி வைத்திருந்தன, ஊடகங்கள் துணை போயின
இந்த பிம்பத்தை உடைத்தவன் சீனாவின் சூ என் லாய்
1962ல் இந்திய தமிழகம் மாமல்லபுரத்துக்கு வந்திருந்தான் அவன், அன்றைய சீனத்து பிரதமராயிருந்தான் அந்த சூ என் லாய். ஐநாவில் சீனாவினை ஆதரித்த நாடு எனும் வகையில் அவனுக்கு நேருமேல் ஒரு அபிமானம் இருந்தது
அந்நேரம் இந்தியா சோவியத் யூனியன் மிரட்டலுக்கு அடிபணிந்திருந்ததாகவும் அதனாலே இன்னொரு கம்யூனிசநாடான சீனாவுக்கு ஐநாவில் நிரந்தர அந்தஸ்து வாங்கி கொடுத்ததாகவும் மேலை நாடுகள் கருவிகொண்டிருந்தன
உண்மையில் உலகின் மிகபெரிய ஜனநாயக நாடு எனும் வகையில் இந்தியாதான் ஐ.நாவில் நிரந்தர நாடாக மாறியிருக்க வேண்டும், நேரு அந்த வாய்ப்பை உதறியதை ஜன்நாயக நாடுகளே பரிதாபத்தோடு பார்த்தன
அந்த பெரும் துரோகத்தை நேரு செய்தார், இந்திய நலனை தாண்டி சீன நலனுக்காக செய்தார்
நேரு இத்தேசம் உருப்பட கூடாது என யாரோ ஒருவரின் வலையில் விழுந்து இம்மாதிரி காரியங்களை செய்கின்றார் என்பதை ஊகிக்க முடிந்த காலம் அது
இன்னும் குழப்பமாக அணிசேரா கொள்கை என ஒன்றினை உருவாக்கி, உலகில் யாரையும் போரில் ஆதரிக்கமாட்டோம், எங்கள் மேல் தாக்குதல் நடந்தாலும் யாரும் வரகூடாது எனும் குழப்பமான கொள்கையினை உருவாக்கினார்
நேருவின் பலகீனங்கள் தங்கள் நாடு முன்னிலை பெறுவதற்கு உதவுவதை உணர்ந்த சீனா முதலில் நன்றியோடுதான் இருந்தது, ஆனால் திபெத் பிரச்சினையில் சீனாவுடனும் பகைத்தார் நேரு
அதை நோட்டமிடத்தான் இந்தியா வந்தான் சூ என் லாய்
வந்தவன் நேருவின் அலுவாலகம் சென்றான், அங்கே ராபர்ட் கிளைவ் முதல் மவுண்ட் பேட்டன் வரை படங்கள் அலஙகரிக்கபட்டிருந்தன
அமைதியாக பார்த்துவிட்டு வந்த சூ என் லாய் சொன்னான் “நேரு இன்னும் பிரிட்டிஷ் அடிமையாக இருக்கின்றார் இல்லையென்றால் இன்னும் தங்களை ஆக்கிரமித்த நாட்டுக்காரன் படங்களை வைத்து வணங்கிகொண்டிருப்பாரா?’
இந்த புள்ளியில்தான் துணிந்து அடித்தது சீனா, ஐரோப்பா தனக்கு உதவிக்கு வரும் என நம்பியிருந்த நேரு அப்படி வராமல் போனதில் மனமுடைந்தார்
தன்னை ஒரு வெற்றுபிம்பமாக கருதிய பிரிட்டன் தன்னை பாவித்துவிட்டு தூக்க்கி எறிந்ததில் மனமுடைந்தார்
பிரிட்டனின் கைபாவையாக வளர்ந்த அவருக்கு அமெரிக்க சோவியத் மோதலில் பிரிட்டன் அதல பாதாளத்தில் விழுந்ததில் பெரும் அடி விழுந்தது, சரிந்துகிடந்த பிரிட்டனால் நேருவினை காக்க முடியவில்லை
சீனபோர்தான் நேருவுக்கு அரசியல் என்றால் என்ன என்பதை கற்றுகொடுத்தது, தான் அரசியலுக்கு லாயக்கில்லை என்பதை அப்பொழுதுதான் உணர்ந்தார் நேரு
அவரின் அணிசேரா கொள்கை அடிவாங்குவதை உணர்ந்து அமெரிக்காவிடம் கதறினார், கென்னடி தலையிட தொடங்கியபின்புதான் நிலமை மாறிற்று
பிரிட்டன், சோவியத், சீனா போன்றவையெல்லாம் தன்னை எப்படி பாவித்து ஏமாற்றியிருக்கின்றன என்பதை உணரும் பொழுது அவரால் தாங்கமுடியவில்லை
மேற்கொண்டு கோவாவில் அன்னிய சக்திகள் ஊடுருவலாம் எனும் அச்சம் ஏற்பட்டபொழுதுதான் அது இந்தியாவின் பகுதி என்பதே நினைவுக்கு வந்து அதனை இந்தியாவோடு இணைத்தார்
சீனபோரை தொடர்ந்துதான் திராவிட நாடு கோரிக்கையினை தடைசெய்யும் சட்டமே கொண்டுவந்தார்
ஆர்.எஸ்.எஸ் அமைப்பினை புரிந்துகொண்டு அதனை கையெடுத்து வணங்கினார்
தான் எவ்வளவு வஞ்சகமாக பிரிட்டனால் ஏமாற்றபட்டிருக்கின்றோம், உண்மையான விடுதலை மக்கள் அபிமானம் என்றால் என்ன என்பதை மெல்ல மெல்ல உணர்ந்தார்
தன் வாழ்வு முழுவதும் ஏமாற்றபட்ட வருத்தத்தோடு செத்தார், இவ்வளவுதான் நேரு
ஆம், அவர் அரசியலுக்கு லாயக்கில்லாதவர், பெரும அறிவோ தைரியமோ பாரதம் பற்றிய பெரும் அபிமானமோ அவரிடம் இல்லை, முழுக்க முழுக்க பிரிட்டன்வாசியாக தன்னை உணர்ந்த ஐரோப்பிய மனம் அவருடையது
அவரை ஒரு பிம்பமாக்கி வெற்று சிலைக்கு அரசபட்டம் சூட்டி இந்தியாவின் தொடக்ககாலத்தை கொடுத்து மென் மேலும் குழப்பமாக்கினார்கள் அன்னிய சக்திகள்
அதனால் ஏற்பட்ட இழப்பும் குழப்பமும் இன்றுவரை நீடிக்கின்றன, இப்பொழுது நிலமை கொஞ்சம் சரியாகின்றது
ஆனால் 1950களில் செய்த அதே ஊடக திருட்டுதனம் மட்டும் இன்னும் மாறவில்லை, அந்த நேருவினை எப்படி பிம்பமாக்கி மறுபடி மறுபடி மக்கள் மனதில் பதியவைத்தார்களோ அப்படி ராகுல், திருமா, சீமான், ஸ்டாலின் என மக்கள் மனதில் பதியவைக்க அதே ஊடக கும்பல்கள் முயற்சிக்கின்றன
எனினும் மாறிவிட்ட காலம், பெருகிவிட்ட தகவல் தொடர்பு, விழித்துவிட்ட இந்திய மக்களால் அந்த முயற்சிகள் முறியடிக்கபடுகின்றன பலன் கொடுக்கவில்லை
இந்த நாள் ஒரு தலைவன் எப்படி இருக்க கூடாது என்பதற்கு உதாரணமான நேருவின் பிறந்தநாள், இந்நாட்டின் பல குழப்பங்களின் பிதாமகனின் பிறந்தநாள்
அவ்வகையில் உதவி தேவைபடும் “சிறப்பு குழந்தைகளுக்கான” நாளாக இதனை கொண்டாடலாம், அதுதான் சரியானது
நேரு எந்த அளவு குழப்பமும் பலவீனமும் கொண்டவராக இருந்தார் என்றால் அவரின் கொள்கைகளை மோடி அரசு தூக்கி வீசும்பொழுது இந்தியா பலமாகின்றதல்லவா? அந்த ஒரு வரியிலே புரிந்து கொள்ளலாம்
நேரு என்பவர் பிரிட்டனின் கையாளாக உருவாக்கபட்டு, அவனாலே குழப்பமான இந்தியாவினை நிர்மானிக்க, எதிர்காலத்தில் சிதைந்து அழிய வேண்டிய இந்தியாவினை உருவாக்க, பதவியில் அமர்த்தபட்ட பிம்பம், அதுவன்றி வேறு ஏதும் சொல்லமுடியாது
அவரது போராட்டமும் ஆட்சியும் முழுக்க மிஷனரிகளுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் அன்னிய நாடுகளுக்கும் ஆதரவாக இருந்ததே அன்றி, தேசத்தின் நலனுக்கும் இங்குள்ள மக்களின் காவலுக்கும் நலனுக்கும் கலாச்சாரத்துக்கும் ஆதரவாக இருந்ததே இல்லை
அவர் பிரிட்டனின் முகமூடியாக இருந்து மிஷனரி ஆட்சியினை நடத்தி பல சீர்கேடுகளை தொடங்கி வைத்தார்
இந்தியாவின் ஞானமரபான தாமரையினை விடுத்து அராபியரால் கொண்டாடபடும் ரோஜா மலரை சூடிய நேரு யார் என உணர்வது ஒன்றும் ரகசியமல்ல..
