ராஜிவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை எனும் சிக்கலின் மூலமும் முடிவும்…
ராஜிவ் கொலை என்பது வெறும் அரசியல் கொலை அல்ல, உலகிலே மனித வெடிகுண்டால் கொல்லபட்ட முதல் தலைவர் அவர்தான் எனும் வகையில் அது மகா முக்கியத்துவமானது, அதன் மூலம் மற்றும் முடிவு அதனால் ஏற்பட்ட விளைவு வரை இங்கு அலசலாம்
பொதுவாக ஈழதமிழருக்கும் தமிழக தமிழருக்குமான உறவு கசப்பானது, அக்காலம் முதலே ஈழதமிழரும் தமிழக தமிழரும் கொஞ்சம் இடைவெளி கொண்டிருந்தனர், அதுவும் வெள்ளையன் இதனை மிக திட்டமிட்டு வளர்திருந்தான், கொழும்பு மலையகம் ஈழம் என தமிழக தமிழர்கள் பணியாற்றிய காலங்களில் ஈழதமிழர்கள் அவர்களை இரண்டாம்தரமாக கருதினார்கள், நாய்தமிழன் பீ தமிழன், வந்தேரி தமிழன், வடக்கத்தியான் என பட்டமெல்லாம் சூட்டபட்டன
அப்படிபட்ட ஈழதமிழர் மலையக இந்திய தமிழர்களை மட்டமாக வைத்ததும், நேரு காலத்தில் ஈழ சிங்கள சதியில் 5 லட்சம் மலையக தமிழர் தமிழகம் வந்ததும் ஈழ்தமிழ்ர் இந்திய தமிழரிடையே ஒரு பிளவை கொடுத்தன
இந்த பிளவிலே காட்சிகள் இருந்திருக்கலாம் அப்படி இருந்தால் வங்கதேசம் மேற்குவங்கம் போல சிக்கல் இருந்திருக்காது
இந்த இணைப்பை தொடங்கி வைத்தவர் இந்திராகாந்தி, திரிகோணமலை துறைமுகத்தில் அமெரிக்கா காலூன்றுவதை தடுக்க சோவியத்தின் பிரதிநிதியாக இந்திரா களமிறங்கினார்
அதற்கான வாய்ப்பு ஈழதமிழர் சிங்களர் பிரச்சினை அரசியல்வாதிகளிடம் இருந்து கடத்தல்கார ரவுடிகளிடமும் பின் மாணவர்களிடமும் வந்து பின் பல ரவுடிகள் போராளிகளாக வேடம்பூண்ட குழப்பமான காலத்தில் 1970களின் அந்திமகாலத்தில் வந்தது
1983 கொழும்பு கலவரம் மிக கொடிது என்பதால் இந்தியா நேரடியாக களமிறங்கினாலும் ஒரு பின்புலம் தேவைபட்டது
அப்படித்தான் 1983ல் ஈழதமிழர் பிரதிநிதியான அமிர்தலிங்கம் ஆதரவு வேண்டி எம்ஜி ராமசந்திரனை சந்தித்தார், தானும் இந்த தமிழர் பிரச்சினையில் உண்டு என கருணாநிதியும் களம் புகுந்தார்
ஈழபிரச்சினை தமிழகத்தில் அப்பொழுதுதான் புகுந்தது
நிச்சயம் அமிர்தலிங்கம் டெல்லி வந்திருக்க வேண்டும், இந்திய அதிகார பீடங்களைத்தான் சந்தித்திருக்க வேண்டும் ஆனால் இந்திய தமிழர்கள் போராட்டத்தால் டெல்லி இலங்கையில் நுழைகின்றது என ஒரு நாடகத்தை நடத்த இந்திரா விரும்பினார்
அதுதான் எல்லா சிக்கலின் மூலமாயிற்று, அவ்வகையில் டெல்லியிலே நடந்திருக்கவேண்டிய சந்திப்புக்களை தமிழகத்தில் நடத்தி தொடங்கியதுதான் முதல் காரணம்
அதனை அப்பொழுது ஊழலிலும் கள்ளுகடையிலும் இன்னும் பல்வேறு இழப்புகளிலும் சிக்கியிருந்த திமுகவும் அதிமுகவும் வசமாக பயன்படுத்தி கொண்டன
இந்தியா இலங்கையில் இருந்த 30 போராளி குழுக்களில் ஓரளவு சரியான நான்கு குழுக்களை தேர்ந்தெடுத்து பயிற்சி வழங்கியது
இந்த நான்கு குழுக்களும் புலிகள், டெலோ, எபிஆரெல்பப், பிளோட் என்பதாகும்
இங்கு முதலில் புலிகள் வரவில்லை காரணம் அங்கு இன்னொரு அரசியல் முளைத்தது
ஆம், சர்வதேச உளவு நிறுவணங்கள் இலங்கைக்குள் வந்தன, அங்கு அப்பொழுது அமித்ஷா இருந்தான் அவன் பெயர் அதுலத் முதலி
இந்தியா செய்த பெரும் தவறு சில இயக்கங்களை பாலஸ்தீனின் அராபத்திடம் பயிற்சிககக சிரியா அனுப்பியது, அந்த புள்ளியில் அதுலத் முதலி இஸ்ரேலை காட்சிக்குள் இழுத்து வந்தான்
பாலஸ்தீனருக்கு ஆதரவு என்பது இஸ்ரேலின் வருங்கால ஆபத்து என்பதால் மொசாத்தும் களத்துக்கு வந்தது
இந்த காலத்தில்தான் ஆண்டன் பாலசிங்கம் எனும் லண்டன் தமிழரும் புலிகளோடு இணைந்தார், அவர் வந்தபின்புதான் புலிகள் பலம் பெற்றார்க்ள்
டெலோவில் இருந்த பிரபாகரன் வெளிவந்து துருபிடித்த துப்பாக்கியுடன் தமிழர் துரையப்பாவினை சுட்டு கொன்று அடுத்து யாரை கொல்லலாம் என அலைந்தபொழுது பாலசிங்கம் வந்து இயக்கத்தை வலுபடுத்த்னார்
புலிகள் அப்பொழுதே மேல்நாட்டு சார்பில் இருந்தார்கள் இந்திய பயிற்சிக்கு வரமறுத்தார்கள்
அவர்களை இந்திரா வழிக்கு கொண்டுவரும்பொழுது ஒரு தவறை செய்தார், அவர் தமிழக எம்ஜிஆர் மூலம் வழிக்கு கொண்டுவந்தார், எம்ஜி ராம்சந்தரின் முயற்சியிலே பிரபாகரன் இந்திய பயிற்சிக்கு வந்தான்
இந்திரா செய்த தவறின் பலன் கருணாநிதி மூலம் தெரிந்தது அவர் பிரபாகரன் அல்லாத கும்பலுடன் கூடி ஈழவிடுதலை நாடகம் ஆடினார்
இப்படி தமிழக அரசியலில் இரு பிரிவுகளும் ஈழ போராளிகளை ஆதரித்தன, இந்திராவுக்கு முதல் முறையாக அச்சம் வந்தது
தமிழகம் ஈழபோராளிகளின் சொர்க்கமானது, தமிழக மக்கள் முதல் முறையாக துப்பாக்கி வெடிகுண்டு வயர்லெஸ் என பலவற்றை கண்டார்கள், எனினும் தமிழகத்தில் அப்போது போராளிகள் துப்பாக்கி பிரயோகம் செய்யவில்லை
இந்நிலையில்தான் புலிகளுக்கும் இதர கோஷ்டிகளுக்கும் ஆரம்பம் முதலே இருந்த சிக்கல் சென்னையில் வெடித்தது பிரபாகரனும் உமாமகேஸ்வரனும் மோதி கொள்ள பிரபாகரன் தமிழக போலிசாரால் கைதுசெய்யபட்டான்
அவன் முதலும் கடைசியுமாக கைதுசெய்யபட்டது அப்பொழுதுதான்
எனினும் இந்திரா அவனை பிடித்து கொடுக்க மறுத்தார், இலங்கையிடம் ஒப்படைக்க மறுத்தார் இதுதான் பின்னாளில் பெரும் பிரளமாயிற்று
இந்திரா வங்கம்போலத்தான் இலங்கையில் கால் வைக்க தொடங்கினார் ஆனால் வங்கத்துக்கும் தமிழகத்துக்குமான் சிக்கலை பின்புதான் அறிந்து மிகபெரிய சிக்கலில் இறங்கிவிட்டதை நினைத்து அஞ்சினார்
ஆம், அங்கே மொழி ஒன்று மதம் வேறு, இங்கே மதம் ஒன்று மொழியும் ஒன்று என்பதால் இலங்கையில் தமிழருக்கு நாடு கொடுத்தால் அது மொழி என இங்கு எதிரொலிக்கும் திராவிட நாடு கேட்ட கும்பல் நிச்சயம் இந்தியாவினை சுடுகாடாக்கும் என யோசித்தார்
காஷ்மீர், பஞ்சாப் வடகிழக்கு என பெரும் தீவிரவாதகாலம் அது என்பதால் இந்திரா இந்த யோசனைகளை மனதோடு வைத்து கொண்டார், அப்பொழுது நிலமை கட்டுக்குள்ளும் இருந்தது
இந்திராவின் எதிர்பாரா மரணமே அடுத்த குழப்பத்தை தோற்றுவித்தது, அந்த குழப்பத்தை இன்னும் குழப்பமாக்கினார் ராஜிவ்
அனுபவமில்லா ராஜிவ் பிரதமாரானார் அவருக்கு தீட்சித் போன்ற குழப்பான அதிகாரிகள் மோசமான திட்டங்களை கொடுத்தார்கள்
அப்பக்கம் ஜெயவர்த்தனே தன் அனுபவத்தால் ராஜிவினை ஆட்டுவித்தான், ராஜிவ் அஞ்சகூடாத இடத்தில் அஞ்சினார், இலங்கையில் சர்வதேச படை வரும் என ஜெயவர்த்தனே மிரட்ட ராஜிவ் இந்திய படைகளையே அனுப்ப விரும்பினார்
இந்த இடத்தில்தான் பிரபாகரன் பெரிதானான், அவன் ராஜிவோடு முரண்பட்டான், ராஜிவின் சமரச திட்டங்களை அவன் ஏற்கவில்லை உரசல் பெரிதானது
ஒரு நாடு அடைந்து விட வேண்டும் என பிரபாகர்னும் அதை அடைந்த மறுநொடி தமிழகத்தில் ஆயுத கலாச்சார சண்டை தொடங்கும் என தமிழகமும் அஞ்சியது
அப்பொழுது எம்ஜி ராமசந்திரன் நிதானமாக இருந்தார், அவரின் டிஜிபியான மோகன் தாஸ் புலிகள் உள்ளிட்ட போராளிகள் நடமாட்டத்தை இரும்புகரம் கொண்டு ஒடுக்கி கட்டுக்குள் வைத்திருந்தார்
எம்ஜி ராம்சந்தர் புலிகளின் தமிழக அபிமானியானார், பத்மநாபா, சபா ரத்தினம் போன்றோருக்கு கருணாநிதி தளபதியானார்
முதன் முறையாக ராஜிவ் தமிழகம் தாண்டி இந்த போராளிகள் கூட்டம் நடத்தினார், பூடான் தலைநகர் திம்புவில் நடந்த பேச்சுவார்த்தையு தோற்றது
எங்கும் குழப்பமும் சண்டையும் நிலவியது, புலிகள் முந்தி கொண்டு சக இயக்கங்களை ஒழித்தனர், புளோட்டும் டெலோவும் புலிகளால் ஒழிக்கபட்டது
உண்மையில் அப்பொழுது இந்தியாவினை விட பெரிதான நவீன ஆயுதங்கள் புலிகளுக்குவந்தன, இன்றைய உக்ரைன் ராணுவம் போல புலிகள் திடீரென வலுவானார்கள்
இந்திரா அங்கு தொடங்கிய முயற்சி திசைமாறி தமிழக அரசியலாகி இன்னும் எங்கெல்லாமோ நுழைந்து குழப்பியது
ராஜிவ் இந்த இடத்திலும் சுதாரிக்கவில்லை பிரபாகரனுக்கு போட்டியாக உமா மகேஸ்வரனை வளர்க்க விரும்பினார் அதையும் உருப்படியாக செய்யாமல் மாலத்தீவினை கைபற்ற் அவனை அனுப்பி அவனையும் கைவிட்டார்
ராஜிவினை முதலில் கொல்ல தேடியவன் உமா மகேஸ்வரனே, ராஜிவ் குழந்தைகளை கூட அவன் கடத்த திட்டமிட்ட காலம் உண்டு, ஆனால் அவன் அதற்கு முன்பே கொல்லபட்டான்
1984 முதல் 1987 வரை குழப்பமே மிஞ்சியது
தனிநாடு தரமுடியாது என இந்தியாவும், அது இல்லாமல் முடியாது என பிரபாகரனும் முரண்டு பிடித்தனர்
இந்த இடத்தில் ஈழபிரச்சினையினை திமுக அதிமுக என இரண்டுமே டெல்லிக்கு எதிரான அரசியலாக்கின
தொடக்கத்தில் கருணாநிதி அழகான திட்டம் வரைந்தார், அதன்படி வாஜ்பாய், பருக் அப்துல்லா போன்றோரை கொண்டு டெஸோ அமைப்பை ஏற்படுத்தி கொண்டார்
இதனால் தன்னை அகில இந்திய அரசியல்வாதியாக்கினார், காங்கிரசின் ராஜிவுக்கு குடைச்சல் கொடுத்தார்
ராஜிவ் இந்த கால கட்டத்தில் ஜெயலலிதாவினை முதல்வராக்க எம்ஜிஆரோடு மல்லுகட்டினார், பலவீனமான எம்ஜிஆர் ராஜிவுக்கும் புலிகளுக்கும் ஆகாது என்பதால் புலிகளை நோக்கி புன்னகைத்தார்
அதாவது நீர் ஜெயலலிதா விவகாரத்தை தொட்டால் நான் புலிகளை தொடுவேன் என ஒரு அரசியலை செய்தார் எம்ஜிஆர்
ராஜிவின் அனுபவமின்மையினை எல்லோரும் பயன்படுத்திகொண்டனர்
பிரபாகரன் டெலோவின் சபாரத்தினத்தை கொன்றதில் மிக மனமுடைந்த கருணாநிதி டெசோவினை கலைப்பதாக அறிவித்துவிட்டு ஈழ விவகாரத்தில் மவுனம் காத்தார்
இந்த இடத்தில்தான் ராஜிவ் அமைதிபடையினை அனுப்பினார், கருணாநிதி வழக்கம் போல் எதிர்த்தார் எம்ஜிஆர் மவுனமாக ஆதரித்தார்
இரு மாத்ங்களிலே எம்ஜிஆர் மரணமடைந்தார், அதன் பின்பே புலிகளுக்கும் இந்திய ராணுவத்துக்கும் மோதல் தொடங்கிற்று
இந்த கால்கட்டமே இந்திய அரசியமும் குழம்பி தமிழக அரசியலும் குழம்பி ஈழமக்களின் எதிர்காலமும் குழம்பிய காலம்
ராஜிவ் மேல் பல புகார்கள் வந்தன அதனில் ஒன்று குவாட்ரோச்சி எனும் இத்தாலிக்காரன் செய்த அந்த போபர்ஸ் ஊழல்
இந்த ஊழல் புகாரால் ராஜிவ் பதவியிழந்தார், அந்த இடத்தில் விபிசிங்கின் ஆட்சி வந்தது
இந்த வி.பி சிங்கின் ஆட்சிதான் இந்திய வரலாற்றிலே மிக மிக பலவீனமான ஆட்சி, சமூகநீதி இட ஒதுக்கீடு என அவரின் நோக்கமெல்லாம் இருக்க தேசம் சீரழிந்தது , காஷ்மீர் எரிய ஆரம்பித்தது தேசமெங்கும் குழப்பமும் போராட்டமும் அதிகரித்தன
இந்த அரசை ஆதரிக்கும் சக்தியாக கருணாநிதி இருந்தார், அவர் ஈழவிவகாரத்தை தனக்கு சாதகமாக திருப்பினார்
அப்பொழுது அவர் முதல்வராகவும் தமிழகத்தில் இருந்தார்
அதுவரை புலிகள் பக்கம் சரியாமல் டெசோ பக்கம் இருந்த கருணாநிதி, சபாரத்தினம் ஆதரவாக இருந்த கருணாநிதி சட்டென புலிகள் பக்கம் தாவினார், முரசொலிமாறன் பாலசிங்கம் தொடர்பெல்லாம் வந்தன
அப்பொழுதுதான் ஈழமும் தமிழகமும் இணைந்த அகண்ட தமிழ்நாடு படமெல்லாம் வர தொடங்கின
இலங்கையில் இந்திய ராணுவம் பலமான புலிகள் முன்னும் அவர்களின் வல்லரசு ஆதரவு முன்னும் தோற்றது, கைகள் கட்டபட்ட நிலையில் இந்திய ராணுவம் திணறியது
ஆனால் அந்த ராணுவத்தை கற்பழிப்பு படை, சாத்தான் படை என இங்கு தமிழகத்தில் சொல்ல தொடங்கினார்கள், கருணாநிதி இதனை ஆதரித்தார்
தமிழகமெங்கும் புலிகள் நடமாட்டம் அதிகரித்தது, முறையற்ற விசா இன்றி கள்ளதோணிகளில் இஷ்டத்துக்கு புலிகள் குவிந்தனர், கருணாநிதி இதனை தமிழர் உணர்வு என சொல்லி கொண்டார்
சுப்பிரமணியம் சாமி இதனை கடுமையாக இதனை கண்டித்தார், துக்ளக் சோ போன்றவர்கள் கண்டித்தார்கள் அப்போதைய காங்கிரசாரும் கம்ய்னிஸ்டுகளும் கூட கண்டித்தார்கள்
இந்திய ராணுவத்தோடு மோதி கொல்பவர்களுக்கு இங்கு இடமளிக்க கூடாது என்ற கோரிக்கை கருணாநிதியால் மறுக்கபட்டது, விபி சிங்கும் இதனை ஆதரித்ததுதான் கொடுமை
ஒரு கட்டத்தில் இந்திய படைகளை மீளபெற்றார் வி.பி சிங், இது தன்னால் நடந்தது என தமிழின காவலர் பிம்பம் காட்டினார் கருணாநிதி, அப்பொழுது சென்னை வந்த இந்திய அமைதிபடையினரை கூட அவர் அவமானபடுத்தினார்
1960களின் அந்த அபாய கருணாநிதி மறுபடியும் உருவானார், எங்கும் பிரிவினைவாதம் வலுகட்டாய புலி ஆதரவு, புலிகளின் அராஜகம் என தமிழகம் மோசமானது
வைகோ எனும் திமுக எம்பி விசா இல்லாமல் இந்திய ராணுவத்தையே மீறி புலிகளை சந்தித்தான்
இந்த இடத்தில் அதிமுகவின் சூத்ரதாரி நடராசன் மிக சாதுர்யமாக ஆடினான், அவன் ஒரு பக்கம் புலி ஆதரவு என தெரிவித்து கொண்டே ராஜிவ் காந்திக்கும் விசுவாசம் காட்டினான், ராஜிவ் குழம்பினார்
புலிகளின் மையங்கள் திருச்சி சென்னை பெங்களுர் என பரவின, இந்திய அமைதிபடையினர் சுமார் 1500 பேரை கொன்றுவிட்டு இந்தியாவுக்குள்ளே புலிகளால் சுதந்திரமாக உலாவ முடிந்தது
பாகிஸ்தான் கூட செய்யமுடியா சாதனையினை கருணாநிதி மூலம் புலிகள் செய்தனர்
ஒருவகையில் இதெல்லாம் மிஷனரிகள் மற்றும் கிறிஸ்தவநாடுகள் நடத்திய காட்சிகள் என்பதால் ஆன்டன் பாலசிங்கம் எனும் கிறிஸ்துவரையும் கருணாநிதி எனும் சிலுவை அணியா கிறிஸ்துவரையும் இணைப்பது எளிதானது
தமிழக நிலை பயங்கரமானது, இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்து பதுங்கிய பத்மநாபா சிவராசனால் கொல்லபட்டான்
சிவராசன் பிரபாகரனின் நம்பிக்கைகுரிய தளபதி ஆனால் மிக மிக மோசமான மனநிலை கொண்டவன்
இவனோடுதான் பேரரிவாளன் , நளினி, முருகன் ஆகியோர் பெரும் நட்பு கொண்டிருந்தனர், சிவராசன் பத்மநாபா கொலையிலே கைதானான், ஆனால் திமுக அரசு அவனை விடுவித்தது என்பது தியரி
1990ல் காட்சிகள் மாறின, சோவியத் யூனியன் எனும் வல்லரசு இல்லாமல் போனது, இலங்கையில் நடந்த சோவியத் அமெரிக்க சண்டையான தமிழ் சிங்களவர் சண்டையில் சமநிலை பறிபோனது
உண்மையில் சோவியத்தின் வீழ்ச்சியே இந்திய அமைதிபடை வெளியேற காரணம், விபி சிங் எனும் குழப்பவாதி அதனை இன்னும் எளிதாக்கினார்
இதனால் புலிகள் கை ஓங்கியது, சென்னையில் துணிந்து பத்மநாபாவினை கொன்றபின்னும் ஆட்டம் அதிகரித்தது
இந்நிலையில்தான் விபி சிங்கின் அரசு கவிழ்ந்து சந்திர்சேகர் பிரதமரானார், திமுக அரசு டிஸ்மிஸ் செய்யபட்டது
அடுத்த முதல்வர் கருணாநிதியா ஜெயவா என இங்கு சவால் விடபட, ராஜிவ் தன் போபர்ஸ் கறையினை கழுவ முயன்றார்
இன்னொரு பக்கம் அத்வாணி பாஜகவினை வேகமாக வளர்த்தார், இந்திரா இல்லை ராஜிவின் குளறுபடிகள் விபிசிங் அழிச்சாட்டியம் என பாஜக வளர ஆரம்பித்தது
ராஜிவ் தன் ஊழல் அவபெயரை அகற்ற குவாத்ரோச்சியினை இந்தியா கொண்டுவர முயன்றார், ஆனால் அந்த ஆயுத வியாபாரி தலைமறைவு என்ற பெயரில் வெளிநாட்டில் உல்லாசமாக இருந்தான்
அவன் சிக்கினால் பல மில்லியன் டாலர்கள் பறிமுதல் செய்யபட வேண்டும் அவ்வளவு பெரும் கமிஷன் தொகை சுருட்டபட்டிருந்தது
ராஜிவ் இது போக பாலஸ்தீன பிரச்சினையில் தலையிட்டு இஸ்ரேலின் கோபத்தையும் சம்பாதித்தார், சோவியத் இல்லா நிலையில் அமெரிக்காவினை எதிர்ப்பது தவறு என்பதும் அவருக்கு புரியவில்லை
இன்னொரு பக்கம் தமிழகத்தில் ராஜிவோடு கூட்டணி வைத்த நடராஜன் அதிமுக ரகசிய புலி ஆதரவும் கொண்டிருந்தது
திமுக பகிரங்கமாக புலி ஆதரவு கொண்டிருந்தது
ராஜிவ் வாக்குறுதிகளை அள்ளி வீசினார், குவாட்ரோச்சியினை பிடிப்பது திமுகவினை அடக்குவது, புலிகளை வழிக்கு கொண்டுவருவது என அவரின் வாக்குறுதி நீண்டது
அவரின் எதிரிகளெல்லாம் ஒரே புள்ளியில் இணைய இது வழிவகுத்தது
புலிகள் தமிழக வெடி தொழிற்சாலை, மருத்துவமனை, ஊடக நிதி என எல்லா இடங்களிலும் ஊடுருவினர், பெட்ரோல் நிலையங்களும் பினாமிகளாக நடத்தினர்
இதனால் வெடிபொருள், மருந்து, பெட்ரோல் எல்லாம் இலங்கைக்கு கடத்தபட்டன, தமிழக ஊடகங்கள் தமிழுனர்வு என்பது புலிகளை ஆதரிப்பது என விளக்கி கொண்டிருந்தது
அப்பொழுது குடியரசு தலைவர் ஆட்சி நடந்தது, தமிழகம் ராணுவ கட்டுபாட்டில் இருந்திருக்க வேண்டும் ஆனால் அதை செய்யாமல் போனதால் புலிகளின் வருகையும் நடமாட்டமும் எளிதாக இருந்தன
கொலைகாரன் சிவராசன் தனுவோடும் அதிரையோடும் சுபாவோடும் வந்தான் இந்த மூன்று பெண்களும் மனித வெடிகுண்டுகளே
அவனின் இலக்கு திருப்பெரும்புதூராக இருந்தாலும், அங்கு ராஜிவ் தப்பினால் மறுநாள் கிருஷ்ணகிரியில் நடக்கும் கூட்டத்தில் ஜெயா சோராமசாமி வழப்பாடி ராமமூர்த்தி என் எல்லோரோடும் ராஜிவினை கொல்வது திட்டமாய் இருந்தது
ஆதிரை வெடிகுண்டோடு டெல்லியிலே காதத்திருந்தாள், இந்த இடங்களில் தப்பினால் ராஜிவ் டெல்லியிலே வெடிக்கபடுவார்
இந்த இடத்தில் திருபெரும்புதூர் எளிதானது, அந்த கூட்டம் மரகதம் சந்திரசேகர் எனும் காங்கிரஸ் பிரமுகரால் ஏற்பாடு செய்யபட்டாலும் மரகதத்தின் அபாயமான முகம் அவரின் மகள் இலங்கை ஜெயவர்த்தனே மகனை மண்ந்திருந்தார்
அதாவது ராஜிவின் சர்வதேச எதிரியுடன் சம்பந்தம் செய்திருந்தார் மரகதம் அம்மையார், இதுதான் இன்றளவும் சர்சை அங்குதான் ஊடுருவினான் சிவராசன்
அவன் ஏன் நளினி, பேரரிவாளனை கூட்டி அலைந்தான் என்றால் என்னதான் தனு மற்றும் சுபாவின் தமிழ் அவர்களை ஈழமக்கள் என காட்டிகொடுக்கும் என அஞ்சினான்
ராஜிவ் கொலையினை மனித வெடிகுண்டு மூலம் நடத்துவதால் அது மர்மமாகவே முடிந்துவிடும் என்றும் சிந்தித்தான்
ஆனால் அவன் செய்தது இருபெரும் தவறு முதலாவது இந்திய தமிழர்க்ளை உள்ளே இழுத்தது இரண்டாவது எல்லாவற்றையும் படம்பிடிக்க அந்த ஹரிபாவுவினை அழைத்து சென்றது
இதுதான் தவறு, வெடிபொருளின் வீச்சு தாக்குதல் அளவு எல்லாம் ஆவணபடுத்த படம் என சொல்லி கொண்டாலும் முழு பைத்த்தியகாரதமான சிந்தனை இது, காரணம் வெடித்தபின் எல்லா ஊடகமும் செய்தி வெளியிடும் அதை கண்டாலே போதுமானது
ஆனால் விதி இந்த பலவீனத்தை அனுமதித்தது
ஒருவகையில் பிரபாகரனுக்கு ஒரு மனவியாதி இருந்ததாகவும், எல்லா தாக்குதல் படங்களையும் தாக்குதலுக்கு முன்பும் பின்பும் பார்த்து ரசிப்பதுமான ஒரு வியாதி இருந்ததாக செய்தி உண்டு, ஒரு உயிர் கடைசியில் தவிப்பதை ரசிக்கும் கொடூரம் இது
இதுதான் அங்கு வினையாயிற்று
சிவராசன் திட்டபடி திருபெரும்புதூரில் ராஜிவ் 17 பேரோடு கொல்லபட்டார், உலகமே அதிர்ந்தது
மனித வெடிகுண்டால் கொல்லபட்ட முதல் தலைவர் ராஜிவ் எனும் வகையில் உலகமே இதனை குழப்பமாக கண்டது, ஒரு கட்டத்தில் அமெரிக்க கென்னடி கொலைபோல இது முடிந்துவிடும் என்றுதான் கருதினார்கள்
ஆனால் அந்த கேமராவும் ஆவணங்களும் வெளிவர வெளிவர கோணம் மாறிற்று
இந்த விவகாரத்தில் இரு தவறுகளை இந்தியா செய்தது, நிச்சயம் அதில் சதி இருக்கலாம்,சுத்தமான இந்தியன் அதை செய்திருக்க வாய்ப்பில்லை எங்கோ அன்னிய சக்தி ஊடுருவி அதனை செய்தது
ஆம், பஞ்சாபில் தமிழக வீரர்களையும் இலங்கையில் பஞ்சாபிய வீரர்களையும் இந்தியா அனுப்பும், அப்பொழுதுதான் பாகுபாடற்ற நடவடிக்கை இருக்கும்
பொற்கோவிலுக்குள் பஞ்சாபியரையும், ஈழத்துக்கு தமிழர் படைபிரிவும் அனுப்பினால் அது ஆபத்து
அப்படி இந்த விசாரணை தமிழர் அல்லாத ஒரு குழுவால் நடந்திருக்க வேண்டும் அதுவும் விசாரணை தலமையகம் தமிழகத்துக்கு அப்பால் அமைந்திருக்க வேண்டும்
ஜெயலலிதா ஊழல் வழக்கை, கனிமொழி ஊழல் வழக்கை தமிழகம் தாண்டி கொண்டு சென்ற இந்திய நீதிதுறை, ராஜிவ் கொலையினை தமிழகத்திலே விசாரிகக் தொடங்கியது அதுவும் தமிழர்களை வைத்து விசாரக்க தொடங்கியது பெரும் தவறு
உண்மையில் இந்த விசாரணை உண்மையான இலக்கினை நோக்கி நகரவில்லை, கருணாநிதியும் வைகோவும் பகிரங்கமாக குற்றம்சாட்டபட்டு விசாரிகக் வேண்டிய கட்டத்தில் ஒரு சக்தி அவர்களை காத்தது
பல பெரியாரிய இயகக்ங்களும் விசாரணைக்கு அழைக்கபடவில்லை
இந்த இடத்தில் கருணாநிதியும் பெரியாரிஸ்டுகளும் தாங்கள் யார் என புலிகளுக்கு காட்டினார்கள்
தமிழகத்தில் நூற்றுகணக்கான புலிகள் தற்கொலை செய்தார்கள், சிவராசனும் சுபாவும் ஓட ஓட தேடபட்டார்கள்
கருணாநிதியும் பெரியாரிஸ்டுகளும் கனத்த மவுனத்தில் இருந்தார்கள், உண்மையில் திமுக தடைசெய்யபடும் அளவு காட்சிகள் இருந்தன
ஆனால் இங்கும் சதி நடந்தது
ராஜிவ் கொலைக்கு காவல் ஏற்பாடு குறைவா என்பதை விசாரிகக் ஜெயின் கமிஷன் வர்மா கமிஷனெல்லாம் அமைக்கபட்டது, இந்த விசாரணை ராஜிவ் புலனாய்வு குழுவால் நடத்தபடவில்லை
அவர்களும் கருணாநிதியினை, வைகோவினை விசாரிக்கவில்லை
இப்படி பல மர்மங்களுடன் நடந்த விசாரணையில் திராவிட கும்பல்கள் தப்பின, காங்கிரசும் இந்த விவகாரத்தில் ஆர்வம் காட்டவில்லை
கொலையினை செய்தது புலிகள் என கைகாட்டிவிட்டு கார்த்திகேயன் ரகோத்தமன் கோஷ்டியும் கடமையினை முடித்திருந்தது
அந்த குற்றபத்திரிகை கூட சரியாக இல்லை, முதல் குற்றவாளி பிரபாகரன் இரண்டாம் குற்றவாளி பொட்டு அம்மன், மூன்றாம் குற்றவாளி பெண்புலி அகிலா, நான்காம் குற்றவாளி சிவராசன் தனு ஐந்தாம் குற்றவாளி என வரிசை நீண்டது
இந்த ஐந்தாம் வரிசையில்தான் நளினியும் இந்த கோஷ்டிகளும் வந்தன
உண்மையில் பேரரிவாளன் சிக்கியதில் இருந்து வாயே திறக்கவில்லை, இவ்வளவுக்கும் அவன் 16 வயதிலே யாழ்பாணம் சென்று வந்தவன், இங்கு சாத்தானின் படைகள் என புத்தகம் அச்சிட்டபொழுது அவன் உதவினான்
இந்த புத்தக நிலையத்தில்தான் நளியினின் அண்ணன் பாக்கியநாதன் இருந்தான் அவனாலே முருகன் நளினிக்கு அறிமுகமானன், காதல் அரும்பிற்று
தந்திரகார சிவராசன் தமிழகத்தில் தான் செய்யும் சதி வெளிதெரியாமல் இருக்க பேரரிவாளனையே நிறுத்தினான் அவனுக்கு கவாசாகி பைக் வாங்கி கொடுத்தது முதல் வயர்லெஸ் இயக்க கார் பேட்டரி வாங்கியது, ஆம்னி கார் வாங்கியது எலலமே பேரிவாளன் ஏற்பாடே
அவன் எதுவும் தெரியாது என மவுனித்துவிட்டான் அந்த மவுனம் இன்றுவரை நீள்கின்றது
உண்மையில் சிவராசன் திட்டபடி சிக்கிகொண்டால் எல்லோரும் சாகவேண்டும், அப்படித்தான் அவனும் செத்தான் பல நூறு பேரும் செத்தார்கள்
ஆனால் நளினிக்கு இந்த பயிற்சி இல்லை, முருகன் சாக விரும்பியும் அவள் சாக விடவில்லை, அவள் கர்ப்பவதியுமாகியிருந்தாள் மணம்முடித்திருந்தாள்
இதனால் உண்மையினை சொன்னால் வாழலாம் எனும் ஆசையில் அவளுக்கு தெரிந்தது எல்லாமும் சொன்னாள், ஆனால் அங்குதான் மர்மம் வந்தது
அவள் முதலில் சொன்ன வாக்குமூலத்துக்கும் வந்த வாக்குமூலத்துக்கும் வித்தியாசம் இருந்தது, அவளும் மாற்றபட்டாள் மாறினாள்
பின் விசாரணையில் 26 பேருக்கு தூக்கு என நீதிமன்றம் சொன்னது, இந்த தீர்ப்பில் மாற்று வெடிகுண்டாக வந்த ஆதிரை விடுவிக்கபட்டபொழுதே இது உருப்படாத தீர்ப்பு என்பது தெரிந்தது
பின் மெஜாரிட்டி இல்லா காங்கிரசும் தடுமாற இந்த விவகாரத்தை கண்டுகொளள யாருமில்லை
பிரபாகரனை பொறுத்தவரை எல்லோரும் சாகவேண்டும் என்பதால் இவர்களெல்லாம் ஏன் சாகவில்லை என வருந்தினானே தவிர வேறொன்றும் துக்கமில்லை
உண்மையில் அவனுக்கு இவர்களை காக்கமும் திட்டம் ஏதுமில்லை அவன் தன் போக்கில் இருந்தான்
அவனை பொறுத்தவரை திருப்பெரும்புதூர் குண்டு ஈழ போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வந்த குண்டு , ஆம் அத்தோடு எல்லாம் முடிந்தது
கருணாநிதி இந்த விவகாரத்தை மவுனமாக கையாண்டார், வைகோவினை கட்சியினை விட்டு நீக்கினார், ஜெயின் கமிஷன் முடிவு வந்தபொழுது காங்கிரசிடம் இருந்து விலகிவிட்டு பின் 2001ல் கைகோர்த்து கொண்டார்
ஜெயின் கமிஷன் திமுக செய்த அனைத்து தேசவிரோதங்களையும் பட்டியலிட்டது, இன்று அப்படி ஒரு கமிஷன் இருந்ததே யாருக்கும் தெரியாது
பாஜக செய்யவேண்டியது 21ம் பக்கம் தொடர்ச்சி தேடுதலை நிறுத்திவிட்டு ஜெயின் கமிஷன் அறிக்கையினை வெளிகொண்டுவருவது, ஆனால் அதை அண்ணாமலை செய்வாரா என்பது தெரியவில்லை
பின் 26 பேரின் தண்டனை 7 பேர் என்றானது
அந்த 7 பேரில் 4 அந்நிய நாட்டவர் இருந்தும் அது 7 தமிழர் விடுதலை என ஒப்பாரியானது
புலிகள் 2001க்கு பின் தங்கள் நகர்வை மாற்றினார்கள், அதாவது அமெரிக்க இரட்டை கோபுரம் தகர்க்கபட்டபின் உலகெங்கும் தீவிரவாதம் ஒழியும் நிலையில் தமிழகத்தில் மெல்ல தலையிட தொடங்கினார்கள்
சினிமா கும்பல் மூலம் ஊடுருவினார்கள், அரசியல் முகங்களை உருவாக்கினார்கள், அப்பொழுது இந்த 7 பேரும் மறுபடியும் பரபரப்பானார்கள்
உண்மையில் இந்த 7 பேரும் பாவம் அல்ல, பரிதாபம் அல்ல. காலத்துக்கும் சம்பாதிக்க முடியாததை சிறையில் இருந்தபொழுது பெற்றுகொண்டார்கள்
நளினி மகள் லண்டனில் டாக்டரானார், பேரரிவாளன் குடும்பத்துக்கு எல்லா நிதியும் கொட்டிற்று
ஆக மறைமுகமாக கூலி அதிகம் கிடைத்தது , அப்படியே தமிழகத்தில் தமிழர் அரசியலும் நடந்தது
இப்பொழுது இந்திய சட்டங்களின் பலவீனபடி இவர்கள் விடுதலை செய்யபட்டிருக்கின்றார்கள்
உண்மையில் இவர்கள் அம்புகள் என கூட சொல்லமுடியாது அபபறை துணிகள்தான், இவர்களில் சிலருக்கு சதி தெரிந்தும் தடுக்கவில்லை என்பதை விட பெரிதாக குற்றம்சாட்ட முடியாது, சாட்டிய குற்றத்தையும் முதலிலே நிறைவேற்றியிருந்தால் சிக்கல் இல்லை
ஆனால் எல்லாமே அரசியல் , காங்கிரஸின் குழப்பவாதம், சோனியா ஏன் இப்படி இருந்தார் எனும் மர்மம் என விடை தெரியா கேள்விகள் ஏராளம்
இந்த வழக்கின் பிரதான குற்றவாளி பிரபாகரன் இல்லை அவனோடு சேர்ந்த இயக்கமும் இல்லை எனும் வகையில் முதல் குற்றவாளி இல்லை என்பதால் வீரியம் குறைந்த வழக்கு இது
சரி ராஜிவ் கொலையால் பிரபாரன் நினைத்தது நடந்ததா என்றால் கொஞ்சகாலம் நடந்தது
இந்த கொலையால் ஈழத்தில் இருந்து இந்தியா ஒதுங்கியது, குவாட்ரோச்சி தென்கிழக்கு ஆசியாவிலே பதுங்கி இருந்து புலிகளுக்கு ஆயுதம் அள்ளி கொடுத்தான்
ஆனால் இந்தியா ஒதுங்கியதும் சந்திரிகா யாழ்பாணத்தை புலிகளிடம் இருந்து மீட்டார், கடைசிவரை அதை பிரபாகரனால் மீட்க முடியவில்லை
1998ல் பிரபாகரனின் பெரு வெற்றியான ஆனையிறவு வெற்றியும் வீணாய் போனது, வாஜ்பாய் அரசு யாழ்பாணத்தை கைபற்ற விடவில்லை
அப்பொழுது வாஜ்பாய் அரசில் இருந்த வைகோவும் கருணாநிதியும் கனத்த மவுனமே காட்டினார்கள்
பின் புலிகளை தொடமுடியாதபடி இந்திய அரசுக்கு நிலமைகள் மாறின, பாஜக பலமான கட்சியாக உருமாறியபின் காங்கிரஸால் வெளிநாட்டு கொள்கைகளை மாற்றமுடியவில்லை
2001 முதல் 2006 வரை புலிகளால் தமிழகத்தில் சீமான் போன்ற கோமாளிகளை உருவாக்க முடிந்ததே தவிர வேறேதும் செய்யமுடியவில்லை
ராஜபக்சே யுத்தம் தொடங்கியபொழுதும் காங்கிரசுக்கு புலிகள் மேல் அனுதாபம் இருந்தது நிஜம், அந்த மர்மம் இன்றுவரை புரியவில்லை
புலிகள் தலைவனை சரணடைய சொல்லி அவர்கள் கேட்டது நிஜம், புலி தலமை யோசித்ததும் நிஜம்
ஆனால் 1980களை போல பெரும் தமிழக புரட்சி வெடித்து தன்னை காக்கும் என பிரபாகரன் நம்பினான், திருமா வைகோ ராமதாஸ் சீமான் போன்றவர்கள் டெல்லியினை ஆட்டிவைப்பார்கள் என நினைத்தான்
அவனால் 1980கள நிலவரத்துக்கும் 2009 நிலவரத்துக்குமான வித்தியாசத்தை உணரமுடியவில்லை
முக்கியமாக கருணாநிதி 1989ல் தன் ஆட்சிக்கு உலைவைத்த பிரபாகரனை சரியாக பழிவாங்கி வஞ்சம் தீர்த்தார்
இன்று பிரபாகரன் இல்லை, ராஜிவ் இல்லை, ஆனால் ஈழபிரச்சினை 1980ம் ஆண்டை விட மிக மோசமான பின்னடைவில் இருக்கின்றது
ஈழம் என பேசிய எல்லோரையும் கொன்று இந்தியாவினையும் அப்புறடுத்தி கடைசியில் தானும் செத்து ஒழிந்தான் பிரபாகரன்
இன்று இந்திய இலங்கை ஒப்பந்தம் பற்றியோ தமிழர் உரிமை பற்றி பேசவோ இரு பக்கமும் யாரும் இல்லை என்பதுதான் பிரபாகரன் செய்த முட்டாள்தனத்தின் உச்ச காட்சிகள்
ஆக இந்திரா தன்னை அறியாமல் செய்த தவறு எஙெல்லாமோ சுற்றி அவர் மகனும் கொல்லபட்டு பின் யார் யரெல்லாமோ கொல்லபட்டு இந்த 7 பேரும் வெளிவரவும் ஆயிற்று
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் அதுதான் விஷயம்
ஆம், பிரபாகரனின் நடவடிக்கைகள் எந்த அளவு சிங்களத்துக்கு சார்பாக இருந்ததென்றால் அவன் தமிழனுக்கு போராடுவதாக சொல்லிகொண்டே சிங்களருக்குத்தான் நன்மை செய்தான்
இனி பாருங்கள் இந்த 4 இலங்கையர்களும் ஏன் இலங்கை மருமகளான நளினியும் இலங்கை சென்றால் சிங்களவர் தரப்பில் பெரும் வரவேற்பு கொடுத்தாலும் ஆச்சரியமில்லை
ஆம், அன்று சிங்களன் விஜயதவமுனி எனும் கடற்படை வீரனால் கொல்லமுடியாத ராஜிவினை, சிங்களனால் கொல்லமுடியாத ராஜிவினை கொன்ற சாதனையாளர்கள் இவர்கள், சிங்கள தீவினை காத்த தியாகிகள் இவர்கள்
அவ்வகையில் அவர்களுக்கு அங்கு பெரும் வரவேற்பு இருக்கலாம்
இதனை இங்குள்ள தமிழ் அமைப்புக்கள் எப்படி எடுக்கும் என்பதுதான் விஷயம்
தமிழக தமிழர்களாலும் இலங்கை சிங்களவர்களாலும் ஒரு புலி ஆதரவு கொலைகார கோஷ்டி கொண்டாடபட்டால் அது எம்மாதிரியான நிலை என்பது மகா குழப்பமானது
ஆம், அதுதான் சுவாரஸ்யம், இங்கு சிங்களவன் செய்யவேண்டிய கொலையினை தமிழன் செய்ததும் அதனை தமிழர்களே ஏதோ சாதனை போல் கொண்டாட்வதெல்லாம் அவமானத்தின் உச்சம்
நட்ந்த கொலையும் விடுத்லையும் இனி கோவை வெடிகுண்டு குற்றவாளிகள் வெளிவர உற்சாகம் கொடுக்கலாம்
இந்த ராஜிவ் கொலை கொடுத்த எச்சரிக்கை ஏராளம், அதனில் தமிழகம் கொலை செய்துவிட்டு தப்ப பாதுகாப்பான மாகாணம் எனும் பிம்பம் வருவது மிகபெரிய வலி
இந்திய சட்டங்கள் எவ்வளவு பலவீனமானவை, மிக பலமான இந்திய சிபிஐயும் உளவுதுறையும் யாருடைய வழிகாட்டலிலோ உண்மை குற்றவாளிகளை தப்ப வைத்துவிட்டு சம்பிரதாயத்துக்கு சிலரை பிடித்து அவர்களையும் தப்ப வைத்தாயிற்று
உண்மையில் 1991லே உண்மையான விசாரணை நடந்து இந்த பெரும் வலியின் பின்னால் இருக்கும் கட்சிகளையும் தலமைகளையும் அடையாளம் காட்டியிருந்தால் இந்நேரம் தமிழகம் தேசியத்தில் மலர்ந்திருக்கும்
அவ்வகையில் 1960களில் திராவிடம் மேல் காட்டிய அதே கரிசனத்தை 1991லும் காங்கிரஸ் காட்டியது என்பதுதான் நிஜம், அது ஏன் என்பதெல்லாம் விடையில்லா கேள்வி
ஒரு சர்வதேச பிரச்சினையில் தமிழகத்தை இழுத்துவிட்டு , தமிழக மிஷனரிகள் ஈழத்து மிஷனரிகள் சக்தி தெரியாமல் சிக்கி கொண்டார் இந்திரா, அந்த மிஷனரி திராவிட பெரு நெருப்பினை எப்படி அணைபது என தெரியாமல் அவர் தவித்தார்
தாய் செய்த தவறை திருத்தப்போய் சிங்களன் கையால் சாகவேண்டிய ராஜிவ் தமிழன் கையால் செத்து, ஏன் சாகின்றோம் என தெரியாமலே செத்து, யாருக்காக சாகின்றோம் என தெரியாமலே செத்து ஜெயலலிதாவினை முதல்வராக்கினார்
இந்திரா செய்த குழப்பம் , உலக அரசியலில் மட்டமான தமிழக அரசியலை கலந்த குழப்பமே அவர் மகனின் உயிரை காவு வாங்கிற்று அதனையும் அவர் காங்கிரஸ் கட்சி பல மர்மங்கள் புடை சூழ மறைத்து பின் கொலைகாரனை ராஜபக்சே பன்னாட்டு உதவியுடன் கொல்லும் பொழுதும் பரிதாபமாக பார்த்து கொண்டிருந்ததும்ம் நிஜம்
கடைசி வரை காங்கிரசுக்கு திராவிடம் அழிவதிலும் அவர்களின் ஆயுத முகமான புலிகள் அழிவதிலும் முழு விருப்பம் இல்லை என்பதுதான் நிஜம், இந்த 7 பேர் மேலான பலமற்ற குற்றசாட்டும் அவர்கள் விடுதலையும் அதைத்தான் சொல்கின்றது
ஜெயின் கமிஷன் திமுக செய்த அனைத்து தேசவிரோதங்களையும் பட்டியலிட்டது, இன்று அப்படி ஒரு கமிஷன் இருந்ததே யாருக்கும் தெரியாது
பாஜக செய்யவேண்டியது 21ம் பக்கம் தொடர்ச்சி தேடுதலை நிறுத்திவிட்டு ஜெயின் கமிஷன் அறிக்கையினை வெளிகொண்டுவருவது, ஆனால் அதை அண்ணாமலை செய்வாரா என்பது தெரியவில்லை