பிர்சா முண்டா
18ம் நூற்றாண்டில் பொதுவுடமை பேசியவன் கார்ல் மார்க்ஸ் என்றாலும் அவன் ஐரோப்பாவில் எழுதி பேசிகொண்டிருந்தானே தவிர காரியத்தில் இறங்கவில்லை
எல்லாம் பேச்சோடு நிறுத்திகொண்டான் அவனின் சில கூட்டாளிகளும் அவ்வகையே
1919ல்தால் லெனின் ரஷ்யாவில் அடித்து பிடித்து ஆட்சியினை மாற்றினான், மாவோ, காஸ்ட்ரோ, ஹோ சி மின் என எல்லாரும் லெனினுக்கு பின்னர்தான் வந்தார்கள்
ஆனால் 1890களிலே ஒரு இந்தியன் கம்யூனிசம் பேசினான், சோவியத் யூனியனுக்கு முன்பே அவன் உலகில் பொதுவுடமை இயக்கத்தை நிறுவ பார்த்தான் என்றால் அவன் ஒரு இந்தியன்
ஆம், 1890களில் முதன் முதலில் நிலவுடமை சமூகத்துக்கும் அவர்களின் மேலாதிக்கமான ஆங்கிலேயருக்கும் எதிராக ஒரு இந்தியன் கொந்தளித்து பொதுவுடமை பேசினான் அவன் பெயர் பிர்சா முண்டா
இன்றைய பீகார் ஜார்கண்ட் எல்லை பகுதியில் ஒரு பழங்குடி இனத்தில் அவன் பிறந்தான், வெள்ளையன் இத்தேசத்தை சுரண்டுவதையும் அவனை பயன்படுத்தி ஒரு பணக்கார கூட்டம் பழங்குடி மக்களை மிரட்டி வேலை வாங்கி இருக்கும் சொத்துக்களையும் வாங்குவதை கண்டு கொதித்தெழுதான்
“உழுபவனுக்கு நிலம் சொந்தம்” என முதலில் சொன்னது அவனே
அவன் அப்படி முழங்கும் பொழுது உலகில் எந்த பொதுவுடமைவாதியும் களத்தில் இல்லை,
ஆம், முதலில் சொன்னவன் முண்டா, சொன்னதோடு மட்டுமல்லாமல் களத்தில் இறங்கினான், ஒரு கட்டத்தில் இந்த கொடுமைக்கெல்லாம் காரணம் ஆங்கில ஆட்சி என உணர்ந்தான்
அவனுக்கு 20 வயதிருக்கும் பொழுது பெரும் பஞ்சம் தாக்கிற்று, 1890களில் வந்த பஞ்சம் அது, அந்நேரமும் வெள்ளை அரசின் வரிகொடுமை உச்சத்தில் இருக்க ஆயுதம் ஏந்தினான் முண்டா
பழங்குடியினரை திரட்டி அவன் காட்டிய வீரபோர் வரலாற்றில் முக்கியமானது, குறிபிடதக்க வெற்றிகளும் அவன் பெற்றான்
ஆனாலும் ஆங்கில அரசு அவனை கலககக்காரன் என முத்திரையிட்டு பிடித்து விசாரணை இன்றியே கொன்றது
சாகும் பொழுது அவனுக்கு வயது வெறும் 25
ஆம் பகத்சிங் போலவே இந்திய வரலாற்றில் நிற்பவன் அவன், அந்த மாவீரனுக்கு பழங்குடி அடையாளம் கொடுத்து அப்படியே மறைத்துவிட்டார்கள் நம் வரலாற்றை எழுதியவர்கள்
போராட வருபவன் கூட பணக்கார குடும்பத்தில் இருந்துதான் வரவேண்டும் என வரலாற்றை எழுதும் கூட்டம் இந்தியாவில்தான் இருக்கின்றது
நாடாளுமன்றத்தில் அவன் படம் திறக்கபட்டு அவனின் பிறந்த நாள் பழங்குடியினர் நாளாக கொண்டாடபடுகின்றது
படிப்பறிவோ, பெரும் குடும்ப செல்வாக்கோ இல்லாமல் இளமையிலே வஞ்சிக்கபட்ட மக்களுக்காய் போராடி ஆங்கிலேயனை எதிர்த்து 25 வயதிலே செத்தவன் அவன்
கவனியுங்கள், அவன் ஆங்கிலேயரை எதிர்த்து போராடினான் என்றால் பழங்குடி மக்களை அந்த மிலேச்ச கோஷ்டி எப்படி சுரண்டியிருக்கும்
அப்படியான ஆங்கிலேயன் இந்தியாவுக்கு நன்மை செய்தான், அவன் வரவில்லையென்றால் எதுவுமில்லை என புலம்பும் தமிழக கோஷ்டிகள் அந்த அளவு உண்மையினை மறைத்து வெள்ளையன் கைகூலியாக இருந்திருக்கும்?
