19ம் நூற்றாண்டின் சில மனிதர்கள் மறக்கமுடியாதவர்கள், அவர்களின் போராட்ட வாழ்வும் அவர்கள் செய்த அளப்பரிய சாதனையும் , அவர்கள் பதித்த முத்திரையும் மகத்தானது

தமிழகத்தில் பிராமணர்மேல் வீசபட்ட அவதூறு, அதுவும் 19ம் நூற்றாண்டில் வீசபட்ட அவதூறு கடுமையானது, இதே அவதூறுகள் 16ம் நூற்றாண்டில் கோவாவில் பிராமணர் மேல் வீசபட்டது, பின் அவுரங்கசீப்பால் அதே பிராமணர்மேல் வீசபட்டது அதற்கு காரணம் அவர்களே இந்துமதத்தின் ஆதாரம் என்பது ஒன்றும் ரகசியமல்ல‌

வீரசிவாஜியின் எழுச்சி அதை தடுத்து இந்துமதத்தை நிறுத்திற்று, ஆனால் 19ம் நூற்றாண்டில் அப்படி யாரும் இங்கு எழவில்லைஎன்பதால் இன்றுவரை பிராமணர்கள் எளிதான இந்து துவேஷ இலக்காகிவிட்டார்கள்

செட்டி எனும் வியாபார சமூகம் போல, இல்லை நாயக்கர் நாயுடு இன்னபிற 13ம் நூற்றாண்டு நாயக்க வம்ச தொடர்ச்சி நிலசுவாந்தார் போல பிராமணர்கள் பரம்பரை பணக்காரர்கள் அல்ல, அவர்கள் கோவிலிலும் அரசனிடமும் அண்டிவாழ்ந்த சாதி

நிரந்தர சொத்தோ வருமானமோ அவர்களுக்கு எக்காலமுமில்லை, அரசன் இருந்தவரை அவர்களுக்கு கொஞ்சம் காவலும் பாதுகாப்பும் இருந்தது, இந்து அரசர்கள் வீழ அதுவுமில்லை

18ம் நூற்றாண்டில் அந்த இனம் வறுமையில்தான் இருந்தது ஆனாலும் போராடியது சிலர் எழுந்தார்கள் பலர் வீழ்ந்தார்கள், கிடைத்த வாய்ப்பு கல்வியோ தொழில்துறையோ அது தன்னால் ஆனமட்டும் போராடி எழுந்தது

தொழில்துறையில் டிவி.சுந்தரம் அய்யங்கார் போல் பலர் எழுந்தார்கள் அதே நேரம் பாரதியாரின் சின்னசாமி ஐயர் போல் பலர் படுமோசமாக தோற்றார்கள் என்பதும் வரலாறு

அந்த இனம் வறுமையில்தான் இருந்தது, ஆட்சி பிரிட்டிசாரிடம் சென்ற நிலையில் அவன் வைத்த சில கல்விகளில் அது போராடி ஆங்கிலமும் இன்னபிற மொழியும் கற்று தன்னை நிறுத்திகொள்ள தவித்தது, குடும்ப வியாபாரமோ குலதொழிலோ நிலமோ இல்லா அச்சமூகத்துக்கு அரசனும் இந்துமதமும் வீழ்ந்தபின் வேறு வழி தெரியவில்லை

வறுமை பிராமணரின் பொது சொத்தானது, சீனிவாச ராமானுஜம் எனும் கணிதமேதை வாழ்வே அதற்கு சான்று, எனினும் போராடிய சிலர் தங்கள் உழைப்பால் மேல் எழுந்தனர்

அவர்களில் ஒருவர்தான் அந்த எஸ்.எஸ் வாசன் எனும் சுப்பிரமணிய சீனிவாசன், திருவாரூர் அருகே திருதுறைபூண்டியில் 1904ல் பிறந்தவர் அவர்.

அதிகம் அவர் படிக்கவில்லை பள்ளிக்குமேல் படிக்க வசதியில்லை. அவரின் ஒரே பலம் சமஸ்கிருதமும் தமிழும் அறிந்த அவர் தாயார், அவர் சொல்லி கொடுத்த தமிழும், சமஸ்கிருதமும் அது கலந்த கதைகளும் ஸ்லோகமும் ஆழமாக இளம் வயதிலே சீனிவாசன் மனதில் பதிந்தது போராடி ஆங்கிலமும் கற்றுகொண்டார்

குடும்ப வறுமை காரணமாக 16 வயதிலே வேலை செய்ய ஆரம்பித்தவர் வாசன், பத்திரிகைகள் அறிமுகமான அக்காலத்தில் பத்திரிகைகளுக்கு விளம்பரம் வாங்கிதரும் பணியினை செய்தார், ஈரோட்டு ராம்சாமியின் குடியரசு பத்திரிகைக்கு விளம்பரம் வாங்கிதந்த அளவு அவர் வாழ்வு போராட்டத்தில் இருந்தது

இந்த போராட்ட வாழ்வில் பத்திரிகைகளுக்கு அவர் நிறைய எழுதவேண்டியும் இருந்தது, மெல்ல மெல்ல எழுத்து திறனை உணர்ந்து “இல்லற ரகசியங்கள்” என பரபரப்பு நூலை 20 வயதிலே எழுதினார், அது அவர்மேல் கவனத்தை கொடுத்தாலும் காசு கொடுக்கவில்லை மறுபடி பத்திரிகை விளம்பரங்களுக்கே வந்தார்

வாசனின் மிகபெரிய பலம் அவரின் சேமிப்பு, நாலணா எட்டணா என சம்பளம் இருந்த காலங்களிலே அவரின் சேமிப்பு பிரதானமாக இருந்தது

அவருக்கு 23 வயதான பொழுது அவருக்கு வரவேண்டிய பணம் ஒரு பத்திரிகையில் இருந்து வரவில்லை, ஆத்திரத்தில் அந்த பத்திரிகை அலுவலகத்துக்கே அவர் சென்றபொழுது பத்திரிகை அலுவலகம் பூட்டி கிடந்தது, நஷ்டத்தால் அதை நடத்த முடியாமல் வீட்டில் முடங்கி கிடந்தார் அதன் உரிமையாளர் பூதூர் வைத்தியநாதய்யர்

வைத்தியநாதய்யர் மனதால் நல்லவர், மிக கடுமையான உழைப்பும் முன்னேறவேண்டும் எனும் ஆசையும் திறமையும் கொண்ட சீனிவாசனை அவருக்கு பிடித்திருந்தது , தன் பத்திரிகையினை அவரையே ஏற்று நடத்துமாறு விற்க முன்வந்தார்

அந்த பத்திரிகையின் பெயர் “ஆனந்த விகடன்”

ஒரு எழுத்துக்கு 25 ரூபாய் என 200 ரூபாய்க்கு அதை வாங்கினார் வாசன், அன்று 200 ரூபாய் மிகபெரிய தொகை, அவ்வளவு பணம் வாசனிடம் இல்லை எனினும் பாதி கொடுத்து மீதியினை மெல்ல மெல்ல கொடுப்பதாக எழுதி கொடுத்து பத்திரிகையினை ஏற்றார்

பொதுவாக தொழில் அதிபர்கள் உருவான விதம் இரண்டு, முதலாவது அவர்களே ஒரு தொழிலை தொடங்கி வெற்றி பெறுவது, இரண்டாவது தோற்றுபோன தொழிலைஎடுத்து வெற்றிகரமாக முடிப்பது

இதனில் இரண்டாவது விஷயத்தில் சவால் அதிகம்

சீனிவாசன் அதைத்தான் தொட்டார், அவரின் வாழ்வின் ராசியும் அதுதான், தோற்று போன “ஆனந்த விகடன்” பத்திரிகையினை வாங்கி மாதம் ஒரு முறை வந்த பத்திரிகையினை இருமுறையாக்கினார்

1928ல் விகடன் அவர் கைக்கு வந்தது, சுப்பிரமணிய சீனிவாசன் எனும் தன் பெயரை எஸ்.எஸ் வாசன் என மாற்றிகொண்டார்

வாசனின் மிகபெரிய திருப்புமுனை உண்மையில் விகடன் பத்திரிகை அல்ல, அந்த பத்திரிகைக்கு மிக சரியான நபராக எழுத்தாளர் கல்கியினை அமர்த்தியது

விகடனில் அவர் எழுதிய “தியாகபூமி” தொடர்கதை விகடனின் வியாபாரத்தை 1930களில் உயரத்துக்கு கொண்டு சென்றது, தொடர்ந்து திறமையான எழுத்தாளர்களையெல்லாம் ஊக்குவித்தார்

சோழமண்டல திறமைசாலிகளுக்கு அவர் அடைக்கலாமாக திகழ்ந்தார், காவேரிகரை கதைகள் சோழர் கால கதைகளுக்கு தனி இடம் அவரால் கொடுக்கபட்டது

வாசனின் மிக முக்கிய பலம் அவரின் பத்திரிகையில் நாட்டுபற்றும் தமிழ்பற்றும் இந்து அபிமானமும் இருக்குமாறு பார்த்துகொண்டது , மதமாற்றமும் திராவிட கூப்பாடும் பெருகிய காலத்தில் விகடன் தனித்து தமிழாலும் , இந்து கலாச்சாரத்தாலும் , இந்து அடையாளத்தாலும் தனித்து நின்றது

முழு இந்துக்களும் இந்துக்களுக்காக நடத்திய தேசாபிமான பத்திரிகையாக அது ஜொலித்தது

வாசன் ஒரு வியாபாரி மட்டுமல்ல அழகான எழுத்தாளரும் கூட, 1936ல் அவர் எழுதிய “சதி லீலாவதி” தொடராக வந்து பின் படமானது,

அதை வாசன் தயாரிக்கவில்லை கதை, வசனம் மட்டும் எழுதினார், மருதாசலம் செட்டியாரே அதை தயாரித்தார் அந்த படத்தில் அறிமுகமானவர்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ராமசந்திரன்

எம்.ஜி ராமசந்திரனுக்கு முதன் முதலில் வசனம் எழுதியவர் எஸ்.எஸ் வாசன்

அதன் பின்னும் சினிமாதுறைக்கு அவர் வரவில்லை, அவர் கவனமெல்லாம் விகடனை வளர்ப்பதிலே இருந்தது, அன்றைய காலகட்டத்தில் அதாவது 1940களில் நம்பர் 1 பத்திரிகை விகடன் எனும் நிலை இருந்தது, அதன் அறிவார்ந்த விஷயமும் எழுத்து வன்மையும் ரசனையும் அப்படி

எல்லா தரப்பும் விரும்பிபடிக்கும் பத்திரிகையானது விகடன்

அந்த 1941ம் ஆண்டு கல்கியின் தியாக பூமி கதையினை படமாக எடுத்திருந்தார் கே. சுப்பிரமணியம் அது பெரும் சர்ச்சையாகி பிரிட்டிஷ் அரசால் தடைசெய்யபட்டது

கே.சுப்பிரமணியம் தமிழகத்தின் குறிப்பிடதக்க இயக்குனர், தியாகராஜ பாகவதரையே சினிமாவிற்கு கொண்டு வந்தது அவர்தான், தமிழக சினிமா இயக்குநர்களின் பிதாமகன் அவர்

அவர் “தியாக பூமி” கதையினை கல்கியுடன் சேர்ந்து படமாக்கினார், படத்தில் ஆங்கில அரசுக்கு எதிரான பல பாடல் வசனங்கள் இருந்தன, படம் வெற்றி என்றாலும் பிரிட்டிஷ் அரசு தடை விதிக்க முடிவானது

தமிழகத்தில் பெண்களிடம் “தியாக பூமிசேலை” “தியாக பூமி வளையல்” என கவனத்தை கொடுத்தது அந்தபடம்தான்

தடை உறுதி எனும் நிலையில் படத்தை இலவசமாக மக்களுக்கு போட்டு காட்டினார் சுப்பிரமணியம்,, வாழ்வா சாவா எனும் நிலையில் நாடே அவருக்கு பிரதானமாயிருந்தது, அப்படியும் ஒரு தேசாபிமானி தமிழ் சினிமாவில் இருந்திருக்கின்றார், அப்படியும் ஒரு காலம் இருந்திருக்கின்றது

சினிமாவிலே விடுதலை போராட்டத்தை சொல்லி தன் வாழ்வினையே இழக்கும் நிலைக்கு தள்ளபட்டவர் அந்த சுப்பிரமணியம்

அந்த தேசாபிமானி மகள்தான் பிரபல நாட்டிய தாரகை பத்மா சுப்பிரமணியம் அம்மையார்

பத்மா சுப்பிரமணியம் பிறக்கும் முன்னாலே கடும் சோதனைகாலம் சுப்பிரமணியத்துக்கு தொடங்கியிருந்தது, பிரிட்டிஷ் அரசு கொடுத்த நெருக்கடியால் தியாகபூமி நஷ்டமாகிவிட அவர் இன்னொரு படத்துக்கு தயாரானார்

அப்பொழுதும் சவால் எடுத்தார் சுப்பிரமணியம், அப்பொழுது சென்னையில் படபிடிப்பு ஸ்டூடியோ இல்லை, பம்பாயும் கல்கத்தாவுமே பிரதானமாய் இருந்தது, கல்கத்தா ஸ்டூடியோக்கள் நிரம்பிய இடமாக இருந்தது

இதனால் சென்னையில் ஒரு ஸ்டூடியோ தொடங்க முடிவு செய்தார் சுப்பிரமணியம், “ஸ்பிர்ங் கார்டன்” என காடாக இருந்த இடத்தை வாங்கி ஸ்டுடியோ கட்டினார் “‘மூவிலேண்ட்- ஜெமினி ஸ்டுடியோ” என அதற்கு பெயர்

அது சதியா விபத்தா என இன்றுவரை தெரியவில்லை முழுக்க இயங்குநிலைக்கு வந்த ஸ்டூடியோ எரிந்து சாம்பலானது

சுப்பிரமணியம் மொத்தமாக ஓய்ந்து போக எரிந்த படபிடிப்பு அரங்கம் ஏலத்துக்கு வந்தது, அதை எண்பத்தாறாயிரத்து நானூற்று இருபத்தேழு ரூபாய், பதினோரு அணா, ஒன்பது பைசா என்ற தொகைக்கு ஏலமெடுத்தார் வாசன்

அந்த சாம்பலில் இருந்துதான் பட அதிபர் வாசன் உருவானார், ராஜா முத்தையா செட்டி எனும் அன்றைய தொழிலதிபர் தொடங்கி வைக்க எஸ்.எஸ் வாசனின் சினிமா யுகம் ஆரம்பமானது

வாசனின் வாழ்த்தவேண்டிய முயற்சி நந்தனார், ஒளவையார் போன்ற பாத்திரங்களை நம் கண்முன் நிறுத்தியது

அதுவும் ஒளவையார் படம் அவரின் மாபெரும் தமிழ் பற்றுக்கும், இந்து பற்றுக்கும் உதாரணமான ஒன்று, தன் தாய் சிறுவயதில் சொன்ன ஒளவையார் கதையும் பாடலுமே அதற்கு காரணம் என பின்னாளில் சொன்னார் வாசன்

இன்றுவரை ஓளையார் பற்றி வந்த படம் அதுதான், அது ஒன்றுதான்

அப்படத்தில் அன்று திரைபடம் வேண்டாம் என ஒதுங்கியிருந்த கே.பி சுந்தராம்பாளை அணுகி உங்களை தவிர யாராலும் இப்படத்திற்கு பொருந்தி நடிக்க முடியாது என அழைத்துவந்த வாசனை மறக்க முடியாது

ஒளவையார் எனும் மாபெரும் இந்துதமிழ் சித்தரை நம் கண்முன் நிறுத்தினார் வாசன்

அப்படியே நந்தனார் எனும் நாயன்மாரையும் நிறுத்தினார்

அவரின் ஆகசிறந்த முத்திரை அந்த “சந்திரலேகா” திரைபடம், இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவிலே அன்று அதிக பொருட்செலவுடன் எடுத்த படமாக அது விளங்கிற்று, சர்க்கஸ் கூடாரம் கலைஞர்கள் உடைகள், முரசு நடன செட் என அவர் செலவழித்த தொகை மொத்த சம்பாத்தியத்தையும் விழுங்கி நின்றது

அந்த படம் தயாரிக்கபடும் பொழுது செலவு தாங்காமல் முடங்கிவிட்டார் வாசன், அவரின் மொத்த சொத்தும் அங்கு முதலீட்டாகியும் படம் முடியவில்லை

அந்நேரம் அவரை தாங்கியர் இந்துபத்திரிகை அதிபர் சீனிவாச அய்யங்கார்

2 லட்சம் பட்ஜெட்டில் தொடங்கபட்ட படம் சுமார் 40 லட்சத்தை தாண்டி சென்றபொழுது வாசனே கலங்கி நிற்க, அவர்தான் அவரை தாங்கினார்

படம் பின்னாளில் சிலபல கோடிகள் வசூல் செய்து வாசனை அகில இந்திய அளவிற்கு கொண்டு சென்றதெல்லாம் வரலாறு

இந்தியாவின் மிகபெரிய தயாரிப்பாளராக தமிழன் வாசன் விளங்கினார், தமிழ் திரையுலகம் பெரிதாக கவனிக்கபட அவர் அன்று எடுத்த சந்திரலேகா படமே காரணம்

அதுதான் தமிழகமும் பிரமாண்ட படங்களை கொடுக்கும் என்ற கவனத்தை திருப்பியது, கோலிவுட் அதன் பின்புதான் வளர்ந்தது

‘நந்தனார்’, ‘ஒளவையார்’, ‘மங்கம்மா சபதம்’, ‘சந்திர லேகா’, ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’, ‘இரும்புத்திரை’, ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’,என்று பல வெற்றிப் படங்களைத் தயாரித்ததோடு மட்டுமல்லாமல்,

தமிழில்: 28, தெலுங்கில்: 19, இந்தியில்: 24, பிறமொழிகளில்: 7 என்று மொத்தம் 36 வருடங்களில் ஜெமினி தயாரித்து வெளியிட்ட திரைப்படங்களின் எண்ணிக்கை 78.

ஜெமினி ஸ்டூடியோ என அழியா இடம்பிடித்த்து அவரின் சாம்ராஜ்யம்

எம்ஜிஆரின் முதல் படத்துக்கு வசனம் எழுதிய வாசன், அவரின் 100ம் படமான “ஒளி விளக்கு” ப்டத்தை தயாரித்ததெல்லாம் இருவருக்குமான பூர்வ ஜென்ம பந்தம்

இன்னும் விகடனில் வந்த “தில்லானா மோகனம்பாள்” போன்ற எத்தனையோ கதைகள் படமாகி பெரும் கவனம் பெற்றதெல்லாம் உண்டு

தன் 64 வயதில் எஸ்.எஸ் வாசன் காலமாகும் பொழுது அரசியல் கவுரவ பதவிகளையும் வகித்து கொண்டிருந்தார்

மிக வறுமையான குடும்பத்தில் பிறந்து தன் உழைப்பு ஒன்றாலே உயர்ந்து, “அனந்த விகடன்” “ஜெமினி ஸ்டூடியோ” என மாபெரும் ராஜ்யங்களை அமைத்தவர் வாசன்

அவரின் ஸ்டூடியோவினை பற்றி சொல்லும் விஷயங்கள் சிலாகிப்பானவை , வஞ்சிகோட்டை வாலிபன் போன்ற படங்கள் எடுக்கபட்டபொழுது, ஒளவையார் போன்றவை எடுக்கபட்டபொழுது ஏகபட்ட யானைகள், குதிரைகள் பிரமாண்ட செட்டுகள், விதவிதமான அரசர் கால ஒப்பனைகள் என அது ஒரு அரண்மனை தோற்றத்தை கொடுத்ததாக சொல்வார்கள்

அப்படித்தான் அவர் அரசனை போல வாழ்ந்திருக்கின்றார்

மிக ஏழை குடும்பத்தில் பிறந்து, தன் அயரா உழைப்பாலும் ஆற்றலாலும் சிக்கனத்தாலும் வளர்ந்து பத்திரிகை, சினிமா, எழுத்து, இயக்கம் என பலமுகங்களில் வெற்றி பெற்ற வாசன் ஒரு சகாப்தம்

கல்கி மட்டுமல்ல ஜெயகாந்தன் போன்ற மாபெரும் தேசாபிமான எழுத்தாளர்களையெல்லாம் அதுதான் உருவாக்கியது

எம்ஜிஆர் தொடங்க்கி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட பெரும் நடிகர்களை அவர்தான் உருவாக்கினார்

இன்னும் ஏகபட்ட புகழுக்கும் பெருமைக்கும் சொந்தக்காரர் அவர்

கடைசிவரை நல்ல் இந்துவாக, நல்ல இந்துஸ்தானியாக தன் பத்திரிகையிலும் சினிமாவிலும் கண்டிப்பாக நின்ற அந்த மாமனிதனை மறக்கமுடியாது

அவரும் தேசாபிமானி இந்து அப்படியே தன் பத்திரிகை ஊழியர் சினிமா என எல்லா இடமும் அப்படிபட்டவர்கள் இருக்குமாறு கவனமாக இருந்தார்

கடைசி வரை இந்துமதம், தேசம் என்பதில் மிக கவனமாக அவரின் பத்திரிகையினையும் சினிமாவினையும் கையாண்டார், அந்த பண்பு வாழ்த்துகுரியது

நல்ல பத்திரிகையாளன், நல்ல இந்து , நல்ல இந்தியன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எக்காலமும் அவர் உதாரணமாக திகழ்ந்தார்

அந்த மாமனிதனுக்கு, தமிழக சாதனையாளனுக்கு இன்று பிறந்தநாள்

இன்று விகடன் திசைமாறி இருக்கலாம், அதன் கருத்துக்கள் குழப்பமும் வன்மமும் கொண்டிருக்கலாம், எஸ்.எஸ் வாசன் காட்டிய வழியில் இருந்து அது திசைமாறி சென்றுகொண்டிருக்கலாம்

ஆனால் அவர் காலத்தில் அது கங்கையாய் இருந்தது, அந்த முரசு தேசத்துக்காக ஒலித்துகொண்டிருந்தது என்பதில் மாற்றுகருத்தில்லை

தமிழ் பத்திரிகை நாயகனுக்கும், தமிழ் சினிமாவின் பெருமையினை முதன் முதலில் இந்தியா எங்கும் எடுத்து சொல்லி அதன் இன்றைய வளர்ச்சிக்கு அன்றே பெரும் அடிதளமிட்டவருமான அந்த வாசன் புகழ் எக்காலமும் நிலைத்திருக்கும்

“ஜெமினி” என அவர் தயாரித்த படத்திலெல்லம் வரும் இரு குழலூதும் பொம்மைகள், அவர் பத்திரிகை சினிமா என இரண்டு துறையிலும் வெற்றி தந்தூபி ஊதினார் என்பதை சொல்லிகொண்டே இருக்கும்