சபரிமலை பெண்கள் நுழைவது பெரியார் வெற்றி, அண்ணா வெற்றி என முழங்கிகொண்டிருக்கின்றன‌

இதோ பெரியாரிஸ்டுகள், திராவிட திண்ணை வாசிகள் எல்லாம் சபரிமலை பெண்கள் நுழைவது பெரியார் வெற்றி, அண்ணா வெற்றி என முழங்கிகொண்டிருக்கின்றன‌

இன்னும் நுழையும் நிலை வரவில்லை வருவதும் எளிதல்ல‌ என்பது ஒருபுறம் இருக்கட்டும்

இந்து மத கொண்டாட்டம், கட்டுப்பாடு என்றால் சீறுபவர்கள், கோயில் திருவிழா என்றால் பகுத்தறிவு பேசுபவர்கள். சினிமா நடிகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை, சில ஸ்டார் நடிகர்களின் பிரமாண்ட சினிமா வெளியீட்டை அந்த விளம்பரத்தை கண்டிப்பார்களா என்றால் இல்லை

ஏன்?

இந்த சினிமா நடிகனை வளர்த்துவிடுவது, அவனை தெய்வமாக ஆக்குவது அதனை வைத்து ஆட்சியினை பிடிப்பது என்பதுதான் இவர்கள் கண்ட பகுத்தறிவு

“கடவுளை மற, மனிதனை நினை” என்ற பெரியாரின் கொள்கைகளை “கடவுளை மற, நடினை நினை” என மாற்றிய வாரிசுகள் இவர்கள், பின் எப்படி கண்டிபார்கள்

என்றாவது இவர்கள் எம்ஜிஆர் பிறந்தநாளையோ, ரஜினி பிறந்த நாளையோ கண்டித்து பகுத்தறிவு பேசுவார்கள்? ஒரு காலமும் இல்லை

சீறீரங்கத்து ரங்ராஜனுக்கும், மயிலை கபாலீஸ்வரருக்கும் மாலையிட்டால் கிண்டடிபார்கள், மூட நம்பிக்கை என்பார்கள், ஆனால் எம்ஜிஆர் படத்திற்கு சூடமேற்றினாலோ, ரஜினி படத்திற்கு பாலூற்றினாலோ மர்ம சிரிப்பு சிரிப்பார்கள், இது பகுத்தறிவு அல்ல என சொல்லமாட்டார்கள்.

எல்லாம் சுயநலம், எல்லாம் வோட்டு அரசியல்

இப்பொழுது சபரிமலை அய்யப்பனுக்கு பெண் சமத்துவம் போதிக்க கிளம்பிவிட்டார்கள்

அதற்கு முன் ரோமாபுரி போப் ஆண்டவருக்கு, கலைஞர் பக்கத்திலே இருக்கும் எஸ்ரா சற்குணம எனும் ஆயரை பிடித்து பெண்கள் திருப்பலி நடத்த அனுமதி கொடுங்கள் என கடிதம் எழுதியிருக்கின்றார்களா?

அல்லது கலைஞரும் ஸ்டாலினும் குல்லா போட்டு நோன்பு கஞ்சி குடிக்கும் இமாம்களிடம் இஸ்லாமிய பெண் உரிமை பற்றி பகுத்தறிவு பேசுவார்களா?

ஒரு காலமும் பேசமாட்டார்கள், இவர்களின் பகுத்தறிவு இப்படியாக இந்துக்களை சீண்டுவது மட்டுமே

கேட்டால் பெரியார், திராவிடன் என முழங்குவார்கள்

என்னமோ போங்கடா……………