மாவோ … நமோ …
என்னதான் பெரும் புரட்சி செய்து ஆட்சியினை பிடித்தாலும் திபெத்தினை தவிர மாவோவால் பெரும் வெற்றி பெறவில்லை. அருணாசல பிரதேசத்தை தன்னோடு இணைக்கும் முயற்சி அவருக்கு தோல்வி
சோவியத்துடன் எல்லை தகறாறிலும் பின் வாங்கினார், கொரியபோரும் முழு வெற்றி என சொல்லமுடியாது
தன் பெயர் சீனாவில் சரிவதை கண்ட மாவோ அதிரடியாக மக்கள் மீது பாய்ந்தார்.
சில காரியங்களை செய்தார், அதாவது நகரங்களில் சுற்றிகொண்டிருந்தவர்களிடம் மாவோவின் படையினர் உனது பூர்வீகம் எது என்பார்கள், அந்த சீனர் ஒரு ஊரை சொல்வார்
அவ்வளவுதான் உடனே அந்த ஊருக்கு கிளம்ப்ப சீட்டு எழுதி கொடுப்பார்கள், போகாவிட்டால் அடி
அவன் மூன்றுதலைமுறைக்கு முன்பு ஊரைவிட்டு வந்தவனாக இருப்பான், அவன் பாட்டன் வீடு எது, நிலம் எது என்று கூட அவனுக்கு தெரியாது, ஆனால் அவன் சென்றே ஆகவேண்டும்
இப்படி பெரும் குழப்பத்தை நிகழ்த்தினார் மாவோ, அதற்கு அவர் இட்ட பெயர் கலாச்சார புரட்சி, மக்கள் நொந்து செத்தனர்.
எல்லோரும் விவசாயம் பார்க்கத்தான் இந்த ஏற்பாடு, நம் கலாச்சாரத்தை காக்கத்தான் இந்த ஏற்பாடு என பதில்சொன்னார் மாவோ, கம்யூனிஸ்ட் என்றாலும் இச்சட்டம் நம் திராவிட சிகாமணிகள் சாடிய “குலதொழிலை” ஒத்திருந்தது.
இந்த சாக்கில் தன் அரசியல் எதிரிகளையும் அடக்கி போட்டு தள்ளினார் மாவோ.
பெரும் அதிருப்தி சீனாவில் வெடித்தது, நாடு நாசமாய் போனது ஆயினும் மாவோவினை எதிர்க்க யாருக்கும் துணிவில்லை.
பெரும் இடபெயர்சி, கடும் பட்டினி சாவுகள். அனுபவமில்லாதவன் விவசாயம் செய்து எப்படி உருப்படும்?
தோல்வியினை மனதளவில் ஒப்புகொண்ட மாவோ பின் அமெரிக்காவுடன் உறவுகளை புதுப்பித்துவிட்டு மறைந்தார், அதன் பின் சீனா புத்துயிர் பெற்றது, இது அந்நாட்டு வரலாறு
இங்கே நடக்கும் நிகழ்வுகளை கண்டால் இந்தியாவிலும் அப்படியான மாவோ சாயல் ஆட்சியின் நினைவுக்கு வருகின்றது
மக்களின் சிரமம் அந்த மாவோ செய்த கொடுமைகளைத்தான் நினைவுபடுத்துகின்றது
ஆனால் சீனா கம்யூனிச நாடு, தேர்தல் எல்லாம் இல்லை. இது இந்தியா இன்னும் 3 ஆண்டுகளில் தூர எறிந்துவிடலாம்
அது வரை அழு ஜனமே….