எந்த நாடாவது பருவமழைக்கு விடுமுறை அளிக்கின்றதா?

மழை பெய்தாலே பள்ளி கல்லூரிகளை அடைக்கும் அளவிற்கு கட்டமைப்புகள் உள்ள நாட்டில்தான் மின் அட்டை, போன் பரிவர்த்தனை என பேசிகொள்கின்றார்கள்

மாடிவீட்டுகாரன் போல ஓலை குடிசைக்காரனும் போன் வைத்துகொண்டால் மட்டும் சரி சமமானவர்கள் ஆகிவிட முடியாது

எத்தனை பெரிய வெள்ளத்திலும் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் வாழும் வகையினை மற்ற நாடுகள் செய்திருக்கின்றன, மழை அவர்களின் அன்றாட நிகழ்வு எனினும் ஒரு தெருவோர நாய் கூட பாதிக்கபடுவதில்லை

உலகில் கொடும் புயல் தவிர எந்த நாடாவது பருவமழைக்கு விடுமுறை அளிக்கின்றதா? இந்த விசித்திரம் இந்தியா தமிழகம் தவிர எங்குமே பார்க்கமுடியாத விஷயம்.

அந்த அளவிற்கு பின் தங்கி இருக்கின்றோம்,

வருடா வருடம் வரும் பருவமழையினை கூட எதிர்கொள்ள முடியா அளவு நாசமாக சென்றிருக்கின்றோம்.

இதில் ஆளாளுக்கு போனில் வியாபாரம் செய்யும் வசதி கொடுப்பார்களாம்

எதற்கும் வாட்டர்புரூப் போன் கொடுங்கள், வெள்ளத்தில் மூழ்கினாலும் வசதியாக இருக்கும்


 முதல்வர் நலமாக இருந்தபோதே வெள்ள சேதத்தை கட்டுபடுத்த முடியா தமிழகமிது.

 

இன்றோ முதல்வரும் சிக்கலில் இருக்க பெரும் வெள்ளம் என வந்தால் என்னாகும்? என யார் யோசித்தார்களோ இல்லையோ வருணபகவான் யோசித்திருக்கின்றார்

மத்திய அரசும் ஒரு வித பித்த நிலையில் இருப்பது அவரை இன்னும் யோசிக்க வைத்திருக்கின்றது.

பன்னீர் செல்வத்தை நம்பி அவர் பொழிய கடுமையாக யோசித்திருக்கலாம்

இந்த வருடம் கொட்டி தீர்க்கும் ஐடியா அவருக்கு இல்லை போல, பரிதாபமாக பார்த்துவிட்டு நகர்ந்துவிடுகின்றார்.

இது ரிஷிகளும், பெரும் சித்தர்களும் வாழ்ந்த பூமி என்பது மிக சரியானது . வருணரின் யோசனை அதனை நிரூபிக்கின்றது