ஞாயிறு ஸ்வைப்ஸ்…..

beg

பிச்சைக்காரர்கள் ஸ்வைப் மெஷினுக்கு மாறிவிட்டார்கள் : மோடி

ஒரு நாட்டில் பிச்சைக்காரர்கள் இல்லை என்பது கவுரவமா? அல்லது பிச்சைக்காரனுக்கு ஸ்வைப் மெஷின் கொடுத்துவிட்டோம் என்பது பெரிய விஷயமா?

வெளிநாட்டில் சென்று தொழில்நுட்பம் முதல் முதலீடு வரை பிச்சையெடுக்கும் பிரதமர், சொல்ல வருவது என்ன? ஒன்றே ஒன்றுதான்

சுற்றுபயணமாக வரும் வெளிநாட்டுக்காரர்களே, இனி நீங்கள் பிச்சைபோட கூட கார்டு உபயோகிலாம், அந்த அளவு பிச்சைக்காரர்களுக்கு சகல வசதியும் கொடுத்து வைத்திருக்கின்றோம்

வாருங்கள் இங்கு அரசியல்வாதிகள் போலவே பிச்சைகாரார்களுகும் பிச்சைபோடலாம், பணமில்லா பிச்சை.

வாழ வழியில்ல்லா நாட்டு குடிமகனுக்கு வாழ வழிசெய்வது தான் நல்லது, அவன் கையில் மெஷினை கொடுத்து பிச்சை எடு என்பது என்ன மாதிரி ஆட்சியோ?

ஆக மொத்தத்தில் உலக நாடுகளை எல்லாம் சுற்றி பார்த்து மோடி கொண்டுவந்த திட்டம் பிச்சைக்காரர்களுக்கு ஸ்வைப் திட்டம்..


குஷ்பூ நடத்தும் நிஜங்கள் நிகழ்ச்சிக்கு பல நடிகைகள் கண்டனம், நடிகைகள் நடிப்பினை மட்டும் பார்க்க வேண்டும் என அறிவுறுத்தல்

இதனை ஜெயலலிதாவிடமோ, அப்பல்லோ வாசலில் அமர்ந்திருக்கும் நடிகைகளிடம் சொல்லியிருக்கலாம்

யாரையோ குஷ்பூ சட்டையினை பிடித்து அமரவைத்துவிட்டார் என பொங்குபவர்கள், பாராளுமன்றத்தில் முதல்வர் என்னை அறைந்தார் என அழுத சசிகலா புஷ்பா எனும் பெண்ணுக்கு சொன்ன ஆறுதல் என்ன?

இந்த விந்தியா, சி.ஆர் சரஸ்வதி பற்றியாவது ஏதாவது சொன்னால் என்ன? சொல்லமாட்டார்கள்.

குஷ்பூ செய்தால் தவறாம், வெறு யார் செய்தாலும் அது பெண்களின் பெருமையாம்

நிகழ்ச்சியினை நடத்திய சன்டிவி பற்றி எந்த நடிகையும் மூச் விட காணோம்

இவர்கள் ஏதோ சொல்லிகொண்டிருக்க, சன்டிவி மூலவர் கலைஞரை நலம் விசாரிக்க சென்றிருக்கின்றார் குஷ்பூ

இந்த தைரியம்தான் குஷ்பூ

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் மறைக்க முடியாதது சூரியன் மட்டுமல்ல, நிலாவும் கூட‌


விஜய் டிவியில் டி.ஆர் ஒரு நிகழ்ச்சிக்கு வந்தார், அதில் கண்ணதாசன் பேரனும், சாவித்திரி பேரனும் வந்திருந்தார்கள்

உண்மையில் டி.ஆர் ஒரு குழந்தை மனதிற்கு சொந்தக்காரர். அவரிடமுள்ள பெரும் பலவீனம் உணர்ச்சிவசபடுவது. அந்த மேடையிலும் அப்படித்தான் அந்த வாரிகளை கண்டு அந்த கண்ணதாசனை நினைவு கூர்ந்து கண்ணீர் விட்டார்

கண்ணதாசனின் வாரிசை பார்க்கின்றேன் என அவர் குரலுடைந்து அழுதபொழுது மனிதரின் தமிழ்பக்தி அற்புதமாக தெரிந்தது

ஒரு கவிஞன் இன்னொரு கவிஞனை பாராட்டுவது அபூர்வம், டி.ஆர் அதனைத்தான் செய்தார்

கண்ணதாசனின் வாரிசை பார்த்து அவர் கண்ணீர் விட, டி.ஆரை பார்த்து நமக்கும் கண்ணீர் துளிர்த்தது

நிச்சயம் கண்ணதாசனின் கவிவாரிசாக வந்திருக்க வேண்டியவர் டி.ஆர், அதற்கான முழு தகுதியும், தமிழும், ரசனையும் , கற்பனையும் அவரிடம் இருந்தது.

ஆனால் விதி வேறுமாதிரியாக அமைந்துவிட்டது. இயக்கம், நடனம், அரசியல் என டி.ஆர் திசைமாறி என்னவெல்லாமோ நடந்தது

திமுக என்னை திசைமாற்றிவிட்டது என சமீபத்தில் டி.ஆர் சொன்னது மகத்தான உண்மை.

கண்ணதாசனின் கவிவாரிசாக வந்திருக்கவேண்டியர், கண்ணதாசனின் குடும்ப வாரிசை பார்த்து கண்ணீர் விட்டது விசித்திரம்.