சொன்னது யார்தானோ?

பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் யாரும்
கடும் விளைவை சந்திக்க நேரிடும் என மோடி எச்சரிக்கை

இப்படி சொல்லிவிட்டு வைகோவை கட்சியில் சேர்த்துவிட திட்டமிட்டால் எப்படி பிரதமரே??

புலி பயங்கரவாதிகளுக்கு கொடிபிடித்தலையும் வைகோ மிக தாராளமாக ஆளுநரை சந்திக்கின்றார், பேட்டி கொடுக்கின்றார், அறிக்கை விடுகின்றார்.

விசா இன்றி கள்ளதனமாக ஒரு தீவிரவாதியினை சந்தித்தேன், அதுவும் இந்திய ராணுவத்தோடு மோதிய காலங்களில் சந்தித்தேன், அவர் கொடுத்த கடிதம் முதல் சயனைடு குப்பி வரை என் அண்டர்வேர் பாக்கெட்டில் இருக்கின்றது என சவால் விடுகின்றார்.

இவரை போன்றவர்கள் , காஷ்மீரிய தீவிரவாதியினை அழைத்து கூட்டம் போட்ட சீமான் போன்றவர்கள் எல்லாம் இந்த “ஆதரவு” பிரிவில் வரமாட்டார்களா?


“எனக்கு குடும்பம் இல்லை எனக்கென்று யாருமில்லை..” என்ற வரிகளும்,

“இதுதான் என் கடைசி தேர்தல்..” என்ற வரிகளும் நினைவுக்கு வந்து தொலைக்கின்றது


ஜெயலலிதா மீண்டும் முழு பலத்தோடு பணியை தொடர வேண்டும்: சீமான்

பின்ன, இன்னொரு ஆட்சி வந்தால் நளினி முருகன் பக்கமோ அல்லது புழலில்தான் அன்னார் இருக்கவேண்டும்,

கயல்விழி சைமன் கண்ணீரோடு அற்புதம்மாள் போல அலையமுடியுமா?


அ.தி.மு.க., அமைச்சரின் உறவினர் வீட்டில் நடந்த, சோதனை விபரத்தை, வருமான வரி அதிகாரிகள் வெளியிட வேண்டும்’ என, தி.மு.க., பொருளாளர், ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

ஆ.ராசா நண்பர் சாதிக் வீட்டில் நடந்த ரெய்டு, அண்ணா நகர் ரமேஷ் சம்பவம், ஆடிட்டர் குருமூர்த்தி விவகாரம், ஜெகத் கஸ்பர் சோதனை இதுபோன்ற பெரும் சோதனைகளை எல்லாம் வெளியிட இவர் கோரிக்கை வைக்கவே மாட்டார்

அந்த கோரிக்கையும் சேர்த்து வையுங்கள்


 தனக்கு எதிரிகளே இல்லை, என்னை எதிர்க்க யாருமே இல்லை என தன்னை நிரூபித்துவிட்டே கிரீஸுக்கு திரும்பினான் மாவீரன் அலெக்ஸாண்டர்அவனின் அந்திம காலத்தில் அவன் வெற்றிபெற ஏதும் மிச்சம் இருக்கவில்லை

தன்னை நிரூபித்துவிட்டு உலகிற்கு விடைகொடுப்பது ஒரு வரம்,

அது ஒரு சிலருக்கே வாய்கின்றது.