தேசிய கீதத்திற்கு பொருந்தமான பாடல் எது?
https://youtu.be/IPorVTtc2CA
தேசிய கீதம் என்பார்கள், தியேட்டர் முதல் முட்டுசந்து வரை பாடவேண்டும் என ஆணையிடுவார்கள்
ஆனால் தேசிய கீதம் எப்படி இருக்கின்றது என பார்க்க மாட்டார்கள்
அது பிரிவினைக்கு முந்தைய பாடல், கிட்டதட்ட 30 நிமிடம் வரும் முழுபாடலின் ஒரு பிரிவினை மட்டும் எடுத்து 5 நிமிடமாக சுருக்கினார்கள்
அதுவும் உருப்படியாக பொருந்தியதா என்றால் இல்லை
பாகிஸ்தானுக்கு சென்றுவிட்ட சிந்துவினையும், ஒரு பகுதி பஞ்சாபையும், பங்களாதேஷ் என மாறிவிட்ட ஒரு நாட்டினையும் சேர்த்து நாமெல்லாம் வாழ்த்திகொண்டிருக்கின்றோம்.
நல்ல வேளையாக இலங்கையினை இந்தியாவோடு வெள்ளையன் சேர்க்கவில்லை, சேர்த்திருந்தால் திராவிட, சிங்கள இந்தியாவே நீ வாழ்க என வங்க மொழியில் வாழ்த்திகொண்டிருப்போம்
உண்மையில் சிங்களனை வாழ்த்திகொண்டேதான் இருந்திருப்போம், இப்பொழுது சம்பந்தமில்லாமல் சிந்தினை வாழ்த்துவது போல..நல்ல வேளையாக அது நடக்கவில்லை
நடந்திருந்தால் சீமானும்,வைகோவும் கூட சிங்களம் வாழ்க என வாழ்த்திபாடிகொண்டிருப்பார்கள்
உண்மையில் நமது தேசிய கீதத்தில் மாற்றம் தேவை, பிரிந்துவிட்ட இந்த்தியாவிற்கு பிரிட்டன் காலத்தின் தேசிய கீதம் எப்படி பொருந்தும்? பொருந்தாது
கரன்சியினை மாற்றுகின்றார்கள், அதிரடி தேச்பற்றினை ஊட்டுகின்றார்கள், தேசிய கீதம் பாடு என்கின்றார்கள், ஆனால் பாடல் எபபடி இருக்கின்றது என பார்க்க மாட்டார்கள்
உண்மையில் தேசிய கீதத்திற்கு பொருந்தமான பாடல் எது?
பாரதியார் எழுதிய வந்தே மாதரம் என்போம் எனும் பாடல் அல்லது தாயின் மணிக்கொடி பாரீர் என்பதே
இதனை விட ஒரு அருமையான பாடலை எந்த கவிஞனும் இந்தியாவிற்கு கொடுத்துவிட முடியாது, பின் தாகூர் எப்படி கொண்டாடபட்டான்?
ஜார்ஜ் மன்னர் வரும்பொழுது அவரை புகழ்ந்துபாடி, தன் படைப்புக்களை எல்லாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஒரு ஆங்கில அடிவருடியாக இருந்தான் தாகூர், அவருக்கு நோபல் வரை கிடைத்தது
ஆங்கிலேயனை எதிர்த்து பல பத்திரிகை நடத்தி, புதுச்சேரியில் ஒளிந்து ஒரு குற்றவாளியாக காலத்தை கடத்தி இறுதியில் வறுமையில் செத்தும் போனான் பாரதி
அவனும் ஆங்கிலேயனை ஆதரித்து கொஞ்சம் பாடியிருந்தால் தாகூரும் இல்லை, அவன் பாடலுமில்லை ஒன்றுமில்லை
நாட்டுபற்றில் இறுதிவரை நின்றான் என்றால் அது பாரதி எனும் சுதந்திர போராட்ட கணலான கவிஞன், தாகூர் போன்ற அடிவருடிகள் அல்ல
தன் பெயரையே பாரதி என மாற்றி, பாரதீய ஜனதாவவிற்கு முன்னோடியாக நின்ற கவிஞன் அவன்
ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் உண்மையிலே தேசாபிமானிகள் என்றால் நிச்சயம் பாரதியாரைத்தான் கொண்டாடியிருப்பார்கள், ஆனால் அவர்கள் அடிமனதில் இருப்பது வங்க, குஜராத்திய உயர்வு மனப்பான்மை அன்றி வேறல்ல..
வங்கத்து கவிஞனின் பாடல் தேசிய கீதம், வங்கத்து சாமியாருக்கு கன்னியாகுமரியில் மண்டபம் எனும் அளவிற்கு வங்கத்து தாக்கம் டெல்லியில் உண்டு
ஆனால் நாட்டுபற்று மிக்க பாரதியின் பெயர் அங்கே உச்சரிக்கபடாது விடமாட்டார்கள்
பின்னாளில் திராவிட கொடி பிடித்தவர்களும், பாரதியாரை மறைத்தார்கள் காரணம் பாரதி இந்திய தேசியம் பேசியவன் அல்லவா?
எத்தனை நாளைக்கு பாகிஸ்தானின் சிந்து பகுதி வாழ்க என சொல்லிகொண்டிருக்க போகின்றோம்.
எதனை எல்லாமோ பெரும் புரட்சி என மோடி செய்கின்றார் என மார்தட்டுகின்றார்கள்
பாரதியார் பாடலில் ஒன்றை தேசிய கீதமாகவோ, இந்திய பாடலாகவோ மாற்றினால் அதுதான் நாட்டுபற்று, அதுதான் உண்மையான மாற்றமாக இருக்க முடியும்
இந்திய அரசியல் அதற்கு இடமளிக்கும் என நம்புகின்றீர்கள்? நிச்சயம் இடமளிக்காது
ஆனால் தேசபற்று என கொண்டாட கிளம்பினால் பாரதியாரின் பாடலையும் அவனையும்தான் கொண்டாட வேண்டுமே அன்றி இங்கிலாந்து மன்னனுக்கு “வாராய் நீ வாராய்” என பாடிய தாகூரை அல்ல
இந்த தேசத்திற்கு அர்த்தமுள்ள, உணர்ச்சியுள்ள தேசிய கீதம் வேண்டுமென்றால் பாரதி பாடலை வையுங்கள்
வைக்க மாட்டார்கள்
தாகூரின் பாடலை தமிழில் மொழிபெயர்த்தாலும் ஒரு உணர்ச்சியும் வராது, இந்தியன் என்ற உணர்வும் பொங்கி எழாது, நாட்டுபற்றும் வரா
வாழிய வாழிய வாழிய என சம்பிரதாய பாடல் அது.
ஆனால் பாரதியாரின் வரிகள் உணர்ச்சியினை கொண்டு வருபவை, நாடி நரம்பினை இந்தியா என முறுக்கேற்றுபவை
அர்த்தமுள்ளது எதனையும் அர்த்தமில்லாமல் ஆக்குவதும். ஒரு காசுக்கு பெறாத போலிகளை உச்சத்த்தில் வைப்பதும் இந்நாட்டின் சாபக்கேடு
எங்கள் பாரதியும் அவன் பாடலும் அதில்தான் சிக்கிகொண்டன..
தொடர்ந்து பாகிஸ்தானின் சிந்து பகுதியினையும், வங்கதேசத்தையும் இந்தியன் வாழ்த்திகொண்டே இருக்கட்டும்
பாரதிபாடல் தூங்கிகொண்டே இருக்கட்டும்..