என்னதான் நடக்கும்?

கொஞ்சபேர் கிளம்பிவிட்டான், அய்யகோ இனி திராவிடம் வீழும், வடக்கத்திய கட்சிகள் தமிழ்நாட்டை விழுங்கும், அய்யகோ என ஒரே ஒப்பாரி
பாஜகவிடமும் காங்கிரசிடமும் கவனமாக இருந்து அவர்களை விரட்டி தமிழக நலன் காக்க வேண்டுமாம்
இவ்வளவு நாளும் திராவிட கட்சிகள் ஆண்டு என்ன நலன் காத்தீர்கள்?
அணுவுலைகள் வந்தன, ஆபத்தான பல திட்டங்கள் வந்தன இன்னும் பல உரிமைகள் சர்ச்சைகுள்ளாயின
மணல் கொள்ளையும், கிரானைட கொள்ளையும், மலையடிவார நில கொள்ளையும் நடத்துவது யார்? எல்லாம் திராவிடனே
இங்கு ஆண்டுகொண்டிருப்பது சாட்சாத் திராவிட கட்சிகள்தான், என்ன தடுத்தீர்கள்? என்ன உரிமை காப்பாற்றீனீர்கள்.
தமிழக நலனை இந்த திராவிட கட்சிகள் ஆட்சியில் மீட்டுகொடுத்தன என ஒரே ஒரு சம்பவம் சொல்லுங்கள்??
இதற்கு அவர்கள் ஆண்டிருந்தால் கூட சில உரிமைகள் காக்கபட்டிருக்கும்
ஆக இவ்வளவு நாளும் திராவிட கட்சி என்ன தமிழர் உரிமைகளை காத்தது? எந்த மத்திய அரசின் திட்டங்களை தடுத்து நிறுத்தியது என சொல்லிவிட்டு அந்த தேசிய கட்சிகளின் ஆபத்துக்களை சொல்லுங்கள் என்றால் ஒருவனையும் காணோம்
காவேரி, ஜல்லிகட்டு உட்பட பல பிரச்சினைகளை மத்திய அரசினை சொல்வார்கள், சரி இதில் மாநில கட்சிகளின் அணுகுமுறை என்ன என்றால் ஒளிந்துகொள்வார்கள்
கேரளமும் கன்னடமும் என்ன அதன் திராவிட கொள்கைகளிலா தன் உரிமை காக்கின்றது?
எங்கிருந்துதான் கிளம்புவார்களோ தெரியாது, சம்பந்தமில்லாமல் சிந்திக்காமல் தொடங்கிவிடுவார்கள்
திராவிட கட்சிகள் அணுவுலையினை விரட்டியதா? மீணவர் உரிமை காத்ததா? இல்லை ஜல்லிகட்டைதான் மீட்டதா?
ஒரு மண்ணாங்கட்டியுமில்லை, ஊழல் வழக்கில் மட்டும் சிக்கி கிடக்கின்றன
உண்மையில் தமிழன் நலம் காக்க வேண்டுமென்றால் டெல்லிக்கும் தமிழகத்திற்கு புரோக்கராக இருக்கும் இந்த திராவிட கட்சிகளை ஒழியுங்கள் தமிழகம் உருப்படும்
இல்லாவிட்டால் அந்த பிரபாகரன் கேட்டது போல தனிநாடாவது கேட்டு சண்டை போட்டு சாவுங்கள்
சும்மா எவனோ சம்பாதிப்பதற்காக, பாஜக வந்துவிடும், காங்கிரஸ் வந்துவிடும் என பூச்சாண்டி காட்டாதீர்கள்
திராவிட கட்சி என்பது காணல் நீர், அதை நோக்கி வாருங்கள் தாகம் தீர்க்கலாம் என மக்களை நடத்திய கூட்டம் சம்பாதித்து ஒதுங்கிவிட்டது
மக்களுக்கு உண்மை புரிந்துவிட்டது, ஒதுங்கிகொண்டிருக்கின்றார்கள்
மறுபடியும் திராவிடம் எனும் மாய மான் பின்னால் செல்ல தமிழகம் தயாராக இல்லை, வருங்காலம் அதனை காட்டும்.
என்னவோ திராவிடம் தமிழகத்தை கொள்கை பிரகாரம் ஆட்சி செய்தது போலவும், ஜெயலலிதா திராவிட கொள்கைபடி ஆட்சி செய்தது போலவும் முழங்கி கொண்டிருக்கின்றார்கள்
கலைஞரின் திராவிட சித்தாந்தம் வேறு, அவர் ஆட்சி யதார்த்தம் வேறு
ஆக திராவிட கொள்கைபடி என்ன ஆட்சி நடந்தது ஒன்றுமே இல்லை
ஜெயா மறைந்துவிட்டாராம், பார்பன பிஜேபி கொல்லைபுறமாக பிராமண படையெடுப்பினை நிகழ்த்துகின்றதாம், சிலருக்கு திடீர் ஞானோதயம்
எம்ஜிஆர் எனும் மலையாள பிராமணனை கொண்டு 1972லே திராவிட கொள்கைகளை அழித்தாகிவிட்டது, 1989ல் ஜெயலலிதா அதன் தொடர்ச்சியாகவே வந்தார்
ஆக திராவிட கொள்கை, சித்தாந்த அழிவு 1972லே தொடங்கிவிட்டது, இதனை பற்றி எல்லாம் எவனாவது பேசுவானா என்றால் இல்லை, பேசமாட்டான்
மொத்தத்தில் சினிமா எனும் கவர்ச்சி மூலம் திராவிட கட்சி ஆட்சிக்கு வந்ததென்றால், அதன் கவர்ச்சி மூலமே அதன் கொள்கை அழிந்தும் போனது
எனவே இனிதான் திராவிட கொள்கைகளை அழித்து மதரீதியான கட்சிகளோ, தேசிய கட்சிகளோ உள்ளே வரும் அவசியமே இல்லை
எம்ஜிஆர் காலத்திலே அது நுழைந்து ஜெயா காலத்தில் அது எல்லா கோவில்களிலும் திராவிட கட்சியினரை நுழைய வைத்து, தீ சட்டி , மண்சோறு, மொட்டை என மாற்றிவிட்டது, நம் கண்முன்னே அப்பல்லோவிலே எவ்வளவு நடந்தது
பிஜேபி எனும் மதநம்பிக்கை கொண்ட கட்சி செய்ததைத்தான் அதிமுகவினரும் செய்தனர், இரண்டுக்கும் வேறுபாடு என்ன?
ஒன்றுமில்லை
இதில் இனிதான் மதரீதியாக தமிழகம் மாறுமாம், மதவாதம் தேசியவாதம் எல்லாம் வந்துவிடுமாம், திராவிடம் அழிந்துவிடுமாம்
மத நம்பிக்கை திமுகவின் ஒரு பிரிவான அதிமுகாவாலே புத்துயிர் பெற்று எவ்வளவு நாளாகிவிட்டது, இது கூட புரியாமல் பேசிகொண்டே இருக்கின்றார்கள்
என்னமோ போங்கடா…அஞ்சலி செலுத்த விடுங்கள்
கொஞ்சம் ராஜாஜி ஹால் பக்கம் போங்கள், நன்றாக புரியும். முடிந்தால்
அங்கு ஒரு கவிதை படியுங்கள் இன்னும் நன்றாக முதுகிலே புரியும்
ஆளும் மண்டையும்….
