முன்பே சில விஷயங்களை யூகித்திருக்கின்றார் ஜெயலலிதா
முன்பே சில விஷயங்களை யூகித்திருக்கின்றார் ஜெயலலிதா
எம்ஜிஆர் சமாதியில் பறக்கும் குதிரை நிறுவபட்டது நினைவிருக்கலாம், அதாவது கிரேக்க கதைகளில் வரும் பலமிக்க பெண் தேவதை சாயல் அது,
சாமார்த்தியமாக இரட்டை இலையினை பொருத்தினார்கள்
முன்பு பல காலம் ஆண்டாலும் கொஞ்ச காலம் முன்பு அந்த சமாதியினை திடீரென சீரமைத்ததும், சில ஏற்பாடுகளை செய்ததும் மகா ஆச்சரியமானவை
என் குடும்பத்தில் யாரும் 60 வயது தாண்ட மாட்டார்கள் என சொன்னதும் சூசகமாக இருக்கலாம்
இருக்கும் நிலையிலே உயரமாக இருந்து மறையவேண்டும் என்ற உறுதிகொண்டவர் ஜெயலலிதா, தன் மேல் யாரும் இரக்கபடுவதோ தன்னை பரிதாபமாக பார்ப்பதையோ அவர் விரும்பியதில்லை
அவரின் குணம் அது
ஆக தன்முடிவினை முன்பே உணர்ந்து, தனக்கான இடமும் குறித்து ஏற்பாடுகளையும் செய்திருகின்றார் எனும் யூகமும் வருகின்றது
சினிமா, கட்சி, ஆட்சியினை கடந்து கல்லறையிலும் எம்ஜிஆருக்கு பின் தான் எனும் அடையாளமிடவேண்டும் என்ற வைராக்கியம் அவரிடம் அன்றே இருந்திருக்கின்றது
பின்பு அதுதான் நடந்திருக்கின்றது
அந்த சமாதியின் இரட்டை இலை அதன் அர்த்தத்தை பெற்றுவிட்டது.