வள்ளியூரின் பெரும் பழம் அடையாளம்
வள்ளியூரின் பெரும் பழம் அடையாளம் அந்த முருகன் கோயிலும் தெப்ப குளமும்
மதங்களை தாண்டி வள்ளியூரின் பாரம்பரியம் என அதற்கு பெரும் அடையாளம் உண்டு, அதனை சீரமைக்க சிலர் நடவடிக்கை எடுக்கின்றார்கள்
அவர்களை வாழ்த்துவோம், அவர்கள் முயற்சி வெற்றிபெறட்டும்
சில லட்சங்கள் தேவைபடும் பணி என சொன்னார்கள், இருக்கலாம்
அந்த திருப்பணிக்கும், வள்ளியூர் பாரம்பரியத்தை காக்க விருப்பம் உள்ளவர்கள் 9443121117 என்ற எண்ணுக்கு அண்ணன் வெங்கடேஷ் அவர்களை தொடர்பு கொள்ளலாம்
நீர்நிலைகள் மீது அக்கறை கொண்டவரும், சுழ்நிலை அறிவியல் நிபுணருமான சகோதரி விதுபாலா அவர்களும் உதவுவதாக அறிந்தோம்
இது நிச்சயம் செய்யவேண்டிய பணி, காரணம் எல்லா ஊர்களிலிருந்தும் நம் வள்ளியூர் வாழ் முருகனை காண வருகின்றார்கள், இந்த அழுக்கடைந்த குளம் அவர்களுக்கு சில சங்கடங்களை ஏற்படுத்தலாம்
கார்திகை மாதம் முருகன் ஆலயத்திற்கு உதவுவது பெரும் புண்ணியம் என்பது இந்து நண்பர்களின் நம்பிக்கைகளில் ஒன்று
முருகபெருமான் அவதரித்த கார்த்திகை மாதத்திலே அவரின் தெப்பகுளமும் புத்துயிர் பெறட்டும்..
நமது ஊரின் பெருமையினை காக்கும் கடப்பாடு நமக்கு நிச்சயம் உண்டு
உங்கள் அனைவரின் ஆதரவினையும் எதிர்பார்க்கின்றோம்
காரியத்தில் இறங்கி இருப்பவர்களையும், அதற்கு உறுதுணையாய் இருப்பவர்களையும் செந்திலாண்டவர் ஆசீர்வதிக்கட்டும்