முதல்வரின் நண்பர் ரெட்டி வீட்டில் ரெய்டு

முதல்வரின் நண்பர் ரெட்டி வீட்டில் ரெய்டு: 100 கோடி ரொக்கம், 120 கிலோ தங்கம் பறிமுதல்
அங்கிள் சைமன் எங்கே போய் தொலைந்தீர்கள், தமிழகத்தில் ஒரு தமிழன் முதல்வராகி இருப்பதை கொண்டாடிகொண்டிருக்கின்றீர்களா?
இதோ பாருங்கள், அந்த தமிழன் முதல்வரின் வடுக வந்தேறி நண்பர் வீட்டில் ரெய்டு நடந்திருக்கின்றது, பெரும் பணம் சிக்கி இருக்கின்றது, இது தமிழரின் பணமாக இருக்க வாய்ப்பு உண்டல்லவா?,
இந்த பணத்தில் எத்தனை பனமரம் நடலாம், ஆடுமாடு வாங்கலாம், அதனை செய்யாமல் தமிழன் பணம் வடுகன் வீட்டில் உறங்குவதா? இதனை கண்டிக்க மாட்டீர்களா?
இப்பொழுதெல்லாம் நீங்கள் சரியில்லை அங்கிள்
வடுக வந்தேறியின் அப்பல்லோ எனும் மருத்துவமனையில் ஈழத்தாய் இறந்திருக்கின்றார், பல சர்ச்சைகள் சந்தேகங்கள் வருகின்றன, பல கேள்விகள் ரெட்டிமீது வீசபடுகின்றன.
ஈழத்தாய் இருந்தால் நிச்சயம் ஈழம் அமையும், அதனால் வடுக வந்தேறியும், நாயக்க கலப்பு சிங்களனும் சதி என ஒரு அறிக்கை கூட நீங்கள் விடவில்லை
இப்பொழுது தமிழக தமிழன் முதல்வரின் நண்பர் வடுக வந்தேறி பணத்தோடு சிக்கியிருக்கும்பொழுதும் நீங்கள் மகா அமைதி
இன்னும் அமைதியா? உங்கள் முழக்கமெங்கே? உங்கள் சீற்றமெங்கே, தொண்டையில் ரத்தம் வரும் வரை கத்தும் அந்த குரல் எங்கே?
இதுவே இந்த ரெட்டி மு.க ஸ்டாலின் நண்பர், கலைஞரின் நண்பர் என்றால் சும்மா இருப்பீர்களா அங்கிள்??
தமிழனுக்கும் தெலுங்கனுக்குமான போர் என்னாயிற்று? போரை பகிரங்கமாக அறிவித்த நீங்கள், வெள்ளைகொடியினை இன்னும் பகிரங்கமாக அறிவிக்காததால் நாங்கள் அந்த யுத்தம் இன்னும் நடப்பதாகவே நம்பிகொண்டிருகின்றோம்
இப்படி நீங்கள் அமைதியானால் எப்படி உங்கள் “புரட்சி வெள்ளும்” அங்கிள், பின் எப்படி ஈழம் அமைக்க?
நாளை உங்கள் அண்ணன் பிரபாகரன் வந்து கேட்டால் என்ன சொல்வீர்கள் அங்கிள்