அதிமுகவின் வாரிசு அஜீத் குமாரா?
அவர் மீது யாருக்கு என்ன கோபமோ தெரியவில்லை
விஜய் படங்கள் பெரும் சிக்கலில் மாட்டியது போல அஜித் படங்கள் சிக்கவில்லை என்ற கோபமாக இருக்கலாம்
உங்கள் அரசியலில் என்னை ஏன் இழுக்கின்றீர்கள் என அவர் ஒருமுறை கலைஞரிடம் கண்ணீர் விட்ட காட்சிகளாக இருக்கலாம்
அவனும் அரசியலுக்கு வரவில்லை, நம்மையும் ஆதரிக்கவில்லை, சரி சினிமாவிட்டும் போகமாட்டான் எனும் எரிச்சலாக இருக்கலாம்
அவனுக்கும் ஒரு கூட்டம் இருக்கின்றது, ஆடிக்கொரு படம் வந்தாலும் கொண்டாடுகின்றது எனும் எரிச்சலாக இருக்கலாம்.
இவ்வளவிற்கும் அவர் “என்னால் முடியும்”, “என் வீட்டு வேலைக்காரனால் முடியும்” என்றெல்லாம் இயக்கம் நடத்தவில்லை
என் ரசிகர் மன்றத்தை கலைக்க தயார் என பகிரங்கமாக அறிவித்த ஒரே நடிகன் அவன்.
ஆனாலும் ஏதோ ஒன்று அவரை பழிவாங்க தேடுகின்றது, ஏதோ ஒரு கோபம் அவரை துரத்துகின்றது
அரசியலுக்கு ஆசைபடாத நடிகர்களை, நல்ல இமேஜ் உள்ள நடிகர்களை எல்லா அரசியல்வாதிகளுக்குமே பிடிக்கும், உதாரணம் சிவகுமார்.
அப்படி அவர் எல்லா அரசியல்வாதிகளுக்கும் பொதுவானவராகத்தான் அவர் இருந்தார், இருக்கின்றார்
பின்னும் ஏன் அவரையே சீண்டுகின்றார்கள்?
அதிமுகவின் வாரிசு அஜீத் குமாரா? எனும் அளவிற்கு வதந்தி பறக்கின்றது, பிரபல இதழ் மலையாள மனோரமா கூட எழுதுகின்றது
இந்த வதந்தி நிச்சயம் விஜய் ரசிகனால் பரப்பபட்டிருக்க வேண்டும்
எஸ்.ஏ சந்திரசேகர் என்பவரின் அரசியல் ஆசை கொஞ்சமல்ல, எதனையோ நோக்கித்தான் நடந்தார். ஜெயா என்ற இரும்பு பெண்ணிடம் கொஞ்சம் அடங்கி கிடந்தார், சத்தமில்லை
ஒருவேளை இன்னும் 20 ஆண்டுகாலம் கழித்து விஜயின் அரசியலுக்கு அஜித்தால் ஆபத்து வந்துவிடுமோ எனும் பல்ஸ் பார்க்கும் நிகழ்வாகவும் இருக்கலாம்
ஜெயா இல்லாத காலங்களில் இவை எல்லாம் சாதாரணம், இனி சினிமா நடிகர்களின் அரசியல் பிரவேசம் ஆங்காங்கு நடக்கலாம், எஸ் ஏ சந்திரசேகர் தமிழகமெங்கும் காட்சி தரலாம், விஜய் பன்ச் டயாலாக் பேசலாம்
பல அழிச்சாட்டியம் இனி நடக்கலாம்.
ஆனால் நடிகர்கள் ஆண்ட காலம் மலையேறி விட்டது, சிரஞ்சீவி, விஜயகாந்தின் தோல்விகள் அதனைத்தான் சொல்கின்றன.
அஜித்குமார் வித்தியாசமானவர், ரஜினி போல அரசியல் ஆசை இல்லாதவர் என்பது நன்றாக தெரிகின்றது
அவர் நிம்மதியாக வாழட்டும், அவரும் அந்த எண்ணம் கொண்டிருப்ப்பதால் நிச்சயம் வரமாட்டார்
ஆனால் அம்மா சமாதிக்கு அஞ்சலி செலுத்த சென்றபொழுது, இப்படி வதந்தி பரப்புபவன் யாரென கண்டுபிடித்து இழுத்து கொண்டு போய் அந்த கம்பியில் அவர் கட்டியிருக்க வேண்டும்
இனியும் ஒன்றும் கெட்டுபோகவில்லை, கண்டுபிடித்து போயஸ் கார்டன் கதவில் அவனை தொங்கவிடுவது அஜித்குமாரின் தலையான வேலைகளில் ஒன்று.
அஜித்தினை ஏன் சொல்லுகின்றார்கள் தெரியவில்லை?
நியாயமாக விந்தியாவினையோ, நமீதாவினையோத்தான் சொல்லவேண்டும்
நமீதா ஏன் அதிமுகவினை கைபற்ற முடியாது, திருச்சி மாநாட்டில் அம்மாவோடு நின்றவர் அவர்தான்?
இனி நாம் கிளப்பி விடலாம், அதிமுகவின் தலைவராக நமீதா வருவாரா?
நமீதா ஏன் பொதுசெயலாளர் பதவிக்கு போட்டியிட கூடாது??
நிறுவணர் நடிகர், முன்னாள் தலைவி நடிகை எனும்பொழுது இன்னொரு நடிகை அடுத்து தலைவராக வருவதுதானே கட்சி கோட்பாடு
நமீதாவினை வைத்துகொள்ளுங்கள், அஜீத்குமாரினை விட்டுவிடுங்கள்
பாவம் அவருக்கு தமிழில் 4 வார்த்தையே திக்கி திக்கிதான் வரும்..
எப்படியோ ஜெயா டிவியில் சின்னதிரைக்கு வந்த குஷ்பூ அங்கேயே நீடித்திருந்தால் இந்நேரம் சின்ன ஜெயலலிதா என வந்திருக்கலாம், வரலாறு திரும்பி இருக்கலாம்..
