வார இறுதி செய்திகள்…

இன்று உலக மனித உரிமைகள் தினம்

அதாவது யாரெல்லாம் தன் உரிமைகளை மறந்து எங்கோ கொத்தடிமைகளாக விழுந்து கிடக்கின்றார்களோ அவர்களை பரிதாபமாக பார்த்து, முடிந்தால் அவர்களுக்காக குரலெழுப்பும் நாள்

நமக்கு தெரிந்து ஒரு பெரும் கட்சியும், அதன் எம்ஏல்ஏக்கள் ஏன் உச்ச அமைச்சரே கூட அப்படி ஒரு சிக்கலில் இருப்பதாக தெரிகின்றது

அவர்கள் காதில் இன்று மனித உரிமை தினமாம் என கத்தி சொல்ல வேண்டும்.


எம்ஜிஆர் இருந்தார் சென்றார், அம்மா இருந்தார் சென்றார் இப்படி பலரும் சென்றாகிவிட்டது

சரி இந்த டாஸ்மாக் இனி இருக்குமா? இருக்காதா? என்ற செய்திகள் எல்லாம் வரவே இல்லை வராது போல‌

அம்மா வழி ஆட்சி என்றால், அவர் அறிவித்தபடி படிபடியாக மதுவிலக்கு அமுல்படுத்தவேண்டும் அல்லவா?

அவர்களுக்கு அடுத்த பொதுசெயலாளர், துணை செயலாளர் அதிகார பீடம், அடுத்த ஜே அடுத்த சசி என ஆயிரம் பிரச்சினைகள்

அடுத்த பன்னீர்செல்வம் மட்டும் இப்பொதைக்கு வாய்ப்பில்லை, அப்படி ஒருவர் வராமலே போகட்டும்