முன்னாள் விமானபடை தளபதி கைது…
ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் என முன்னாள் விமானபடை தளபதி கைது செய்யபட்டிருக்கின்றார்
அப்படியானால் அந்நாளைய பாதுகாப்பு அமைச்சர் என்ன கிழித்துகொண்டிருந்தார்?, அவர் அனுமதியின்றி ராணுவம் எப்படி ஹெலிகாப்டர் வாங்கியது என்ற கேள்வி எழும்
சரி ஆயுத தரகன் யார்? அவனுக்கு என்ன கமிஷன் என எழும்?
நிச்சயம் பெரும் பிரச்சினை, போபர்ஸ் போல புயலடிக்கும் விஷயம்தான், மிக சீரியசான பிரச்சினைதான்
ஏன்?
இருவிஷயம் தான் சாத்தியம்
ஒன்று ரூபாய் நோட்டு சர்ச்சை இருக்கும் பொழுது இதனை இழுத்தால் அது அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படலாம்
இரண்டாவது திமுகவும் அதிமுகவும் ஒரு ரகசிய உடன்பாட்டில் இருப்பது போல பாஜகவும் காங்கிரசும் ஒரு ரகசிய ஒப்பந்தம் செய்திருக்கலாம்
இரண்டாவது விஷயத்திற்கு சாத்தியம் அதிகம்
நாட்டில் யாரையும் நம்ப முடியவில்லை…