டிரம்பும் மிரட்டுகின்றார்…

புகைந்து கொண்டிருந்த விஷயம் டிரம்ப் மூலமாக அமெரிக்காவில் வெடித்திருக்கின்றது

அதாகபட்டது முன்பு போர்டு கார் முதல் தாம்சன் டிவி வரை அமெரிக்காவில்தான் தயாரிக்கபட்டது, உலெக்ல்லாம் அவை சக்கை போடு போட்டன, இதுமாதிரியான பெரும் தொழில்கள் அமெரிக்கர்களை வாழவைத்தன‌

இன்று இவை எல்லாம் ஜப்பான், சீனா, தைவான், கொரியா கையில் சிக்கிவிட்டன, அமெரிக்கா ராக்கெட், ஆயுத விற்பனை, எண்ணெய் சந்தையினை கட்டுபடுத்துதல் போன்ற பெரு முதலாளி தொழிலினை செய்வதால் உள்ளூர வேலையிழந்த அடிமட்ட தொழிலாளர்கள் வெறுப்பு இருந்தது

டிரம்ப் வெற்றிபெற இதனைத்தான் சீண்டினார், பலனழித்தது பெரும் வோட்டு அவருக்கு கிடைத்தது

நான் பதவிக்கு வந்தவுடன் இந்தியர்களை வைக்கவேண்டிய இடத்தில் வைப்பேன் என அவர் சொல்லியிருப்பது ஒரு பெரும் திட்டத்தின் அறிகுறி

பலவகை விசாக்களில் இந்தியர் குழுமினாலும், ஐடி தொழிலில் அங்கிருக்கும் இந்தியர்கள் அதிகம்.

உண்மையில் இதற்கு இந்தியா பொங்கியிருக்க வேண்டும், அமெரிக்க ஐடி கம்பெனிகள் இந்தியாவில் திறக்க இனி கட்டுபாடுகளை விதிப்போம் என இந்தியா சொல்லியிருக்க வேண்டும் அல்லவா?

எப்படி சொல்வோம், அந்த நாட்டாமையினை எதிர்க்க கை கட்டி நிற்கும் பண்ணையாளுக்கு எப்படி தைரியம் வரும்? வராது

ராகுல் தைரியம் மோடி முன்னும், மோடி தைரியம் ராகுல் முன் மட்டுமே, அதனை தாண்டி பாகிஸ்தானுடன் வேண்டுமானால் உரசலாம், அதற்கு மேல் வாய்ப்பில்லை

அரபு நாடுகளில் நிதி நெருக்கடி பலர் திரும்பிகொண்டிருக்கின்றார்கள், டிரம்பும் மிரட்டுகின்றார்

இவர்களுக்கெல்லாம் இந்தியா சொந்தநாட்டில் எம்மாதிரியான வேலை உறுதிகளை செய்யுமோ தெரியாது.