பன்னீர் டெல்லியிலிருந்து முதல்வராக வருவாரா?

முதல்வர் பன்னீர்செல்வம் டெல்லி சென்றிருக்கின்றார்

ஆனால் அவர் முதல்வராகவே திரும்பகூடாது என 3 அமைச்சர்கள் பேசதொடங்கிவிட்டனர், அதாவது சசிகலாவினை முதல்வராக அமர்த்திவிட வேண்டுமாம்

இந்த செய்தியினை கேட்டு அழுதுகொண்டு ஆறுதல் தேடி பன்னீர்செல்வம் டெல்லி சென்றாரா? அல்லது அவர் இல்லாத நேரம் கொளுத்துகின்றார்க்ளா? என தெரியவில்லை

சில விஷயங்களை கவனிக்கலாம்

பன்னீருக்கு முழு அதிகாரம் இருக்கிறதென்றால் பன்னீர்செல்வம் அந்த 3 பேரையும் அம்மா பாணியில் அம்மாவசை கண்டம் போடலாம்

பன்னீருக்கு மத்திய அரசின் பின்புலம் இருக்கின்றது என்றால், சில அதிரடி வருமான வரி ரைடுகள் நடக்கலாம், டெல்லி வழக்கு பற்றி சில அறிவிப்புகள் வரலாம்

இல்லை ஒன்றுமே நடக்கவில்லை எனில் பன்னீர்செல்வம் முழு சரண் என்றும் , பாஜக சசிகலாவோடு ஒப்பந்தம் எழுதிற்று என முடிவுக்கு வரலாம்

பார்க்கலாம்

சரி சசிகலா, சசிகலா என எல்லோரும் கதறுகின்றார்களே, அப்படி ஒரு பிளஸ் பாயிண்ட் சொல்ல முடியுமா? என்றால் ஒரு வித்தியாசமான சென்டிமென்ட் கட்சியில் உண்டாம்

அதாவது தியாகிகள் மட்டுமே கட்சியினை வழிநடத்த முடியுமாம்

எம்ஜிஆருக்கு வாரிசு இல்லை, ஜெயலலிதாவிற்கு திருமணமே இல்லை

அப்படி சசிகலாவிற்கும் நேரடி வாரிசு இல்லையாம்

அந்த ஒற்றை தகுதியினை தவிர வேறு தகுதி வேண்டாமாம், இப்படி எல்லாம் ஆள சிந்தித்து முடிவெடுக்கின்றார்களாம்

பிள்ளைகள் இல்லா ஒருவர்தான் தமிழக மக்களை எல்லாம் பிள்ளைகளாக நினைத்து வாழமுடியுமாம்

இப்படி தியாக வாழ்க்கை வாழ்ந்தவர்களால்தான் அன்பான, பாசமான அணுகுமுறை கொடுத்து கட்சினை காப்பாற்றமுடியுமாம்.

அப்படி ஜெயாவிற்கு அடுத்து சசிகலா மட்டும்தான் அம்மா ஆக முடியுமாம்

எங்கிருந்துதான் யோசிப்பார்களோ மகா சென்டிமென்டாக யோசிக்கின்றார்கள், சசிகலாவினை முதல்வராக்குவது என பெரும் குழு அமைத்து ரூம் போட்டு யோசிக்கின்றார்கள்,

யோசிக்கட்டும்

அதற்காக இனி வாரிசு இல்லாதவர்களுக்குத்தான் கட்சியில் பதவி என்றால் என்னாகும்?

இருக்கும் வாரிசுகளை நோக்கி அடுத்த பொதுசெயலாளர் பதவியில் இருக்கும் சிலர் ஆபிரகாம் போல வாரிசினை நோக்கி கத்தியோ அரிவாளோ ஓங்கிவிட கூடாதல்லவா?

அவர்களே ஒரு மாதிரியான கூட்டம்.. எதற்கும் அவர்களின் குடும்பத்தார் கவனமாக இருக்கட்டும்

பன்னீர் டெல்லியிலிருந்து முதல்வராக வருவாரா? இல்லை அதிரடி காட்டுவாரா என இனிதான் தெரியும்

ஒருவேளை சசிகலா புஷ்பா போல திடீரென டெல்லியில் அழுதுவிட்டால் என்னாகும்?

சே…சே அப்படி எல்லாம் நடக்காது.