திருமா சசிகலாவினை சந்தித்திருக்கின்றார்…

புத்தாண்டில் புதுமை மலரட்டும் : கீ.வீரமணி

அங்கே “புதுமை தலைவி” என ஆர்ப்பரிக்கின்றார்கள், இவரோ புதுமை மலரட்டும் என்கின்றார்

இப்படி ஒரு இனமான ஜால்ராவினை பார்க்கமுடியுமா? வீரமணியினை தவிர யாரிடமும் பார்க்க முடியாது, ஒருவேளை அந்த “புதுமை தலைவி” பட்டத்தை இவர்தான் வழங்கியிருப்பாரோ?

இவர்கள் காமெடி இப்படி என்றால் திருமா சசிகலாவினை சந்தித்திருக்கின்றார்

அடங்க மறு, அத்து மீறு என்பதெல்லாம் தூக்கி கடாசிவிட்டு ஹிஹிஹி என சிரித்துகொண்டிருக்கின்றார்.

கொடியன்குளம் கலவரமும் அந்த படுகொலைகளையும் தாண்டி எப்படி திருமாவால் இப்படி சந்தித்து சிரிக்க முடிகின்றது என்பதுதான் பெரும் வியப்பு.

வைகோ கிட்டதட்ட அதிமுக அடிமை ஆகிவிட்டார், கம்யூனிஸ்டுகள் சரண்டர், இதோ திருமாவும் கைகட்டி விட்டார்

ஆக என்ன புரிகின்றது?

அந்த மக்கள் நல கூட்டணி என்பது, அதிமுகவின் பி அணி என்பதும், இன்று அது தாய் அணியுடன் இணைந்துவிட்டது என்பதும் நன்றாக புரிகின்றது

விஜயகாந்தினை திட்டமிட்டு தெருவில் நிறுத்தியிருக்கின்றார்கள்

இன்னும் யாரையெல்லாம் நிறுத்த போகின்றார்களோ தெரியவில்லை.