அமெரிக்கா – ரஷ்யா பனிப்போர்

தமிழக காமெடிகள் பலவாறு நடந்துகொண்டிருக்கின்றது, தமிழன் என சொன்னாலே மற்ற நாட்டுக்காரர்கள் அல்லது அண்டை மாநிலத்தோர் ஒரு மாதிரி வாயில் கைவைத்து சிரிக்கின்றார்கள்

சிரிக்கட்டும், தமிழக தலைவிதி அப்படி

தமிழக காமெடிகளை பார்த்துகொண்டிருக்கும் பொழுதே, உலகில் பெரும் சீரியசான விஷயம் நடந்துகொண்டிருக்கின்றது

அதாகபட்டது ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் நடக்கும் மறைமுக யுத்தம் பிரசித்தி பெற்றது, ஹிட்லர் காலத்திற்கு பின் அதுதான் உலக கவனம் பெற்றது.

சோவியத் சிதறவும், எல்ட்சின் காலத்தில் ரஷ்யா அணுஆயுதம் குறைப்போம் என இறங்கி வந்ததும் கொஞ்சம் அது குறைந்தது

ஆனால் புட்டீனின் காலத்தில் அது மறுபடியும் தொடங்கியே விட்டது, சிரிய யுத்தத்தில் அது கடுமையாக தெரிகின்றது

தன்னிச்சையாக புட்டீன் ரஷ்யா அணுஆயுதங்கள் எண்ணிக்கையினை அதிகரிக்கும் என்கின்றார், இன்றும் உலகில் ரஷ்யாவிடமே ஆயுதங்கள் அதிகம், அது இன்னும் கூடும் என்றால் எப்படி?

இன்று சிரியாவில், உக்ரைனில் ரஷ்யாவிற்கே வெற்றி, ரஷ்ய ராணுவ விமானங்கள் சில விபத்துக்குள்ளாவது விபத்து என ரஷ்யா சொன்னாலும், அதில் சில சந்தேகங்கள் இருப்பதை மறுக்கவில்லை

இப்படி பல விஷயங்கள் தெரிந்தாலும் ஆரம்பத்திலிருந்தே அமெரிக்காவில் ரஷ்யா ஆடிய விளையாட்டுக்கள் கொஞ்சமல்ல, அது என்னவோ அமெரிக்க ரகசியங்களை கடத்துவதில் ரஷ்யா அன்றிலிருந்தே கில்லாடி

1950களில் அப்படித்தான் அமெரிக்க அணுசக்தியினை கடத்திவந்து அணுகுண்டு செய்தார்கள், இன்னும் என்னென்னவோ செய்தார்கள்

இப்பொழுது அமெரிக்க தேர்தலில் குழப்பம் விளைவித்த சர்ச்சை வந்துவிட்டது, அதுவும் அதிபர் ஒபாமாவே களத்தில் குதித்து 35 ரஷ்யர்களை வெளியே விரட்டியிருக்கும் நிலை

என்ன செய்தது ரஷ்யா?

அமெரிக்க தேர்தலில் ஹிலாரிக்கே வாய்ப்பு இருந்தது, டிரம்ப் ரஷ்யாவுடன் நட்பில் இருக்கின்றார் என்ற சர்ச்சை அப்பொழுதே இருந்தது

ஹிலாரிக்கு காய்ச்சல் வந்தாலும், ரஷ்ய சதி என்ற நிலை அமெரிக்க தேர்தலில் இருந்தது

இதெற்கெல்லாம் எந்த ஆதாரமும் இல்லை, ரஷ்யா மறுத்தே வந்தது, வெற்றி வாய்ப்பில் ஹிலாரியே முன்னிலையில் இருந்தார்

இந்நிலையில்தான் ஹிலாரி பல தொழிலதிபர்களுக்கு வருமான வரி சலுகை செய்த ரகசிய ஈமெயிகள் வெளிவந்து, ஹிலாரி ஊழல்வாதி என ஒரு முத்திரையே விழுந்து அம்மணி தோற்றும் போனார், அன்று அதனை வெளியிட்டது எப்பிஐ என்றே செய்தி வந்தது

ஆனால் இப்பொழுது அதனை செய்தது ரஷ்ய ஹாக்கர்கள் என்று சொல்லிவிட்டார்கள், அவர்கள்தான் சர்வரில் ஊடுருவி இதனை எல்லாம் கசியவிட்டார்கள் என ஒபாமா குதிக்கின்றார்

ரஷ்யர்கள் கணிணி நுட்பத்தில் முன்பு பெரும் பலசாலிகள் அல்ல, ஆனால் இப்பொழுது முன்னேறிவிட்டார்கள். செஸ் சேம்பியன்கள் போல இப்பொழுது ஹேக்கர் சாம்பின்களும் வந்தாயிற்று

கொதித்த ஒபாமா மிக மிக உச்ச மிரட்டலில் பேசியிருக்கின்றார், 35 பேரும் வெளியே செல்லுங்கள், இல்லை என்றால்… என அவர் மிரட்டி இருப்பது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்ததான் செய்கின்றது

ரஷ்யா வழக்கம் போல கூல்

அவர்கள் எப்பொழுதும் அப்படித்தான்

முன்பு ரஷ்யாவினை உளவுபார்க்க 40 செயற்கைகோள்களை நிறுத்தியது அமெரிக்கா, நிறுத்திவிட்டு பாஷா ஸ்டைல் ரகுவ்வரன் போல சொன்னது

“அங்கே பாரு கண்ணா, நினைச்சா உன்னை 7 நிமிடத்தில் முடித்துவிடுவேன்”..

ரஷ்யா அசால்ட்டாக ரஜினி போலவே சொன்னது, ” கொஞ்சம் மேலே பாரு கண்ணா, உன்ன 7 செக்கண்ட்ல முடிச்சிருவேன்”

அதாவது அந்த 40 செயற்கை கோளுக்கும் மேல் ஒரு சக்திவாய்ந்த செயற்கைகோளை நிறுத்தியிருந்தது,

40 கோள்களையும் நிமிடத்தில் லேசர் கதிர் மூலம் அழித்தது ரஷ்யா

இப்படியாக அவர்கள் ஆடும் ஆட்டம் அலாதியானது

ஒரே வித்தியாசம் அமெரிக்கா எது என்றாலும் விளம்பரபடுத்தும், ரஷ்யா வெற்றியோ தோல்வியோ எதனையும் வெளியே சொல்லாது

இன்று டிரம்ப் வெற்றிபெற்றிருப்பற்கு அந்த ஹிலாரி மீதான ரகசியங்கள் ஹேக்கர்ஸ் மூலம் வெளிவந்ததே முதல் காரணம், ஆக சர்ச்சைகளின் படி டிரம்ப் வெற்றிக்கு காரணம் ரஷ்யாவே

இன்று ஒபாமா 35 ரஷ்யர்களை விரட்டும்பொழுது, புட்டீனிடம் இது பற்றி என்ன செய்யபோகின்றீர்கள்?, இது ரஷ்யர்களுக்கு அவமானம் இல்லையா, என கேட்டார்கள்.

அவர் அதே அமைதியாக சொன்னார்

இன்னும் 20 நாள், டிரம்ப் பதவியேற்கட்டும் அவரிடம் பேசிகொண்கின்றேன்

டிரம்ப் என்ன செய்யபோகின்றார்?, கொஞ்சமேனும் நன்றிகடன் காட்டவேண்டும் அல்லவா?, ஹிலாரியினை சிக்க வைத்த ரஷ்யர்களுக்கு டிரம்பினை சிக்க வைக்க எவ்வளவு நேரமாகும்?

ஆக விடைபெறும் நேரத்தில் டிரம்பிற்கு செக் வைத்துவிட்டு சென்றிருக்கின்றார் ஒபாமா

டிரம்ப் எப்படி சமாளிப்பாரோ தெரியாது,

ஆனால் புட்டீனுக்கு அதே மர்ம புன்சிரிப்பு.


ரஷ்ய ஹேக்கர்கள் ஈமெயில் சர்வரில் ஊடுருவினர் என ஒரு தரப்பும், வாக்கு மிஷினில் ஊடுருவினர் என இன்னொரு தரப்பும் சொல்லிகொன்டே இருக்கினன‌

ஒருவேளை வாக்கெடுப்பு மிஷினில் ஊடுருவினர் என்ற செய்தி உண்மையானால் என்னாகும்?

மொத்த தமிழக அரசியல்வாதிகளும் ரஷ்யாவிற்கு படையெடுக்கமாட்டார்களா?

எத்தனை கோடி அல்லது எத்தனை கூடன்குளம் என்றாலும் கொடுத்து அவர்களை கொண்டுவந்து ஊடுருவமாட்டார்களா?

எத்தனை நாள்தான் பிரச்சாரம் , குவாட்டார், பிரியாணி , கள்ளவோட்டு என சிரமபடுவார்கள்

இப்படி 4 ஹேக்கர்களை வைத்து மெஷினில் ஊடுருவினால் அவர்கள் சிரமம் எளிதாக தீர்ந்துவிடும்

இப்பொழுதெல்லாம் கட்சிகள் மிக அமைதியாக இருக்கின்றன,

ஒருவேளை மனதில் ரஷ்ய ஹேக்கர்களை தேடும் சிந்தனை உருவாகிகொண்டிருக்கலாம்