மனதால் ஏற்கனவே செத்துவிட்ட விவசாயி இன்று உடலாலும் சாகிறான்
பெற்றெடுத்த குழந்தையும் வயலில் இருக்கும் பயிரும் விவசாயிக்கு ஒன்றுதான்
குழந்தையினை ஒருவன் கண்ணும் கருத்துமாய் பார்ப்பதை போலவே பயிரையும் அவன் வளர்ப்பான், தூங்காமல் உண்ணாமல் பயிரோடு பயிராகவே அவன் வாழ்வு இருக்கும்
அந்த பயிர் கருகுவதை நல்ல விவசாயியால் ஏற்றுகொள்ளமுடியாது, அவன் கதறத்தான் செய்வான்
புத்திரசோகத்தை விட பெரும் சோகத்தை, கண் முன்னால் பயிர்கள் கருகி கிடப்பது விவசாயிக்கு கொடுத்துவிடும்
தாங்கமுடியாத விவசாயி வாழ்வினை முடித்துகொள்கின்றான், எண்ணிக்கை கிட்டதட்ட டஜனை தாண்டி செல்கின்றது
மனதால் ஏற்கனவே செத்துவிட்ட விவசாயி இன்று உடலாலும் சாகிறான்
மீத்தேன் எடுப்பதை நிறுத்துகின்றோம் என சொல்லிவிட்டு நைசாக கன்னடத்திற்கு கண் சிமிட்டுகின்றது மத்திய அரசு
இப்படியே தஞ்சை தரணியினை சுடுகாடு ஆக்கிவிட்டால் அதன்பின் தானாக மீத்தேனுக்கு விவசாயி வழிக்கு வருவான் என்பது அதன் கணக்கு , ஒரு விளையாட்டு
போதாகுறைக்கு வருணனும் இந்த வருடம் டக் அவுட்
இப்படி ஆளாளுக்கு ஆடி ஆடி விவசாயி வாழ்வில் விளையாடி அவனை கொன்றுகொண்டே இருக்கின்றார்கள்
ஒரு லிட்டர் நீர் 30 ரூபாய்க்கு விற்படும் நாட்டில், பயிர்களுக்கு எப்படி நீர் கிடைக்கும்? இது யார் தவறு?
இவர்களை காக்க வேண்டிய அரசு என்ன செய்கின்றது?
காவேரியில் நீர் கொண்டுவாருங்கள் என கதறினால் அவர்களோ காவேரி மணலை கொடூரமாக சுரண்டுகின்றார்கள்
மணல் கொள்ளையில் இரு கட்சிகளுமே இளைத்தவை அல்ல
அந்த மணல் கொள்ளையே காவேரி கரையில் இன்று நீரின்றி போக முதல் காரணம்.
ஆச்சரியமாக ஆளும் கட்சி மன்னார்குடி, எதிர்கட்சி திருவாரூர் என காவேரி கரையில் உருவான குடும்பங்கள் கட்சிகளாலும் ஒரு பிரயோஜனம் இல்லை
டெல்லியில் விவசாயிகளுக்காக பேச வேண்டிய தம்பிதுரை சின்னம்மா முதல்வராக கடிதம் எழுதுகின்றார்
தமிழக முதல்வர் “கருணைத்தாயே, எங்கள் உயிரே , சின்னமாவே..” என முழக்கம் இட்டுகொண்டிருக்கின்றார்
ஆக வாக்களித்த விவசாய இனமே
அண்ணா வாழ்க, எம்ஜிஆர் வாழ்க, ஜெயா வாழ்க, சின்னம்மா வாழ்க என சொல்லிகொண்டே பூச்சி மருந்தினை குடித்து சாவு
படகை சிங்களனிடம் கொடுத்த மீணவ இனமே உனக்கும் மீட்டுதர ஆளில்லை, விவசாயிடம் இருந்து முடிவினை தேடிக்கொள்
வாழமுடியா தமிழகத்தில் இருந்து விடுதலைபெறுதற்கு வேறு என்ன வழி இருக்கின்றது?
வாக்குகளை யாருக்கோ விற்றால் உயிர் கூட தமிழகத்தில் மிஞ்சாது என உயிர்கொடுத்து சொல்லிகொண்டிருக்கின்றான் விவசாயி
ஆனால் அதனையும் மீறி கருணைத்தாயே..சின்னமாவே என குரல் கேட்பதுதான் தமிழக விசித்திரம்
இதனை ஏன் என்று கேட்க தமிழகத்தில் ஒரு எதிர்கட்சியுமில்லை
பாமக மட்டும் கொஞ்சம் கேள்விகளை கேட்கின்றது
திமுக அதே சலித்துபோன பல்லவியினை பாடுகின்றது, பெரும் திட்டங்கள் அதனிடமும் இல்லை
பசியால் தன் குழந்தை சாக சகிக்காமல் உயிர்விடும் தாய்மாரை போல, நீரின்றி தன் பயிர் வாடுகவதை காண சகிக்காமல் செத்துகொண்டே இருக்கின்றான் விவசாயி