விந்தியா, ஆனந்தராஜ், நாஞ்சில் சம்பத் : அடுத்தது யாரோ ?

அந்த தலைவிக்காக மட்டும் அந்த கட்சியில் இருந்தவர்கள் விலகிகொண்டிருக்கின்றார்கள்.

தொழில்முறை அரசியல்வாதிகளுக்கு என்ன? யார் இருந்தாலும் ஏற்றுகொள்வார்கள்

விந்தியா, ஆனந்தராஜ் என வரிசையாக கழன்றவர்கள் வரிசையில் நாஞ்சில் சம்பத்தும் சேர்ந்துகொண்டார்.

காரணம் ஏதும் பகிரங்கமாக சொல்லவில்லை, மயிலு.. வான் கோழி என 16 வயது சப்பாணி போல ஏதோ சொல்லிகொண்டிருக்கின்றார்

இன்னும் சிலர் மகா அமைதி, அவர்களில் நிர்மலா பெரியசாமியும் ஒருவர்

முன்பு கலைஞர் சட்டசபைக்கு வந்தால் அவர் வேட்டியினையா உருவிவிடுவோம் என பேசியவர், இப்பொழுது சத்தமே இல்லை

சொல்லமுடியாது திமுகவிற்கு தூது விடலாம்

பழைய கலைஞராக இருந்தால் எப்படி சேர்ப்பார் தெரியுமா?

“தாய் வீட்டிற்கு மகள் வருவதில் விசித்திரம் ஏதுமில்லை, இது நம் அண்ணா திறந்து வைத்த கதவு ஒருபோதும் அடைக்காது

இன்னொரு முறை எங்கள் நம்பிக்கையினை சிதைக்கமாட்டீர்கள், இங்கு யார் வேட்டியினையும் உருவ மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் கழகம் உங்களை ஏற்றுகொள்கின்றது”