வித்தியாசமான நடிகர் நானா படேகர்

இந்தியில் வித்தியாசமான நடிகர் நானா படேகர், தமிழில் ஒரு படம் மட்டும் நடித்திருந்தார். நடிப்பினை விட கொண்டாட் வேண்டியது அவரின் மானிட நேயம்
போராடி நடிகர் ஆனார், ஆனால் விவசாயிகளின் மரணம் அவரை பாதித்தது, எல்லா மாநில விவசாயியும் சாகும்பொழுது மராட்டியன் என்ன விதிவிலக்கா?
மராட்டியத்தில் பருத்தி சாகுபடி விவசாயிகள் எல்லாம் தற்கொலை அதுவும் கூட்டு தற்கொலை செய்த காலம் அது.
நானாவின் மனதினை அது பாதித்தது
சினிமாவினை கூட பின்னர் பார்த்துகொள்ளலாம், சாகும் மக்களுக்கு ஏதாவது செய்யலாம் என சிந்திக்கின்றார்
நானா ஒரு அறக்கட்டளையினை நண்பனோடு தொடங்கினார். நாம் பவுண்டேஷன் என்பது அது.
கடும் போராட்டத்திற்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக கோடி கணக்கில் குவிந்தது, பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு பகிர்ந்தளித்தார்
மீதி பணத்தில் ஏரிகளை தூர்வாரினார், மரங்களை நட்டார் இன்றும் விவசாயிகளுக்கு அவரின் அறக்கட்டளை உதவுகின்றது
கிட்டதட்ட 700 கிராமங்களை அது காப்பாற்றிகொண்டிருக்கின்றது என்கின்றது செய்திகள்
மராட்டியத்தில் ஓசையின்றி பெரும் காரியத்தினை ஆற்றுகின்றார்
பெரும் அமைப்புகள் கவனிக்கின்றன, விரைவில் அவருக்கு ரோமன் மகேசேச போன்ற விருதுகள் வழங்கபடலாம்.
அறக்கட்டளைக்கு அள்ளி கொடுத்துவிட்டு, மிக எளிமையான வாழ்க்கைக்கு சொந்தகாரரான ராணா சொல்வது இதுதான்,
“சினிமா என்பது மக்களின் பணத்தில் இயங்கும் தொழில், மக்கள் பணத்தினை மக்களுக்கு கொடுப்பதில், வாழ்வின்றி இருக்கும் மக்களுக்கே கொடுக்கின்றோம்
எந்த சமூகத்திடம் இருந்து பெற்றோமே , அதே சமூகத்திற்கு திருப்பி கொடுக்க வேண்டும்”
இவ்வளவு செய்துவிட்டும் துளியும் அரசியல் இல்லை, இயக்கம் இல்லை, கொடி இல்லை, கூப்பாடு இல்லை
நாளைய முதல்வரே, நாளைய பஞ்சாயத்து தலைவரே என ஒரு பேனரும் இல்லை.
அவன் மனிதன், கையெடுத்து வணங்க வேண்டிய மனிதன், திரையில் மட்டும் நடித்திருக்கின்றான்.
இந்தி நடிகர்களும் அவரின் அறக்கட்டளைக்கு நிரம்ப கொடுத்திருக்கின்றார்கள்.
நமது மாநிலத்திலும் நடிகர்கள் இருக்கின்றார்கள், ஐந்து பைசா கொடுப்பார்கள்?
அட அவர்கள் சங்கத்திற்கு கட்டடம் கட்டவே இன்னும் இழுத்துகொண்டிருக்கும் கூட்டம் அது.
வரி கட்ட தப்பிக்க ஆங்காங்கே சீன் போடுவார்கள், அதோடு எல்லாம் மங்களம்.
யாரேனும் தூண்டிவிட்டால் அல்லது பயமுறுத்தினால் ஈழம் , காவேரி என ஸ்டண்ட் காட்டிவிட்டு ஓடிவிடுவார்கள்
இவர்களை எல்லாம் வரிசையாக நிற்க வைத்து ராமராஜன் ஸ்டைலில் கன்னத்தில் குத்தி, ராஜ்கிரண் ஸ்டைலில் மிதிக்க வேண்டும்.
அவர்களை சொல்லி குற்றமில்லை
விவசாயி என்றோரு படம் நடித்தே விவசாயிகளுக்கு வாழ்ந்ததாக சொல்லிவிட்டு ஆட்சிக்கு வந்தார் அல்லவா? அந்த ராமசந்திரன்
அந்த வழியில்தான் எல்லோரும் செல்கின்றார்கள்
முன் ஏர் வழியே தான் பின் ஏரும் செல்லும், தமிழ் சினிமாக்காரர்களும் அப்படித்தான்
இத்தனை விவசாயி சாகின்றான், எவனாவது ஒரு சினிமாக்காரன் வாய் திறந்தானா?
ஆனால் ஈழத்தில் செத்தால் குதிப்பான், ராஜிவ் கொலையாளி சிறையில் இருந்தால் ஒப்பாரி வைப்பான்
ஆனால் தஞ்சை மக்கள் செத்துகொண்டிருந்தால் அமைதியாக இருப்பான்
ஈழ தமிழன் அவன் படத்தினை ஐரோப்பாவில் ஓடவைக்கின்றான் அவனிடம் பணம் இருக்கின்றது
தஞ்சாவூர் விவசாயிடம் என்ன இருக்கின்றது?
பின் எப்படி இவர்கள் வாய் திறப்பார்கள்
இதற்கெல்லாம் தமிழக திரையுலகம் வாயினை திறக்காது
இங்கு கருப்பு சிவப்பு பச்சை டவுசர் எம்ஜிஆர், தலவலி, தறுதல , பச்சை தமிழன் என பலர் உண்டு, இன்னும் ஏராள இம்சைகள் உண்டு
ஆனால் ஒரு நானா படேகர் கூட இல்லை
இந்த கூத்தாடி கும்பலை விடுங்கள்
தமிழக மக்களும் இரக்கம் மிகுந்தவர்கள், யாரேனும் இப்படி களத்தில் இறங்கினால் நிச்சயம் அள்ளிகொடுக்க அவர்களும் தயார்
ஆனால் ஒரு பிரபலம் முன்வரவேண்டும், வந்துவிட்டால் சக தமிழனின் சாவினை காக்க தமிழகம் திரளும்
ஆனால் வருவது யார்?
இதனை வைத்து 4 வோட்டு வாங்க முடியாதா? எதிர்கட்சியினை முடக்க முடியாதா? என சிந்திப்போர் வருவர்
முதலில் இம்மாதிரி விஷயங்களில் இந்த அரசியல் கட்சிகள் சென்று ஆறுதல் அளிப்பதை அடித்து விரட்ட வேண்டும்
தமிழிசை முதல் எல்லா அரசியல்வாதிகளும் செல்வார்கள், மிஞ்சி போனால் சில லட்சங்களை செத்தவன் வீட்டிற்கு கொடுத்துவிட்டு அடுத்தவனை சாக தூண்டுவார்கள்
அவர்களை அடித்து விரட்டிவிட்டு உதவும் மனப்பான்மையில் ஒருவன் வருவானே ஆனால், அவனே காவேரிதாயின் தலைமகன்
சிறுதுளிகள் சேர்ந்து வெள்ளமாவது போல சிறுநன்கொடைகள் அவன் கையில் காவேரி வெள்ளமாகும்
காவேரி பொய்த்தாலும் தான் பொய்க்காத தன்மையாக அது மாறும்
அப்படி ஒருவன் வரட்டும்
வருணன் கைவிட்ட காலங்களில் எல்லாம் அம்மக்களை காப்பாற்றட்டும்
தமிழக நடிகர்களும், போலி அரசியல்வாதிகளும் அதனை கண்டு நாணட்டும்