ஸ்டாலினை ஜல்லிக்கட்டும் சசிகலா…

https://youtu.be/GFCOJYaUjIw

 

ஜல்லிக்கட்டு தடைக்கு திமுக-காங்கிரஸே காரணம்: அதிமுக பொதுச் செயலர் வி.கே.சசிகலா

இது வழக்கமாக யாரின் குரல்?, ஜெயலலிதா குரல். அவர் தொடங்க சீமான் போன்றோர் வில்லுபாட்டு பாடுவார்கள்

சசிகலா சொல்வது படி பார்த்தால் திமுகவும் காங்கிரசுமே தடையாக இருந்தாலும் இப்பொழுது திமுகவும் காங்கிரசும் ஆட்சியில் இல்லை

இரு ஆண்டுகளாக டெல்லியில் பாஜகவும், 6 ஆண்டுகளாக தமிழகத்தில் அதிமுகவும் ஆண்டுகொண்டிருக்கின்றன‌

ஆளுவது பாஜகவும், அதிமுகவும், பின் ஜல்லிகட்டை நடத்த என்ன தடை?

பாரத ரத்னாவும், நோபல் பரிசும் கேட்ட கட்சி இப்படி கேட்கவில்லை என்றால்தான் ஆச்சரியம்.

அனுபவமின்மை என்பது அழகாக தெரிகின்றது,

சரி என்ன சொல்ல வருகின்றார்?

ஒருவேளை பன்னீர் முதல்வராகவும் தான் பிரதமராகவும் இருந்தால் நொடியில் ஜல்லிகட்டினை நடத்திவிடலாம் என சொல்ல வருகின்றரோ?

தமிழக அரசியல் களம் மிக எளிதானது

அரசியல் செய்யவேண்டுமென்றால் கலைஞரை எதிர்க்க வேண்டும், அவரை கண்டிக்க வேண்டும், திட்ட வேண்டும், குற்றம் சாட்டிகொண்டே இருக்க வேண்டும்

அதனையே சசிகலாவும் செய்வதில் ஆச்சரியமில்லை

ஆனால் இப்படி சசிகலா அபத்தமாக பிதற்றினால், சீமான் போல சுத்தமாக எடுபடாது..

அந்த மனிதனுக்கு பின் யாரை திட்டுவார்கள் என்பதில்தான் இவர்களின் அரசியல் எதிர்காலமே அடங்கியுள்ளது.