கவுண்டமணி செந்தில் சின்னம்மா காமெடி….

Image may contain: one or more people

ஆயிரம் காமெடியன்கள் வந்தாலும் தலைவன் கவுண்டமணி காட்சிகளுக்கு ஈடே கிடையாது, அதுவும் அவர் கலக்கிய காட்சிகள் எல்லாம் அப்படியே அரசியலுக்கும் பொருந்துகின்றது

அப்படி ஒரு நகைச்சுவை காட்சி ஓடிக்கொண்டிருந்தது, கதவு தட்டப்படுகின்றது, கவுண்டர் திறந்து கேட்கின்றார், அப்பக்கம் ஒரு பிச்சைக்காரி சொல்கின்றார்

“நான் தான் சின்னம்மா வந்திருக்கேன்..” சொல்லிவிட்டு வீட்டுக்குள் வந்தமர்ந்து, கொழுப்பில்லா ஆட்டுக்கறி எடுத்து ஆயில் இல்லாக சமைச்சு போடு, 4 நாள் (4.5 நாள் அல்ல) இருந்துட்டு போறேன்”

கவுண்டமணி யார் டி நீ உனக்கு என்னா தெனாவெட்டு, யார் வீட்டுக்குள்ள வந்து என்ன பேச்சி பேசுற..பிச்சைக்காரி ஓடிப்போ என கத்துகின்றார்

செந்தில் ஓடி வந்து தடுக்கின்றார்

“மை சன் மேடத்த திட்டாதீங்க….”

இதை நினைத்து சிரிக்கும் பொழுது, பல விஷயங்களை நினைத்து சிரிக்க வேண்டியிருக்கின்றது

வேறு சேனலுக்கு மாறினாலும்

“நான் தான் சின்னம்மா வந்திருக்கேன்.. பிச்சக்காரி ஓடிப்போ, யார் வீட்டுக்குள்ள வந்திருக்கே..

மை சன் மேடத்த திட்டாதீங்க… ”

போன்ற் வசனங்கள் காதோரம் கேட்டுகொண்டே இருக்கின்றான்

நாட்டாமையாக நடித்த சரத்குமார் எப்படியும் இக்காட்சிகளை தற்போதும் பாத்துகொண்டுதான் இருப்ப்பார்.

ஆனால் சிரிக்க முடியுமா?


அடுத்த காட்சி இன்னொரு சேனலில் ஓடிகொண்டிருக்கின்றது, சோ ராமசாமியினை பொலீஸ் கைது செய்து இழுத்து செல்கிறது, சோ கெஞ்சுகின்றார்

“சார் சார் என்ன பாளையங்கோட்டை ஜெயில்ல போடுங்க சார், பிளீஸ் போடுங்க சார்”

“ஏன்யா?” என காவலர் கேட்கின்றார்

சோ சொல்கிறார் “அப்படியே 4 கரப்பான் பூச்சி, விஷமில்லா 2 பாம்பும் போடுங்க சார் எவ்வளவு லஞ்சமும் தாரேன்”

குழம்பி போய் காவலர் கேட்கின்றார் “ஏன்யா அங்க, அதுவும் கரப்பான் பூச்சி எல்லாம்?”

சோ முட்டைகண்ணை உருட்டி சொல்கின்றார்

“சார் நானும் பாளையங்கோட்டை சிறையினிலே, பாம்புகள் பல்லிகள் நடுவினிலே அப்படி பாட்டு எல்லாம் பாட ஆசையா இருக்கு சார்”

மனிதர் அரசியலின் அனைத்து காட்சிகளையும் கலாய்த்துவிட்டுத்தான் சென்றிருக்கின்றார்.