ஜெ. சிகிச்சை தகவல்களை தர தயார் : அப்பல்லோ

ஜெ. சிகிச்சை குறித்த தகவல்களை தர தயார் : அப்பல்லோ நிர்வாகம்

முன்பு சிகிச்சை தரவுகளை தரவே முடியாது என அடம்பிடித்ததும் இதே அப்பல்லோதான்

இப்பொழுது நீதிமன்றம் மற்றும் உள்துறை அமைச்சகம் நெருக்கடிகளை தொடங்கிய பின் கொஞ்சம் இறங்கி வந்திருக்கின்றது

சிபிஐ விசாரணை என மத்திய அரசு இறங்கியிருப்பதுதான் பல கேள்விகளை எழுப்புகின்றது.

நல்ல வேளையாக முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் வந்து சென்றதால் தகவல்களை சில ஒப்பீட்டுகளை செய்து பார்த்துகொள்ளும் வாய்ப்பு உண்டு.

எப்படியும் இயற்கை மரணம் என்றுதான் சொல்வார்கள். சரி 75 நாள் ஜெயா உயிரோடு இருந்தார் என்பதற்கு ஒரு வீடியோ கூடவா இல்லை என்பதில் மாட்டிகொள்வார்கள்.

ஒரு மருத்துவர் தனியாக மருத்துவம் பார்த்திருக்க முடியாது, ஜெயாவுடன் இருந்த நர்சுகள், இதர டாக்டர்கள் என பலரையும் தனிதனியாக விசாரித்தாலன்றி விஷயம் வெளிவராது.

அப்பல்லோ எப்படிபட்ட தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க போகின்றார்களோ தெரியாது

ஆனால் இவ்வளவு தாமதமாக ஏன் ஒப்புகொள்ளவேண்டும் என்பதில்தான் பெரும் மர்மம் அடங்கி இருக்கின்றது.

அந்த 7 நாட்கள் படம் எடுத்தார் பாக்கியராஜ், அதில் நாயகியினை விட்டு விட்டு பரிதாபமாக பிரிந்து செல்வார்

இவர்கள் “அந்த 75 நாட்கள்” எனும் படத்தினை எப்படி எடுத்திருக்கின்றார்களோ.?..

இதிலும் நாயகி திரும்பவே இல்லை..

பேஷண்டை உயிரோட அனுப்பலாம் சாரே, பட்சே ஒருக்காலும் பொணத்த நடமாட வைக்க முடியாது சாரே என உருக்கமாக கிளைமேக்ஸ் டயலாக் இருக்கலாமோ..