கரும்புச்செய்திகள்….
விரைவில் கரும்பினை சீனி தயாரிக்கும் பொருள், மக்கள் கடிக்க அனுமதி இல்லை எனும் வகையில் மத்திய அரசு சேர்த்துவிட்டது, தமிழனுக்கு கரும்பு கடிக்க உரிமை இல்லை என்ற வதந்தி வந்தாலும் வரும்
உடனே நம் தலைவர்கள் எல்லாம் கையில் கரும்போடு காட்சி அளிப்பதை காணலாம்.
கரும்பு மன்மதன் வில் என்பார்கள், அப்படியானால் நம் தலைவர்கள் நிற்பது மன்மத கோலம் என்றாகிவிடும்
அதுவும் அங்கிள் சைமன் தடையினை மீறி கையில் கரும்பு வில்லோடு மன்மதகோலத்தில் நிற்கும்பொழுது அவர் மனைவிக்கே நடிகை விஜயலட்சுமி நினைவு வந்துவிடும்
பட்டினத்தார் கோலத்திலும் கரும்பு உண்டு
பட்டினத்தார் எனும் தமிழ் துறவியும் வாழ்வின் நுனி இனிப்பு, முடிவு கசப்பு என்ற தத்துவத்தோடுதான் நிற்பார்,
ஆனால் கோவணத்தோடு நிற்பார் என்பதால் நம் தலைவர்கள் அந்த அளவிற்கு செல்லமாட்டர்கள்
உடை அலங்காரத்தில் எப்பொழுதுமே நம் தலைவர்கள் பாணி தனி என்பதால் பட்டினத்தார் கோலமெல்லாம் வராது.
ஆக எவனாவது கரும்புக்கு தடை என கொளுத்திபோட்டால் நம் தலைவர்கள் எல்லாம் மன்மத கோலத்தில் கரும்போடு நிற்பார்கள்.
சில தலைவர்களின் உண்மையான கோலமும் அதுதான்..
எங்கள் கிராமத்து திருவிழாவிற்காக தமிழகம் முழுக்க “கட்டாய விடுமுறை” விடுமாறு தமிழக
அரசினை எச்சரிக்கின்றோம்
இல்லை என்றால் போராட்டம் வெடிக்கும்.
நாங்கள் ஆணையிட்டால் பொங்கல் பொங்காது, மாடுகள் மேயாது
ஏய் பார்ப்பன மத்திய அரசே உங்களுக்கும் அதுவே எச்சரிக்கை
கட்டாய விடுமுறை அளிக்கபடாவிட்டால் விஏஓ அலுவலகம் முன் பெரும் போராட்டம் நடத்துவோம்..
வேலை வெட்டி இல்லாதவர்களை அழைத்துகொண்டு, வேலை இருப்பவர்கள் விடுமுறை எடுத்து விடுமுறை வேண்டி போராட்டம் நடத்துவோம் என வன்மையாக எச்சரிக்கின்றோம்
விடுமுறை வேண்டி போராட விடுமுறை எடுப்பவர்களுக்கு , சம்பளத்தோடு கூடிய விடுமுறை கொடுத்துவிடுங்கள் என்றும் கேட்டுகொள்கின்றோம்..