சின்னம்மா கடிதம்… சீமான் பேட்டி….

நீட்’ தேர்வுக்கு விலக்கு அளிக்க – பிரதமருக்கு சசிகலா கடிதம்

இப்பொழுதெல்லாம் தமிழக மக்கள் மீதும், தமிழகம் மீதும் சசிகலாவிற்கு பீறிட்டு வரும் அக்கறை கொஞ்சமல்ல, எல்லா பிரச்சினைக்கும் பிரதமருக்கு நேரடியாகவே கடிதம் எழுத தொடங்கிவிட்டார்

முதல்வர் பன்னீர் செல்வமும் கடிதம் எழுதுகின்றார், சசிகலாவும் எழுதுகின்றார், ஆனால் பிரச்சினை ஒன்றேதான். பின் ஏன் இரட்டை கடிதம் என நாம் கேட்க கூடாது.

ஆக தமிழகத்திற்கு இரு முதல்வர்கள் என தெரிகின்றது

ஒன்று மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட முதல்வர், இன்னொருவர் தன்னை முதல்வராகவே நினைத்துகொண்டு செயல்படும் முதல்வர்

இரட்டை இலை கட்சிதான், அதனால் இரட்டை முதல்வர்கள் இருக்கின்றார்களோ என்னவோ?


தமிழ் உணர்வோடு நடந்த அறவழி போராட்டத்தை வன்முறையாக மாற்றியது போலீஸ்: சீமான் பேட்டி

கலைஞர் ஆட்சியில் இப்படி நடந்தால் அது வந்தேறி கலைஞரின் தமிழின துரோகம், ஆனால் பச்சை தமிழன் பன்னீர் ஆட்சியில் நடந்தால் அது போலீஸ் துரோகம்,

மாறாக அரசு பற்றியோ முதல்வர் பற்றியோ அன்னார் வாய் திறக்கமாட்டார்

இனியாவது திருந்த கூடாதா மிஸ்டர் சைமன்?