ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை…
ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க டெல்லி மேல்-சபையில் அ.தி.மு.க. கோரிக்கை
தமிழகம் வறட்சியில் இருக்கின்றது, குடி நீர் தட்டுபாடு மோசமாகிகொண்டிருக்கின்றது, பட்ஜெட் அறிவிப்பிலும் தமிழகத்திற்கு பெரும் திட்டங்கள் இல்லை
கச்சா எண்ணெய் கடலில் கவிழ்ந்து அப்பகுதி மீணவர் எல்லாம் பாதிக்கபட்டு திகைக்கின்றனர், கிட்டதட்ட 2 ஆயிரம் டன் கிலோ மீன்கள் கேட்பாரற்று கிடக்கின்றன
இன்னும் எத்தனையோ பெரும் சிக்கல்களும், பிரச்சினைகளும் தமிழகத்திற்கு உண்டு
ஆனால் இவர்கள் கவலை எங்கிருக்கின்றது பார்த்தீர்களா? இனி என்ன செய்வார்கள் தெரியுமா? மைக் கிடைத்தவுடன் சின்னம்மா கோரிக்கையினை நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாக மகிழ்ச்சி பொங்க சொல்வார்கள்.
விரைவில் நடராஜனுக்கு துரோணாசாரியா விருது கேட்டாலும் கேட்பார்கள்.
இன்னும் எதனை எல்லாம் சகிக்கவேண்டியிருக்கின்றதோ தெரியவில்லை.