மீனுக்குள் பெருஞ்சுவை வைத்தான்

“மீனுக்குள் பெருஞ்சுவை வைத்தான்
புவி பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர்
அதில் ஐஸ் போட்டு கெடுத்தார்”

சென்னையில் ஆயில் கொட்டி கெடுக்கின்றார்களாம்

ஆக எல்லா இடத்திலும் எப்படியோ ஆளாளுக்கு மீன் சுவையினை கெடுத்துகொண்டே இருக்கின்றார்கள்

அங்கு சென்று வந்தபின் ஒரு இடிந்தகரை நண்பர் இடிந்தகரைக்கு வருமாறு அழைக்கின்றார்

அய்யா, ஒருவார்த்தை அங்கு இருக்கும்பொழுது சொல்லியிருக்க கூடாதா? ஒரு மண்பானையும் கொஞ்சம் மளிகையும் வாங்கிகொண்டு ஓடிவந்திருக்க மாட்டேனா?

இடிந்தகரை குதிப்பு மீனென்றால் குதித்தோடிவாரதோர் நாவில் புண்ணுடையர் அல்லவா?