கவிஞரின் அந்த வரிகள் மன்னார்குடி கும்பலுக்கும் பொருந்தும்…

sas

அக்கிரமக்காரர்களும் சர்வாதிரிகளும் சாதரணமாக ஓய மாட்டார்கள். அப்படி ஓய்ந்துவிட்டால் அவர்கள் சுயரூபம் யாருக்கு தெரியும்? தியாகிகள் ஆக மாட்டார்களா?

அதனால் ஆண்டவன் அவர்களின் முழு உருவம் உலகிற்கு தெரியுமட்டும் சில ஆட்டங்களை ஆடுவான், அக்கிரமக்காரர்காள் அவர்களை அறியாமல் ஆண்டவன் வலைக்குள் சிக்குவார்கள்

ஆண்டவனும் அதிகாரம் கொடுத்து அவர்களை ஆடவிட்டு ரசிப்பான்.

கொஞ்சகாலம் அதிகாரம் அவர்கள் கையில் சிக்கும், ஆடுவார்கள், அழிச்சாட்டியம் செய்வார்கள். ஆடித்தான் அடங்குவார்கள்.

உலகின் தர்மசக்கரம் அப்படித்தான் சுழன்றுகொண்டிருக்கின்றது.

காலகாலத்திற்கும் வரலாற்றின் கருப்பு பக்கங்களில் இடம்பெறுவார்கள், வரலாறு அப்படித்தான் அவர்களின் காலங்களை குறிக்கும், சந்ததிகளும் அப்படித்தான் அவர்களின் பக்கங்களை காரிதுப்பிவிட்டு செல்லும்

அணையபோகும் அக்கிரமக்காரர்களின் வாழ்வு ஒரு வெப்ப ஓளி வீசிவிட்டுத்தான் அணையும், அந்த தாங்கொணா வெப்பத்தில்தான் உலகம் அறிவும் உணர்ச்சியும் பெறும்

ராவணன் காலம் முதல் ஹிட்லர் காலம் வரை, ஹிட்லர் என்ன? பிரபாகரன் காலம் வரை அதுதான் நடந்தது.

தமிழகத்திலும் நடப்பதை பார்க்க நமக்கெல்லாம் கொடுத்துவைத்திருக்கின்றது

இனி ஆடுவார்கள், பள்ளுபாடுவார்கள் இல்லாத அழிச்சாட்டியம் எல்லாம் செய்வார்கள், பின் தானாக முன்னோடிகள் சென்ற இடத்திற்கு செல்வார்கள்

எப்படி ஒரு ஆட்சியாளர் பதவிக்கு வர கூடாது, எப்படிபட்ட தவறுகளை செய்ய கூடாது என்பதற்கு அவர்கள் எடுத்துகாட்டாவார்கள்

இதுவும் கடந்து போகும், இது கடந்துகொண்டிருக்கும் பொழுதாவது தமிழனனுக்கு அறிவும் மானமும் வரட்டும்.

எந்த சூழ்ச்சியும் தந்திரமும் நெடுங்காலம் வென்றதில்லை, அப்படி வென்று நிலைத்திருந்தால் கடவுள் என்றொருவனே இல்லை.

எல்லா சூழ்நிலைக்கும் தீர்க்கதரிசனமாக வரிகள் எழுதி வைத்தவன் தலைவன் கண்ணதாசன்.

அன்று ராமசந்திரன் முதல்வராகும் பொழுது அவர் எழுதிய வரிகள், ஜெயலலிதாவிற்கும் பொருந்தியது

இன்று மன்னார்குடி கும்பலுக்கும் பொருந்துகின்றது.

” அழகாக தோன்றும் ஒரு கருநாகம் கண்டேன் .
அநியாயம் செய்பவர்க்கும் மரியாதை கண்டேன் .
சதிகார கும்பல் ஒன்று சபையேற கண்டேன் “

எவ்வளவு பொருத்தமான வரிகள், எத்தனை காலத்திற்கும் பொருந்தி வரும் சாகா வரிகள்

அது பொய்க்காமல் போனது, அப்படியே கவிஞனின் இந்த வரிகளும் பொய்க்காது, காலம் காட்டும்

“சட்டத்தின் பின்னால் நின்று சதிராடும் கூட்டம்
தலைமாறி மாறி ஆடும் சதிகார கூட்டம்
என்றைக்கும் மேலிடத்தில் இவர் மீது நோட்டம்
இப்போது தெரியாது எதிர்காலம் காட்டும்.

நாடக வேஷம் கூட வராது
நாளைய உலகம் இவரை விடாது சொல்கின்றேன்”

அந்த தெய்வீக கவிஞனின் தீர்க்க தரிசனம் பலிக்கட்டும்