கீழ்நாட்டு கிளியோபாட்ரா..

முன்பு எகிப்தில் கிளியோபாட்ரா என்றொருத்தி இருந்தாளாம் , அவளின் ஆசைகள் மூன்று
1) எகிப்தின் ராணியாக தானே ஆளவேண்டும்,
2) யார் குறுக்கே வந்தாலும் கொன்றுவிட்டு ஆளவேண்டும்.
3)கொல்லமுடியாதோர் குறுக்கே வந்தால் எதை கொடுத்தாவது அவர்களையும், அவர்கள் தேசத்தையும் சேர்த்து ஆளவேண்டும்
அப்படி உடன்பிறந்த தம்பியினை கொன்றாள், ஜூலியஸ் சீசரின் சாவுக்கு காரணமாயிருந்தாள், மாவீரன் ஆண்டனி மண்ணை கவ்வ அவளே காரணமாயிருந்தாள்
கொஞ்சம் ரோமை மக்கள் அசந்திருந்தால், ரோமையின் ராணியாக உலகாள கிளம்பியிருப்பாள், உலகம் அவள் காலடியில் சுருங்கியிருக்கும்
ஆனால் அக்கால ரோமை மக்களுக்கு மானமும் அறிவும் போராட்ட குணமும் இருந்திருக்கின்றது, அந்த கிளியோபாட்ராவின் நிழல் கூட ஆக்கிரமிக்கா வண்ணம் விரட்டிவிட்டார்கள்
இறுதியில் ரோமையர் கொல்லும் முன் தற்கொலை செய்தாள் கிளியோபாட்ரா.
இது மேல்நாட்டு கிளியோபாட்ரா கதை, சகோதரன் மரணதிலிருந்து அவள் ஆட்சிக்கு வந்து ஆட்டம்போட்டு அழிந்த கதை.
ஆச்சரியமாக “கீழ்நாட்டு கிளியோபாட்ரா” அந்த எகிப்து தேசத்தவள் போலவே உடன் பிறவா சகோதரியின் சாவிலிருந்து ஆட்சிக்கு வருகின்றார்
தமிழகத்திலும் எகிப்து காட்சிகள் அரங்கேறிகொண்டிருக்கின்றன என்பதுதான் வரலாற்று ஆச்சரியம்.
ஆக அருமை தமிழர்களே, “கீழ்நாட்டு கிளியோபாட்ரா..” எனும் வரலாற்று தொடர் பிரமாதமாக ஆரம்பிக்கபடுகின்றது.
அதனால் அவ்வப்போது பார்த்து கை தட்டிகொண்டே இருப்போம்.