“மண்டபம் வந்து விட்ட வசந்தசேனை” என விளாசியிருக்க மாட்டாரா?

அவர் இப்பொழுது பழைய நலத்துடன் இருந்திருந்தால் இந்நேரம் எப்படி எல்லாம் வரிகள் வரும்

“மண்டபம் வந்து விட்ட வசந்தசேனை” என விளாசியிருக்க மாட்டாரா?

வட்டமிட்ட கழுகு, வாய் பிளந்த ஓநாய், கீழ்நாட்டு கிளியோபாட்ரா, தென்னகத்து பூலன் தேவி என்றெல்லாம் வார்த்தை “கல்” சீறியிருக்காதா?

அம்மையாருக்கு பதில் அம்மி கல்லா?, என்றெல்லாம் வார்த்தைகள் பறக்காதா?

கையெழுத்து போட தெரியாதோருக்கு அரசு ஒரு கேடா?

இவர்களோடு நாம் அரசியல் செய்வதா? மானம் காப்போம், பதவி துறப்போம், தமிழக மக்களிடமே தேர்தலில் நீதி கேட்போம்

புறவாசல் வழியாக கொலுமண்டபம் வந்திருக்கும் வசந்த சேனை, மக்கள் மன்றம் முன் தேர்தலில் நிற்க தயாரா? முடியுமா?

தமிழகமே எழுக, இனம் காக்க எழுக, குலம் காக்க எழுக, தமிழர் நலம் காக்க எழுக‌

தேர்தலை சந்திப்போம், தேரா மடையருக்கு முற்றுவைப்போம்

இன்னும் எப்படிஎல்லாம் எழுதி கிளப்புவார்?, உறுதியாக சொல்லலாம் ஏதாவது செய்து நிச்சயம் தேர்தலுக்கு கொண்டு சென்றுவிடுவார்

இந்நேரம் ஆளுநரை சந்தித்தே ஆப்பு வைத்திருப்பார்.

அந்த கலைஞர் இல்லாத திமுக தடுமாறுகின்றது, அடித்து ஆட வேண்டிய ஸ்டாலின் கொட்டாவி விட்டுகொண்டிருக்கின்றார்

இம்மாதிரி வாய்ப்புகளை வீணடிப்பதும் திமுக எனும் கட்சியினை கலைத்துவிடுவதும் ஒன்று,

ஸாடாலின் அந்த கட்சியினை அழித்துகொண்டிருக்கின்றார், அது அறியா உடன்பிறப்புக்கள் தளபதி தளபதி என சொல்லிகொண்டிருக்கின்றன‌

தளபதியோ ஆழ்ந்த உறக்கத்திலிருக்கின்றார், வாள் சுழற்றவேண்டிய நேரத்தில் என்ன செய்வதென்றெ அவருக்கு தெரியவில்லை. எதிரியின் ஒவ்வொரு அசைவினையும் கணித்து நகர்பவனே வெற்றிபெறுவான்

அவர்களுக்காக எதுவும் நடக்கட்டும், நாம் பல்குத்திகொண்டிருக்கலாம், தேர்தலில் பார்த்துகொள்ளலாம் என்றால் ஒரு மண்ணாங்கட்டியும் நடக்காது.

திமுகவின் வாளை தீட்டவேண்டிய நேரத்தில் அதனை பரண் மேல் விசிவிட்டு ஹாயாக இருக்கின்றார் அவர்,

மனம் கலைஞரை தேடுகின்றது

ஒரு முறை, ஒரே ஒரு முறை வந்து,

“வளைத்து நிற்கும் வசந்த சேனை, குனிந்து நிற்கும் வானர சேனை” என ஒரு பக்கம் எழுதிவிட்டு செல்லுங்கள் அய்யா…

அப்படியே இந்த ஸ்டாலினையும் இழுத்து செல்லுங்கள்.

ஏன் இறுதிவரை தயங்கினீர்கள் என்பது இப்பொழுதுதான் புரிகின்றது.