சசிகலா வெற்றிபெற எளிதான தொகுதி எது : உளவுதுறையினர் கடும் ஆய்வு
சசிகலா வெற்றிபெற எளிதான தொகுதி எது : உளவுதுறையினர் கடும் ஆய்வு
இந்த உளவுதுறையினருக்கு சம்பளம் வழங்குவது அரசு, அதாவது மக்கள் வரிப்பணம்
ரகசிய உளவுநடவடிக்கைகளில் ஈடுபட்டு துப்பு துலக்குவது முதல் பெரும் கலவரங்களை தொடக்கத்திலே தடுப்பது, அந்நிய சக்திகள் ஊடுருவுவதை கண்டறிவது என அதன் பணி பெரிது.
அதாவது இம்மாநில மக்களை ரகசியமாக காக்கும் அமைப்பு அது
ராமஜெயம் கொலை போல ஏராளமான முடிவு தெரியா கொலைகள் உண்டு, புலிகள் போல ஐஎஸ் போல தமிழகத்தில் ஊடுருவும் தீவிரவாத இயக்கம் உண்டு, அப்படி உளவுதுறைக்கு ஏகபட்ட அவசர வேலைகள்.
போதை மருந்து விவகாரம், கடத்தல் என அது கட்டுபடுத்தவேண்டிய விஷயம் ஏராளம் உண்டு, (முன்பு கள்ளச்சாராயம் இருந்தது இப்பொழுது அரசே விற்பதால் அந்த சிக்கல் இல்லை..)
அதனை எல்லாம் விட்டுவிட்டு உளவுதுறை என்ன வேலை செய்கிறது பார்த்தீர்களா? சசிகலா ஜெயிக்க தொகுதி உளவு பார்க்கின்றதாம், உருப்படுமா?
இதில் சசிகலா போட்டியிட பல எம் எல் ஏக்கள் தங்கள் பதவியினை ராஜினாமா செய்ய தயாராக இருக்கின்றார்களாம், எப்படி எல்லாம் வோட்டு கேட்டார்கள்? எப்படி எல்லாம் மக்கள் முன் உருகி நின்றார்கள்? தொகுதிதான் உயிர் என்றார்கள்
இன்று சசிகலாவிற்காக தொகுதியினை தூக்கி எறிய தயாராகிவிட்டார்கள்
அவர்களுக்க்கும் ஏதோ கிடைத்திருக்கும், கடையினை காலி செய்பவன் அடுத்து வருபவனிடம் ஒரு தொகை வாங்கிகொண்டு காலி செய்வது போல காலிசெய்துவிடுவார்கள், மடி கனத்தால் போதாதா? மக்கள் பணி மகேசன் பணி எல்லாம் சும்மா
மகேசன் கொடுக்கும்பொழுது வாங்கி கொண்டு நகர்ந்துவிடவேண்டும் என்பது அரசியல் கணக்கு
வாக்களித்த மக்கள் நிலை எப்படி இருக்கும்? வேட்பாளரை நம்பி வாக்களித்தால் ஏமாற்றமாக இருக்கும்,
காசை வாங்கிகொண்டு வாக்களித்தால் அடுத்தால் எவ்வளவு வாங்கலாம் என்றுதான் யோசிக்க சொல்லும்
முன்பு வோட்டுக்கு கிடைத்ததை விட மகா கணிசமாக கிடைக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பிலும் மகிழ்ச்சியிலும் குதூகலிக்கின்றார்கள்
அந்த நம்பிக்கையில்தானே சசிகலா போட்டியிட போகின்றார், பணம் வேண்டாம், தமிழக நலன் வேண்டும் என மக்கள் போட்டியிட்டால் சசிகலாவால் 1 வோட்டு வாங்க முடியும்?
சரி உளவுதுறை என்ன மாதிரி தொகுதியினை தேடிகொண்டிருக்க்கின்றது?
எந்த தொகுதியில் சாதி வேகமும், பணம் கொடுத்தால் மக்களை வாங்கிவிடும் அளவிற்கு அறியாமையும், எம்ஜிஆர் செத்தது கூட தெரியாமல் இரட்டை இலைக்கு கண்ணை மூடிகொண்டு குத்தும் அப்பாவிகள் உள்ள தொகுதியினை தேடுகின்றது
நிச்சயமாக அப்படி ஒரு தொகுதியினைத்தான் தேடுகின்றது
அதாவது முதல்வராக போகின்றவர், தன் மாநிலத்திலே மாக பரிதாபமனான மக்கள் நிரம்பிய தொகுதியினை தேடி கொண்டிருக்கின்றார்
ஏதும் கேட்டால், நோயாளிகளை தேடி அன்னை தெரசா செல்லவில்லையா? அப்படி பின் தங்கிய மக்களை தேடி எங்கள் சின்னம்மா செல்கின்றார் என கண்களை துடைத்தபடி தழுதழுத்த குரலில் சொல்வார்கள்
உடனே ஒருவன் மன்னார்குடி அன்னை தெரசா சின்னம்மா வாழ்க என உணர்ச்சிபொங்க கத்த, அவர் முதல்வராக வாழ்க என கூட்டமே கத்தும்.
பெண்களைக் கவரும் திட்டங்களில் முதல் கையெழுத்திடுகிறார் சசிகலா
ஆண்கள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்களை கவர ஒரு திட்டமும் இல்லையா?
“அம்மா” ஆசிபெற்ற நமீதாவினை “பொதுப்பணி துறை” அமைச்சராக அல்லது “விளையாட்டு துறை” அமைச்சராக நியமித்தால்தான் என்ன?