ஆளுநருக்கு என்ன தயக்கம்??

சசிகலாவினை முதல்வராக்க ஆளுநருக்கு என்ன தயக்கம்?? ஆளுநர் எல்லை மீறுகின்றார், ஆளுநர் அராஜகம் ஒழிக என்றெல்லாம் சில அதிமுக அடிமைகள் கத்த தொடங்கிவிட்டன‌

முன்பு காரணமே இல்லாமல் கலைஞர் ஆட்சியினை டெல்லி கலைத்தபொழுது இவர்கள் எல்லாம் இது அத்து மீறல் அராஜகம் என ஒரு வார்த்தையும் பேசவில்லை என்பது குறிப்பிடதக்கது.

பாத்திமா பீவி போன்ற அடிமை கவர்ணர்கள் இருந்த பொழுதும் சத்தமே இல்லை

ஆக கலைஞர் ஆட்சி கலைத்தவர்கள், மற்றும் பாத்திமா பீவி போன்றவர்கள் எல்லாம் அத்து மீறா கவர்ணர்கள்

கலைஞர் ஆட்சி கலைக்க மறுத்தவர்கள், சசிகலாவிற்கு முட்டுகட்டை போடுபவர்கள் எல்லாம் அத்து மீறும் கவர்ணர்கள்.

முன்பு அத்து மீறிய கவர்ணர் என சென்னா ரெட்டியினை சொன்னார்கள், நினைவிருக்கின்றதா?

இப்பொழுது எல்லை மீறிய கவர்ணர் என இவரை சொல்கின்றார்கள்.

அடுத்த கவர்ணர் இவர்களிடம் எதை மீற போகின்றாரோ தெரியவில்லை’


சென்னைக்கு வராத ஆளுநர், குடும்பத்தாரையும் மும்பைக்கு அழைத்துகொண்டார்.

ஆளுநர் சசிகலாவினை சந்திக்காமல் போனதில் மர்மம் இல்லை, ஆனால் குடும்பம் வெளியேற என்ன நடந்தது?

லண்டன் டாக்டர் வந்து அது “இயற்கை மரணம், இயற்கை மரணம்..” என சொல்ல சொல்ல ஆளுநரே அலறிவிட்டார் போல‌

“மரண பயத்த காட்டீட்டாங்க பரமா?.” என எங்காவது அழுதுகொண்டிருப்பாரோ?