பன்னீர் செல்வம் மீது டெல்லிக்கு ஒரு அனுதாபமிருந்தது… தமிழக அரசியல் இப்படி…
பன்னீர் செல்வம் மீது டெல்லிக்கு ஒரு அனுதாபமிருந்தது.
தமிழக மக்களிடமும் அவருக்கு பெரும் எதிர்ப்பில்லை, பக்கத்து வீட்டு பெரியவர் போலவே எளிமையாக இருக்கின்றாரே அடடே என எல்லோருக்கும் அவர் ஏற்றுகொள்ள முடிந்தவராகத்தான் இருந்தார்
நல்ல எதிர்காலம் அவருக்கு இருப்பது போலவே சூழல் இருந்தது
ஆனால் வலிய ராஜினாமா என சென்று அந்த அனுதாபத்தை கோபமாக மாற்றி தொலைத்துவிட்டார்
மக்களுக்கும் டெல்லிக்கும் பன்னீர் மீது பெரும் வருத்தம் உண்டான நேரமிது,
பன்னீரின் வரலாற்று பிழை இந்த ராஜினாமா.
பின்னொரு காலத்தில் நிச்சயம் வருத்தபடுவார்
ஈராக்கிலும், லிபியாவிலும் என்னதான் ரணகளமும் ரத்த களறியும் நடந்தாலும் எண்ணெய் வியாபாரம் மட்டும் நிற்காது,
அவர்கள் அரசியல் அப்படி
தமிழகத்தில் என்னதான் உச்சகட்ட அரசியல் குழப்பம் என்றாலும் ஆற்றுமண், கனிம மண், கிரானைட் கல் என அள்ளி விற்பது நிற்கவே நிற்காது
தமிழக அரசியல் இப்படி.
இரவு 11.30 மணிக்கு இறக்கின்றார் ஜெயலலிதா, மறுநாள் மாலை 4 மணிக்கு அடக்கம்
இதற்கு ஒரு ஐஸ்பெட்டி போதாதா, என்பார்மிங் எனப்படும் உடலை பதபடுத்தும் நுட்பம் எதற்கு?
மிக அவசரமாக அடக்கம் செய்யபடும் ஒரு உடலுக்கு எதற்கு லண்டனிலிருந்து வந்து என்பார்மிங்?
இதை பற்றி எல்லாம் நாம் பேச கூடாது..
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 20க்கும் மேற்பட்ட தே.மு.தி.க.வினர் தி.மு.க.வில் இணைந்தனர்
அதிமுகவினை பிளந்து ஆட்களை கொண்டுவருவார்கள் என அவர் எதிர்பார்த்தால், தேமுதிகவில் திருதிருவென நின்றவர்களை அழைத்து வந்திருக்கின்றார்கள்
ஸ்டாலின் மிக கடுப்பான நேரம் இது.
நமக்கே இப்படி என்றால் அவருக்கு எப்படி இருக்கும்?