முப்பாட்டன் பேரன் அல்லவா? தைபூசத்தில் சும்மா இருக்கமாட்டார்

தை பூசத்திற்கு தமிழகத்தில் பொதுவிடுமுறை வேண்டும் என முன்பு அழிச்சாட்டியம் செய்த சீமானை இப்பொழுது காணவில்லை

திராவிட கட்சிகளின் தெலுங்கு கன்னட முதல்வர்கள் தமிழக தைபூசத்தை புறக்கணிக்கின்றனர், தமிழகத்திற்கு தைபூசம் விடுமுறை வேண்டும் என முன்பு அன்னார் சீறினார்

இப்பொழுது அன்னாரை காணவே இல்லை

கொழும்பில் இருந்த சிங்கள படைகளை ஈழதமிழர் நிலங்களில் கொண்டு நிறுத்தியது அவர் அண்ணன் பிரபாகரனின் சாதனை

அப்படியே யாருக்கும் தெரியாத திருமலை நாயக்கரின் தைபூச பிறந்தநாள் விழாவினை, அரசு சார்பு விழாவாக ஜெயலலிதாவினை அறிவிக்க செய்தது அன்னார் சாதனை

வந்தேறி தெலுங்கர் என சீமான் பொங்க, அம்மக்களின் வோட்டுக்காக ஜெயலலிதா திருமலை நாயக்கரின் பிறந்த நாளான தைபூச விழாவினை அரசு விழவாக அங்கீகரித்தார்

ஆக தெலுங்கு மக்களுக்கு சீமான் செய்திருக்க்கும் பெரும் உதவி இது, ஒருவேளை சீமான் வந்தேறி தெலுங்கர்களின் கைகூலியாக இருப்பாரோ? சிலீப்பிங் செல் போல‌

இந்த தைபூசத்தில் அன்னார் பொதுவிடுமுறை எல்லாம் கோரவில்லை, தமிழக அரசே ஆடிகொண்டிருப்பதால் அன்னார் சத்தமே இல்லை.

திருமலை நாயக்கருக்கு தமிழக அரசு அதாவது தமிழன் அரசால் நடத்தபடும் விழா வழக்கபோல நடத்தபடும் என்கின்றார்கள், சீமான் எப்படி பொறுத்துகொண்டிருக்கின்றார் என்பது தெரியவில்லை

ஏதும் கயிறு, சயனைடு குப்பி இல்லாமல் அவரை பார்த்துகொள்வது கட்சிக்காரர்கள் பொறுப்பு.

பைபிளில் வரும் சாம்சன் போல நாயக்கர் மஹால் தூணை பிடுங்கி அதோடு தானும் அழிய அவர் முயற்சிப்பாரோ? இல்லை அப்படி எல்லாம் செய்ய மாட்டார்

ஆனால் முப்பாட்டன் பேரன் அல்லவா? தைபூசத்தில் சும்மா இருக்கமாட்டார்

திருசெந்தூர் பக்கம் வெற்றி வேல் என்பதை ஆங்கிலத்தில் ( Vetri Vel ), V V என சொல்லி தைபூசம் கொண்டாடலாம்