தமிழகத்தில் இன்று பன்னீர் ஒரு விடிவெள்ளி

உடன் பிறப்பே,

அந்த அம்மையார் எத்தனையோ சர்ச்சையான விஷயங்களை செய்திருந்தாலும், பலகளைகளுக்கும், முட்செடிகளுக்கும், விஷ வித்துகளுக்கும் நீர் ஊற்றி வளர்த்திருந்தாலும் அவரை அறியாமல் ஒரு நல்ல பயிறுக்கும் நீர் வார்த்திருக்கின்றார்

அதாவது புல்லுக்கும் புல்லர்களுக்கும் பாய்ந்த நீர், ஒரு நல்ல மனம் படைத்த பன்னீர் செல்வத்திற்கும் பாய்ந்திருக்கின்றது

கிளியோபாட்ராவால் அழிய இருந்த ரோமை சாம்ராஜ்யத்தினை, ஜூலியஸ் சீசரை மயக்கி அவள் ரோமை ராணியாக முடிசூடும் வஞ்சக திட்டத்தை அந்த சென்ட் சபை முறியடித்தது

அதுவும் சீசரின் உயிர்நண்பனும் விசுவாசியுமான புரூட்டஸே குத்தினான்

நீயுமா புரூட்டஸ் என்ற சீசரின் கேள்விக்கு அற்புதமான பதிலை சொன்னான் புரூட்டஸ்

“சீசரே நான் உங்களை விசுவகின்ன்றேன், மதிக்கின்றேன், நேசிக்கின்றேன் ஆனால் உங்களை விட அதிகமாக‌ இந்த ரோமாபுரி மண்ணையும், அதன் சுதந்திரத்தினையும் நேசிக்கின்றேன்

எவ்வளவு சொன்னாலும் அவளிடம் மயங்கிகிடந்த உங்களால் இந்த தேசத்திற்கு வர இருந்த ஆபத்தை தடுக்க எங்களுக்கு வேறுவழி தெரியவில்லை”

அப்படி சீசரை நேசித்தாலும் சீசரை விட அதிகமாக ரோமாபுரியனை நேசித்த அந்த செனட் சபையிரை போல, கீழ்நாட்டு கிளியோபாட்ராவான சசிகலாவிடமிருந்து இந்த தமிழகத்தை காக்க கிளம்பிய பன்னீர் செல்வம் போன்றோரை வாழ்த்துகின்றோம்.

பன்னீர் செல்வம் என்றல்ல, யாரெல்லாம் ஒரு பெரும் கொள்ளை கூட்டத்திடமிருந்து தமிழகத்தை காக்க கிளம்புகின்றார்களோ, அவர்களை எல்லாம் ஆதரித்து தமிழர்களின் ஆதார நம்பிக்கையான நம் கழகம் குரல் கொடுக்கும்.

மிக பெரும் திருப்பத்தை கொடுத்த பன்னீர் அவர்களின் எல்லா முயற்சிகள் வெற்றிபெற அண்ணா நாமத்தில் வாழ்த்துவோம்.

தமிழகத்தில் இன்று பன்னீர் ஒரு விடிவெள்ளி

கிழியட்டும் கிளியோபாட்ராவின் முகமூடி,
ஒழியட்டும் கொள்ளையர் மன்னார்குடி

திரண்டு வருகின்றது தமிழகம், அரண்டு ஓடட்டும் அராஜகம்.

மாட்டை மீட்ட தமிழகம், நாட்டை மீட்காமல் விட்டுவிடுமா உடன்பிறப்பே..?