ரிசார்ட் ஓணருக்கு சங்கு…….

131 எம் எல் ஏக்களும் நலம் : அதிமுக நிர்வாகிகள் அறிவிப்பு

முன்பு இப்படித்தான் ஜெயலலிதாவினை அப்பல்லோவில் அடைத்து வைத்துகொண்டு எல்லோரிடமு நலம்,நலம் என சொல்லிகொண்டே இருந்தார்கள், பின் நலங்கெட புழுதியில் எறிந்தே விட்டார்கள்

ஆக இவர்கள் ஒருவிஷயத்தை நலம் என சொன்னாலே அது சந்தேகம்

இப்பொழுது 131 எம் எல் ஏக்களையும் யாரும் பார்க்கவுமில்லை, அவர்களிடம் தொலைபேசியில் கூட பேசியதாக தகவல் இல்லை.

அவர்கள் ரிசார்ட்டில் எப்படி இருக்கின்றார்கள் என ஒரு தகவலும் இல்லை.

ஏம்மா ரிசார்ட் ஓணர், உங்கள் ரிசார்ட்டிலும் சிசிடிவி கேமரா எல்லாம் இருக்காதே, போன், வைபை என ஒரு வசதியும் இருக்காதே

மின்சாரமாவது உண்டா இல்லையா? அவர் இல்லை என்றுதான் சொல்வார்.

அவர்கள் பற்றிய முழுமையான தகவல்கள் தற்போது மகா அவசியம்.

ஆக இந்த 131 எம் எல் ஏக்களும் அப்பல்லோ போல சர்ச்சையின்றி வெளிவரவோ அல்லது அவர்களை பற்றி உறுதியான தகவல் வரவோ பிரார்த்திப்போம்.

இவர்கள் “யாவரும் நலம்” என சொல்வதில்தான் உலகிற்கே சந்தேகம் கிளம்புகின்றது, தமிழக அப்பல்லோ அனுபவங்கள் அப்படி.

அப்பல்லோ ரெட்டியினை தொடர்ந்து சனி இப்பொழுது ரிசார்ட் ஓணரை பிடித்திருகின்றது

இனி மனிதர் பதில் சொல்லி முடியாமல் ஓடி ஓளியும் பரிதாபகோலம் விரைவில் தெரியவரும், கடுமையாக பிய்த்து எறிந்துவிடுவார்கள்.

ரிசார்ட் ஓணருக்கு சங்கு…………….ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ