ஆதித்யா எனும் டிவி சேனலுக்கு பிறந்தநாளாம்
இன்று ஆதித்யா எனும் டிவி சேனலுக்கு பிறந்தநாளாம், ஆளாளுக்கு வாழ்த்திகொண்டே இருக்கின்றார்கள்
கலைஞரின் பேரன்களில் ஒருவர் பெயர் ஆதித்யா என நினைவு, எப்படியோ அந்த சேனலும் சும்மா அல்ல
தமிழக அரசியல்வாதிகள் சிலநேரம் அமைதி ஆகும் பொழுது, சீமானோ டிரம்போ ஓய்வெடுக்கும்பொழுது நம்மை சிரிக்க வைப்பது ஆதித்த்யா சேனல்தான்
வடிவேலு தமிழக மக்கள் மனதிலிருந்து மறையாமல் காக்கும் பெரும் பொறுப்பினை ஆதித்யா சேனல்தான் செய்துகொண்டிருக்கின்றது
ஆனாலும் வடிவேலுவினை தாண்டி எத்தனையோ காமெடிகள் தமிழ் திரையில் உண்டு
என்.எஸ் கிருஷ்ணன், தங்கவேலு, நாகேஷ், பாலையா, எம்.ஆர் ராதா, சோ (இதாவது கலைஞரை கலாய்த்தால் எனும் வகையில் வரும்) , சுருளி ராஜன் என பெரும் ஜாம்பவன்கள் உண்டு
அவர்களின் காட்சிகளை எல்லாம் ஏன் ஆதித்யா சேனல் ஒளிபரப்பவில்லை என்ற வருத்தம் எப்பொழுதும் உண்டு
இனியாவது அம்மாதிரியான ஜாம்பவான்களின் காட்சிகளை அந்த ஆதித்யா டிவி ஒளிபரபட்டும்
நிச்சயமாக அந்த ஜாம்பவான்களின் நகைசுவைகளை ஒருகாலமும் வடிவேலுவோ, சந்தாணமோ நெருங்க முடியாது
அவர்களின் காமெடிளும் இடம்பெற்றால் ஆதித்யா டிவி இன்னும் காமெடியாக இருக்கும்.
எம்.ஆர் ராதாவின் காமெடிகளை விடவா இன்னொரு காமெடி இருந்துவிட போகின்றது
சோ ராமசாமியினை விடவா இன்னொருவர் கலாய்த்துவிட போகின்றார்?
சுருளிரானை விடவா இன்னொரு காமெடியன் வந்துவிட போகின்றார்?’
இனியாவது ஆதித்த்யா டிவி அவர்கள் காட்சிகளை ஒளிபரப்பட்டும்