ஓரளவு பொறுமை காக்கலாம், அதன் பின் செய்ய வேண்டியதை செய்வோம் : சசிகலா
ஓரளவு பொறுமை காக்கலாம், அதன் பின் செய்ய வேண்டியதை செய்வோம் : சசிகலா
கலைஞர் பாணியில் சொல்வதென்றால் பூனைகுட்டி வெளியே வந்துவிட்டது
அதாவது நாம் சொன்னது போல சாம, பேத, தானம் எல்லாம் முயற்சித்தாகிவிட்டது, இனி இருப்பது தண்ட முறை மட்டும்தான்
ஆனால் வன்முறை நிகழ்த்தி வழிக்குகொண்டுவர இங்கு 131 தமிழர் மட்டும் இல்லை, 7 கோடி தமிழர் உண்டு. இந்த மிரட்டல் எல்லாம் ஒன்றையும் கிழித்தாகிவிட்டது
பெரும் வன்முறை வெடிக்குமாயின் அது ஜனாதிபதி ஆட்சி, தேர்தல் என்றே திரும்பும். அதில் சசிகலா ஒரு வொட்டு பெற்றாலும் பெரும் அதிசயம்
ஆக வன்முறைகளில் இறங்கி சசிகலா கும்பல் கிழிக்க போவது ஒன்றுமில்லை
செய்யவேண்டியதை செய்வோம் என்றால் இரு விஷயங்கள் சாத்தியம்
ஒன்று அரசியலை விட்டு ஓடுவது அல்லது சயனடை கடிப்பது, இது இரண்டையும் தவிர வேறுவாய்ப்பில்லை
மாறாக இதுகாலம் அதிமுகவினை பலாத்காரம் மூலம் அடக்கிவைத்தது போல தமிழகத்தை அடக்கிவைக்க முயல்வாரானால் அது நடக்காது
காரணம் இந்தியா எனும் பெரும் தேசம், தன் ஒரு மாநிலம் குண்டர் கும்பலிடமோ, ஒருவகை பேராசை தீவிரவாத பிடியிலோ இருப்பதை ஒருகாலமும் அனுமதிக்காது
தமிழ்நாடு இந்தியாவில் இருப்பதால் நமக்கெல்லாம் நம்பிக்கை இருக்கின்றது, இதுவே தனிநாடென்றால் என்னாகும்?
முன்னாள் உகாண்டா அதிபர் இடி அமீன் நினைவுக்கு வந்து தொலைக்கின்றார்.
செய்ய வேண்டியதை செய்வோம் என சசிகலா மிரட்டுவதை எல்லாம் மிக அசால்டாக எதிர்கொள்ள எப்பொழுதோ தயாராகிவிட்டது தமிழகம்.
அவர்கள் செய்ய வேண்டியதை செய்யட்டும், அதன் பின் தமிழகமும் செய்யவேண்டியதை செய்யும்