ஜெயா சமாதியில் சசிகலா காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கலாம்
உச்சகட்டத்தினை அடைகின்றது தமிழக சிக்கல், பொறுமைக்கும் எல்லை உண்டு, வேறு வழியில் போராடுவோம் என்றெல்லாம் நேற்று மிரட்டினார் சசிகலா
ஜெயா சமாதியில் காலவரையற்ற உண்ணாவிரதம் அவர் இருக்கலாம் என சில தகவல்கள் சொல்கின்றன
தமிழகத்தில் முதலில் செய்யவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை ஜெயா சமாதி, போயஸ் கார்டன், அதிமுக அலுவலகம் இம்மூன்றையும் சீல் வைத்து யாரும் நுழையாதவாறு தடுப்பது
இவைகளை மூடினாலே பெரும் குழப்பம் தானாக தீரும்
சசிகலா உண்ணாவிரதம் இருந்தால், அதனை அனுமதித்தால் அது நிச்சயம் பெரும் வன்முறைக்கு தொடக்க புள்ளியாக இருக்கும் என்பதால், அப்படி அவர் முயற்சிக்கும்பொழுது அவரை அலேக்காக தூக்கி அப்பல்லோவில் சேர்த்துவிடுவது நல்லது
சசிகலா மீதான மக்கள் வெறுப்பு அவரை ஆதரிக்கும் எம் எல் ஏக்கள் மீதும், கட்சி நிர்வாகிகள் மீதும் திரும்பிகொண்டிருக்கும் நேரமிது, சில சுதாரிக்கின்றார்கள்.
சு.சாமி இந்த நேரத்திலும் காமெடிகளை தொடங்கிவிட்டார், சசிகலா கும்பல் மீது முதன் முதலிலும் வழக்குகள் பதிந்தது அவர்தான், சுவாமியின் நண்பர் சந்திரலேகா மீது ஆசிட் ஊற்றபட்டதும் அதிமுகவினரால்தான்
பின்னர் ஏன் சு.சாமி இப்படி சசிகலாவினை ஆதரிப்பதாக கிளம்பிவிட்டார்?
ஒன்றுமில்லை, மொத்தமாக சசிகலாவினை பழிவாங்க களமிறங்கிவிட்டார், வேண்டுமானால் பாருங்கள் அவர் காட்டும் வழியில் சசிகலாவின் பெயர் இன்னமும் கெட்டு அவர் படுகுழியில் விழுவது நிச்சயம்
வேறுவழியில் போராடுவோம் என சசி மிரட்டிய நொடியில், வரும் செவ்வாய்கிழமை தீர்ப்பு என்றொரு தகவல் கசியவிடபட்டிருக்கின்றது
தீர்ப்பு எப்படி ஆயினும் அது சசிகலாவிற்கு நன்மையினை கொடுக்காது, காரணம் மக்கள் வெறுப்புக்கு பயந்த எம் எல் ஏக்கள் கூட்டம் பன்னீர் பின்னால் செல்ல தொடங்கியாயிற்று
இனி சசிகலா முதல்வரானாலும் 2 மாதம் கூட தாங்காது.
பன்னீர் பெரும் தலைவராக உருவாக தொடங்கிவிட்டார், இது இனி என்னென்ன பிரளயங்களை ஏற்படுத்தும் என இனிதான் தெரியும்
பன்னீருக்கு சசிகலா போலவே ஸ்டாலினும் கொஞ்சம் அஞ்சத்தான் செய்கின்றார், காரணம் இது அரசியல், பன்னீர் நல்ல முதல்வர் என பெயரெடுத்துவிட்டால் ஸ்டாலினுக்கு ஆபத்து.
அதனால் தேர்தல் வந்துவிடவேண்டும் என்பது அவரின் வேண்டுதல் கூட, வந்துவிட்டால் தான் தனிமரம் என்பதால் அதனை தவிர்க்க நினைக்கின்றது சசிகலா தரப்பு
பன்னீருக்கோ என்ன ஆனாலும் தனக்கு லாபம் எனும் நிலை
இக்குழப்பம் எப்படி முடியபோகின்றது என்பதில்தான் பெரும் சுவாரஸ்யம் இருக்கின்றது
பார்க்கலாம்…
இப்பொழுது சசிகலா எப்படி “வேறு விதமாக” போராட போகின்றார் என தெரியவேண்டிய நிலை.
எதற்கும் ஜெயா சமாதிக்கு 144 போடுவது தமிழகத்திற்கு நல்லது