கூவத்தூருக்கு சசிகலா காவடி எடுத்து செல்கின்றார்…
கூவத்தூருக்கு சசிகலா காவடி எடுத்து செல்கின்றார், பன்னீர் செல்வம் வீட்டில் பக்தர்கள் பால்குடம் எடுக்க தொடங்கியாயிற்று
வீரமணி, நெடுமாறன் போன்ற பழமரம் கண்ட பறவைகள் சுற்றி சுற்றி கத்துகின்றன
சந்தடி சாக்கில் சு.சாமி வேறு குட்டையினை குழப்பமுடியுமா? என சகுனி வேலை பார்க்க தொடங்கிவிட்டார்
நடிக அரசியல்வாதிகள் ஆளாளுக்கு காமெடியில் இறங்கிவிட்டனர்
ஆகும் வரை ஆகட்டும், எக்காரணம் கொண்டும் அசைந்துவிட கூடாது ஆளுநர் கடும் அமைதியில் விரதம் இருக்கின்றார்
ரிசார்ட் எம் எல் ஏக்கள் என்ன ஆனார்கள் என தெரியவே இல்லை, ஆனால் எமக்கு ஆதரவு என சசிகலா சொல்லிகொண்டே இருக்கின்றார்.
மொத்தத்தில் பெரும் கோமாளி கூத்துக்கள் எல்லாம் அரங்கேறிகொண்டிருக்கின்றன
இன்னும் என்னென்ன கூத்துக்களை தமிழகம் காணபோகின்றதோ தெரியாது
இந்த தமிழக அரசியல்வாதிகளை பற்றி முதன் முதலில் சரியாக சொன்னவர் யார் தெரியுமா?
இலங்கை முன்னாள் தளபதி சரத்பொன்சேகா முன்பொரு இடத்தில் சொன்னார் இப்படியாக
“தமிழக அரசியல்வாதிகளில் பெரும்பாலோனார் கோமாளிகள், அவர்கள் கூத்து அப்படித்தான் இருக்கின்றது”
எவ்வளவு அழகாக தமிழ்நாட்டினை ஒரு சிங்களன் கணித்திருக்கின்றான் பார்த்தீர்களா?
இப்பொழுது ஆம், இங்கு நிறைய கோமாளிகள் உண்டு என தமிழகம் பொன்சேகாவின் தியரியினை நிரூபித்து கொண்டிருக்கின்றது